இடுகைகள்
பெருமைமிக்க பேராதனைப் பல்கலைக்கழகத்தில்….
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
ஐந்தாவது நாள் இரண்டு பயணங்களிலும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இரண்டிரண்டு சொற்பொழிவுகள் வழங்குவதற்காக அழைக்கப்பட்டேன். தமிழ்நாட்டிலும் இந்தியாவிலிருக்கும் பல்வேறு மாநிலத் தமிழ்த் துறைகளிலும் எனது விருப்பத்துறைகளாக இலக்கியவியல், அரங்கியல், ஊடகவியல், பண்பாட்டியல் சார்ந்து பல உரைகளை வழங்கியிருந்தாலும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய உரைகள் சிறப்பான உரைகளென நினைத்துக் கொள்கிறேன். அந்த வாய்ப்புக் கிடைத்ததற்காக எப்போதும் மகிழ்ச்சி அடைகிறவன் நான்.
புகையிரத (ரயில்) பயணத்தில்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
இலங்கை போன்ற குட்டி நாட்டில் நீண்ட தூரப் பயணங்களை இருப்பூர்தி வழியாகத் திட்டமிடலாம். தூரப் பயணங்களுக்குப் பேருந்துகளே போதுமானது; ஏற்றது. 2016 இல் சென்ற முதல் இலங்கைப் பயணத்தில் ரயிலைப் பார்க்கவே இல்லை. போர்க்காலம் முடிந்து 7 ஆண்டுகள் ஆன நிலையிலும் தமிழர் பகுதிக்குள் செல்லும் பாதைகள் இன்னும் செப்பனிடப்படவில்லை என்றும், ஓடும் ரயில்களும் பழைய ரயில்கள் என்றும் சொன்னதால் அந்தத்தடவை ரயில் பயணம் பற்றி யோசிக்கவே இல்லை.
நகர்வலம் : அடுக்குமாடிகளும் ராஜபாட்டைகளும்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
உலகமயப் பொருளாதாரத்தையும் அதுசார்ந்த வர்த்தகத்தையும் உள்வாங்கிக் கொண்ட நிலையில் எல்லா நாட்டின் தலைநகரங்களும் மாற்றத்தைப் பெருமளவு சந்தித்துக் கொண்டிருக்கின்றன. சில நாடுகளில் அலுவல் ரீதியான தலைநகர் ஒன்றாகவும் வணிகத் தலைநகர் இன்னொன்றாகவும் பண்பாட்டுத்தலைநகர் மற்றொன்றாகவும் இருக்கும். பன்னெடுங்கால வரலாறு கொண்ட நாடுகளில் ஒவ்வொரு நகரங்களுக்கும் ஒவ்வொரு சிறப்புகள் இருக்கவே செய்யும்.
புதிய படிப்புகளை நோக்கி ஒரு நிறுவனம்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கொழும்புவில் இரண்டாவது நாள் இலங்கைக்கு வந்த முதல் பயணத்திற்கும் இரண்டாவது பயணத்திற்கும் பெரிய அளவு வேறுபாடு உண்டு. முதல் பயணம் முழுவதும் கல்விப்புல ஏற்பாட்டுப் பயணம். ஆனால் இரண்டாவது பயணத்தில் எல்லா ஏற்பாடுகளும் சொந்த ஏற்பாடு போல. அதனைச் செய்து தந்தவர்கள் நண்பர்களே. கொழும்புக்கான பொறுப்பை எடுத்துக் கொண்டவர் ஷாமிலா முஸ்டீன்.
நுழைவும் அலைவும் : சில கவனக் குறிப்புகள்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கொழும்புவில் முதல் நாள் இலங்கை இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடு. அதனால் இந்தியர்களுக்கு நுழைவு அனுமதி வழங்குவதில் கெடுபிடிகளைக் குறைத்துக் கொண்டுவிட்டது. இலங்கைக்கான விமானத்தில் ஏறும் விமான நிலையத்தில் இந்திய இருப்பிடச் சான்றுகளைக் காட்டி நுழைவு அனுமதிபெற்றுக் கொள்ளலாம் ( On arrival Visa) என்ற நிலை உருவான பின்பு இலங்கைச் சுற்றுலா எளிதாக மாறிவிட்டது என்று பலரும் சொன்னார்கள். அத்தோடு, கடந்த ஆண்டு ஈஸ்டர் நாளில் கொழும்பில் வெடித்த தொடர் வெடிகுண்டுகளுக்குப் பின் வெளிநாட்டார் வருகை குறைந்ததைச் சரிசெய்ய , இலங்கை அரசாங்கம் உள் நுழைவு அனுமதிகளை எளிதாக்கியிருப்பதாக வும் சொல்லப்பட்டது. சுற்றுலாப் பொருளாதாரத்தை நம்பும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் இலங்கைக்குள் அயல்நாட்டார் வருவதைத் தடுக்கும் விதிகள் பொருளாதாரத்தைப் பாதிக்கும் ; நம்பிக்கையைத் தகர்த்துவிடும் என்பதால் உள்ளே அனுமதிப்பதில் கெடுபிடிகளைக் காட்டுவதில்லை