இடுகைகள்

மூடுதல் அல்ல; திறப்பு

படம்
கனடாவின் அரசியல் தலைநகர் ஒட்டாவா. அங்கே பார்க்கவேண்டியன என்று பட்டியல் ஒன்றைத் தயாரித்தபோது பட்டியலில் நாடாளுமன்றம் முதலில் இருந்தது. பிறகு நதியோரத்துப் பூங்காவும் ராணுவத்தின்காட்சிக்கூடமும் விலங்குப் பண்ணையும் இருந்தன. அப்புறம் வழக்கம்போல கடைகள் நிரம்பிய நகர்மையம். விலங்குகளையும்,   ஆயுதங்களையும்   பார்ப்பதற்குப் பதிலாகப் பக்கத்திலிருக்கும் கிராமங்களைப் பார்க்கும் விதமாக நகரத்தைவிட்டு விலகி எனது கருத்தைச் சொன்னேன். அதன்படி ஒட்டாவா சுற்றல் திட்டம் உருவானது. முதல் இடம் நாடாளுமன்றம். அடுத்து பூங்கா, பிறகு ஆற்றோர நடைப் பயணம். அதன் பிறகு 50 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த மலையருவியும் அதன் வழியான கிராமங்களும் இதுதான் வரிசை.

ஆயிரம் தீவுகளுக்குள் ஒரு நீர்ப்பயணம்

படம்
யோர்க் பல்கலைக்கழகத்தில் நடந்த மாநாட்டோடு துறைசார்ந்த ஒரு நிகழ்வு முடிந்தது. இனிச் சுற்றுலா தான். பாஸ்டனிலிருந்து கிளம்பும்போதே கனடாச் சுற்றுலாத் திட்டம் தயாராக இருந்தது. அதை வட்டச்சுற்று எனச் சொல்ல முடியாது. நீண்ட செவ்வகமென்று சொல்லலாம்.  வணிகத் தலைநகரமான டொறொண்டோவுக்குப் பிறகு அரசியல் தலைநகரமான ஒட்டாவா. அதன் பிறகு பிரெஞ்சு அடையாளங்களோடு இருக்கும் மாண்ட்ரியாலும் க்யூபெக்கும். இடையில் வரும் ஏதாவது இடங்களைப் பார்ப்பதுதான் திட்டம்.

டொறொண்டோவில் மூன்று நாட்கள்

படம்
மே. 6 முதல் 8 வரை மூன்று நாட்கள் டொறொண்டோவில் தங்குவது என்பது திட்டம். மூன்று நாளில் இரண்டு நாட்கள் எனது இருப்பு கருத்தரங்கு நடக்கும் யோர்க் பல்கலைக்கழகம். குடும்பத்தார் டொறொண்டோவைச் சுற்றிக் கொண்டிருப்பார்கள். இந்தத் திட்டமிடலெல்லாம் மகன் பொறுப்பு. அவர்களுக்கு முழுமையான சுற்றுலா; எனக்கோ பாதிதான் சுற்றுலா. மீதிப்பாதி இலக்கியச் சந்திப்புகள் சார்ந்த கல்விச்சுற்றுலா.

“தெள்ளத்தெளிவாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்”

படம்
சாட்சியமாய்த் தங்குதல் புலப்படாத வன்கொடுமைகள், பேசமுடியாக் குற்றங்கள் -   மே, 6, 7 தேதிகளில் நடந்த அக்கருத்தரங்கின் தலைப்பு. கருத்தரங்கு நடந்த இடம் கனடாவின் யோர்க் பல்கலைக்கழகத்தில். இந்தக் கருத்தரங்கம், தமிழியல் ஆய்வுகள் என்னும் பொருண்மையில் டொறொண்டோவில் நடக்கும் 11 வது கருத்தரங்கம். 2006 தொடங்கி நடக்கும் தமிழியல் ஆய்வுகள் என்னும் இருமொழிக்கருத்தரங்கின் ஏற்பாட்டில் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் கவிஞர் சேரன்.

நயாகரா நீர்வீழ்ச்சிக்கு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும்

படம்
வேறுவழியில்லை; சாளரங்களைத் திறந்தே   ஆகவேண்டும்.   நான் கடல், நான் ஆறு, நான் நதி, நான் ஓடை,   நான் அருவியெனத் தட்டும்போது இழுத்துமூடி இருப்பது எப்படி? மழை. இது மழையைத் தவிர வேறென்ன?

அது ஒரு தத்துவப்போராட்டம்

படம்
உலகமயத்திற்குப் பின் தமிழக இளைஞர்களும் யுவதிகளும் இல்லாத பெருநகரங்கள் இல்லை என்னுமளவிற்குச் சின்னச்சின்ன நாடுகளிலும் வாழ்கிறார்கள் தமிழர்கள். அதிலும் மனிதவளத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும், கனடாவிலும் ஒவ்வொரு பெருநகரத்திலும் குடும்பத்தோடு வாழும் இந்தியர்களைத் தேடி அலையவேண்டியதில்லை. வாரக்கடைசியைக் கழிப்பதற்கான இடங்களில் அரைமைல் தூரம் நடந்தால் ஒரு இந்தியக் குடும்பத்தைப் பார்க்கலாம். ஒரு மணிநேரம் செலவிட்டால் ஒரு தமிழ்ப் பேச்சைக் கேட்கலாம்.