இடுகைகள்

ஆக்கம் - தழுவலாக்கம்

·          ஆக்கம் - தழுவலாக்கம் என்றால் என்ன சார். ·          நாடகத்தில் தழுவலாக்கம் செய்யும்போது கவனிக்க வேண்டிய விடயம் என்னென்ன? ஆக்கம் என்பது புதிதாக உருவாக்குவது. புதிதாக உருவாக்குவதற்கு அதன் உட்கிடைப்பொருட்கள் தேவை.   அதைக் கண்டுபிடித்து இணைத்து உருவாக்க வேண்டும். உருவாக்கிய ஆக்கம் பயன்பட வேண்டும்.

போரும் போரின் நிமித்தமும் : அனுபவங்களைச் சொல்லுதல்

எதுவரை இணைய இதழில் (http://eathuvarai.net/?p=4796) வந்துள்ள வைகறைக் கனவு  கதையை எழுதிய தமிழினி ஜெயக்குமாரன் என்ற பெயரை இணையத்தில் தான் பார்த்திருக்கிறேன். தமிழின் அச்சிதழ்களிலோ, தொகுப்புகளிலோ அவர் எழுதிய கதைகள் எதையும் வாசித்ததில்லை. கதையை வாசித்து முடித்தபின் கதை எனக்குள் எழுப்பிய வினாக்கள் பலவிதமானவை.

நம்பிக்கைகள் சிதையத் தொடங்கும் கணங்கள்

படம்

வாழ்தலின்விருப்பந்தேங்கிய சாவின் நெருக்கம்: ராகவனின் இரண்டு கதைகள்

படம்
நடந்ததை எழுதுவது நடப்பியல் வாதமா? இயற்பண்பியல்வாதமா? என்ற விவாதங்கள் இன்னும் தொடர்கின்றன. தமிழில் நடப்பியல்வாதத்திற்குப் பலரை எடுத்துக்காட்ட முடியும். ஆனால் இயற்பண்பியல்வாதத்திற்கு ஒன்றிரண்டு பேரைத் தான் சொல்லமுடியும். நகரம் சார்ந்த எழுத்தில் அசோகமித்திரனின் கதைகளைச் சொல்லலாமென்றால், கிராமம்சார்ந்து பூமணியின் தொடக்ககாலச் சிறுகதைகளை எடுத்துக்காட்டலாம். அவர்களிருவரும் விவரிக்கும் விவரிப்புமுறையில் பிசகின்றி ஒவ்வொன்றையும் அடுக்கிக் கொண்டே போவார்கள்.

ஏற்கத்தக்க தொனியல்ல

படம்
இந்தியாவில் வாழும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கணமும் உணரும் கருத்தாகவும் நிகழ்வாகவும் இருக்கும் சொல் சாதி. பேசத்தக்க பொருளாக இருக்கும் சாதியின் குரூரவடிவமான ’தீண்டாமை’ பேச வேண்டிய பொருள் மட்டுமல்ல; பேசித் தீர்க்கவேண்டிய ஒன்றும்கூட. அனைத்துத் தளத்திலும் விசாரணைகளையும் விவாதங்களையும் கோரும் இச்சொற்களைப் பேசாமல் அறிவுத் துறையினர் தப்பித்துவிட முடியாது. தீர்த்துக் கட்டுவதற்காகப் பேசப்படவேண்டிய தீண்டாமையையும் சாதியையும் பற்றிப்பேசும் சிறுநூலொன்றை மணற்கேணி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இமையத்தின் வற்றாத ஊற்று: கதையாக மாறாத உரைவீச்சு

இந்தமாத (ஜூலை, 2015) உயிர்மையில் இமையம் எழுதியுள்ள சிறுகதை வற்றாத ஊற்று வெளியாகியுள்ளது. கதையில் இடம்பெறும் பாத்திரங்கள் ஆறு. இந்த ஆறுபேரில் இரண்டு பேருக்கு மட்டுமே பெயருண்டு. கதிரவன், பூங்குழலி . புதிதாகத் தொடங்கப்பெற்ற செய்தி அலைவரிசைக்கு வட்டாரச் செய்தியாளனாகத் தேர்வு செய்யப்பெற்று முதலாளியைச் சந்திக்க இருப்பவன். அவனது இடதுபக்கம் அமர்ந்திருந்த பெண்ணின் பெயர் பூங்குழலி. வலது பக்கம் அதே போல் உட்கார்ந்திருந்தவனுக்குப் பெயரில்லை. கதிரவனின் பக்கத்தில் இல்லாமல் 20 பேருக்கு மேல் செய்தியாளர்கள், டெக்னீஷியன்கள், காமிராக்காரர்கள் என நிரம்பிய ஒரு விசாலமான குளிரூட்டப்பட்ட அறையே (கான்பரன்ஸ் ஹால் ) கதைவெளி. கதையை நகர்த்துவதற்காக இமையம்மூன்று பேரை உள்ளே அனுமதிக்கிறார். ஒருவர் அலைவரிசையின் முதலாளி. இன்னொருவர் மானேஜர், மற்றொருவர் செய்திப்பிரிவு ஆசிரியர். இவர்களுக்கும் பெயரில்லை. அலைவரிசைக்கு மட்டும் பெயருண்டு அதன் பெயர் விடிவெள்ளி.