எழுத்தாளர் கிராமங்களில் கனவு இல்லம்
கடந்த ஆண்டு நெல்லைப் புத்தகத்திருவிழா 2020, பிப்பிரவரி 1 தொடங்கிப் பத்து நாட்கள் நடந்தது. இந்தத் திருவிழாவின் சிறப்பு நிகழ்வாக ஒவ்வொருநாளும் பிரிக்கப்படாத திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சாகித்திய அகாடெமி எழுத்தாளர்கள் மரியாதை செய்யப்பட்டார்கள். இப்போது உயிருடன் இல்லை என்றாலும் அவர்களின் குடும்பத்தினரை அழைத்து மேடையில் அமரவைத்து, அவர்களைப் பற்றிய சுருக்கமான வரலாற்றைக் காணொளிக் காட்சியாக ஒளிபரப்பிய பின் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷில்பா பிரபாகர் சதீஷ் மேடைக்கு வந்து புத்தாடை அளித்து, நினைவுப்பரிசு வழங்கிக் கைகுலுக்கினார். ஒவ்வொருநாளும் இது நடந்தது. அந்த ஆட்சித் தலைவர் தான் இப்போது முதல்வரின் உங்கள் தொகுதி; உங்கள் கோரிக்கைக்கான சிறப்பு அதிகாரி