இடுகைகள்

நேரடியாகப் பேச நினைக்கும் பெண்குரல்

படம்
கவிதையின் மொழிதல் ஒருவழிப்பாதையாக இருக்கும்போது உணர்ச்சி வெளிப்பாடாக மாறி விடும். கவிதைக்குள் உருவாக்கப்படும் சொல்லி ( Narrator) தன்னை - தனது தன்னிலையை- உருவாக்குவதற்காகக் குறைவான சொற்களைப் பயன்படுத்திவிட்டுக் கேட்கும் இடத்தில் இருப்பவர்களை (Receivers) -முறையீட்டைக் கவனிக்கவேண்டியவர்களைக் குறித்துப் பலவிதமான சொற்களை உண்டாக்குவது வெவ்வேறு உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள். உண்டாக்கப்பட்ட சொற்களின் வழியாக அவர்களுக்கும் சொல்லிக்குமிடையே இருக்கும் உறவுநிலைகளை - உடன்பாட்டு நிலையாகவும் எதிர்மறை நிலையாகவும் பேசுவதின் வழியாகக் கவிதையின் இயக்கத்தை அல்லது செயல்பாட்டை உருவாக்குவது என்பது கவிதையியலின் தொடக்கநிலைக் கூறு.

தற்காலிகத்தைக் கொண்டாடுதல்

படம்
இதுதான் கவிதையின் வடிவம்; நாடகத்தின் கட்டமைப்பு இப்படித்தான் இருக்கவேண்டும்; சிறுகதையின் தொடக்கமும் முடிவும் இப்படித்தான் இருக்கவேண்டுமென வலியுறுத்தும் நபர்களைப் பின்னுக்குத்தள்ளி எழுத்தும் பனுவல்களும் கடந்துபோய்க்கொண்டே இருக்கின்றன. கலை இலக்கியங்களில் மட்டுமல்ல; எல்லாவகையான செயல்பாடுகளிலும் இயங்குநிலையிலும் வடிவச்சீர்மையை வலியுறுத்தும் போக்கு முடிந்துவிட்டது. நெகிழ்ச்சியும் ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாறுவதாகவும், மாறாமலேயே தோன்றுவதாகவும் இருக்கும் வடிவங்களே கொண்டாடப்படும் வடிவங்களாக நம்முன்னே அலைகின்றன.

எழுதப்படுவது நிகழ்காலம் அல்ல; கடந்த காலம்

படம்
கடந்த காலத்தை எழுதிக்காட்டுதல் என்பதைக் கடந்த காலத்திற்குள் மறுபயணம் செய்வது என அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். நிகழ்த்தும் காலத்தில் வாழும் பார்வையாளர்களை மனதில் கொண்டு அவர்களை நோக்கிப் பேசும் நாடகக்கலைக்கு மட்டுமே உரியதாக நான் நினைக்கவில்லை. உலக மொழிகள் எல்லாவற்றிலும் பொது வடிவங்களாகத் திகழும் கதை, நாடகம், கவிதை, என்ற மூன்றோடும் தொடர்புடையதாகவே நினைக்கிறேன். இந்தப் பேச்சை அரங்கக் கலையை முன்வைத்து இலக்கியக்கலையைப் பற்றிய பேச்சாகவே நினைக்கிறேன். நிகழ்த்துகிறேன்

நான் வாழும் நகரம்:

பழைமையையும், மாற்றங்களையும் திருநெல்வேலியாகவும் பாளையங்கோட்டையாகவும் பிரித்துக்கோடு போடுவது தாமிரபரணி. ஒருவிதத்தில் வற்றாத நதி. எப்போதும் நீர் நகர்ந்து கொண்டேயிருக்கும்.

கீழடி: வரலாறும் போராட்டமும்

படம்
கீழடித் தொல்லியல் ஆய்வில் தொய்வு ஏற்படுத்தப்படுகிறது என்ற ஐயம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஐயத்தை உறுதியாக நம்பியொரு போராட்டத்தை முன்னெடுக்கிறது இடதுசாரிக் கட்சியின் பண்பாட்டு அமைப்பான த.மு.எ.க.சங்கம். போராட்டத்தின் வழிமுறையாக “ பிடிமண் எடுப்பு” என்ற மரபுசார் சடங்கொன்றைக் கைக்கொண்டிருக்கிறது. கைக்கொண்ட சடங்கின் அடிப்படைத்தன்மையும், அதில் இணையக்கூடிய வெகுமக்களின் மனநிலையும் எத்தகையன என்பதை இப்போது சரியாகக் கணிக்கமுடியாது.

நிகழ்கால அரசியலை நிகழ்வுகளாக்குதல்: ப்ரசன்னா ராமஸ்வாமியின் அரங்கியல் முறைமைகள்

 2017, ஜூன் , 19 அன்று பெங்களூருவில் நான் பார்த்த கன்னட நாடகம் “ வர்த்தமானதெ சரிதே ”. அந்நாடகத்திற்கு நான் அழைக்கப்பெற்ற சிறப்புப்பார்வையாளன் . நான் மட்டுமல்ல ; கர்நாடகாவிலிருந்து இருவர் , தெலங்கானாவிலிருந்து , டெல்லியிலிருந்து தலா ஒருவர் என இன்னும் ஐந்து சிறப்பு அழைப்பாளர்கள் இருந்தனர் ; பொதுப்பார்வையாளர்களும் இருந்தனர் . அனைவரையும் இழுத்துவைத்துப் பார்த்து ரசிக்கச் செய்த நாடக நிகழ்வு அது .

தொடரும் கதைவெளி மனிதர்கள்

படம்
இப்படியான சிறுகதைத் தொகுதியை ஒரே மூச்சில் வாசித்துவிட முடியாது. ஒருவர் எழுதிய 14 கதைகளென்றால் தொடர்ச்சியாக வாசித்துக்கொண்டே போகலாம். இரண்டு அல்லது மூன்றுநாளில் முடிந்துபோகும். அகநாழிகை பதிப்பக வெளியீடாக, ‘பொன்.வாசுதேவன்’ தேர்வுசெய்து தொகுத்துள்ள “விளிம்புக்கு அப்பால்” சிறுகதைத் தொகுதியில் 14 பேரின் 14 கதைகள் இருக்கின்றன.