இடுகைகள்

காண்டாமிருகமென்னும் அபத்த நாடக நிகழ்வெளி

படம்
சில பனுவல்கள் வாசிக்கும் போது புரியாமல் போய்விடும். ஆனால் அதன் அர்த்தம் விளங்கும்படியான நிகழ்வொன்றை நாம் சந்தித்து விட்டால் அந்தப் படைப்பு புரியத்தொடங்கி விடும். அரசியல் அதிகாரம் குறித்த விமரிசனத்திற்கு அபத்த நாடக வகையைத் திறமையாகப் பயன்படுத்திய அயனெஸ்கோவின் காண்டாமிருகம் (RHINOCEROS) அப்படிப் பட்ட நாடகம் என்பது எனது சொந்த அனுபவம். முதல் வாசிப்பில் கடைசி வரை காண்டாமிருகம் வரவே இல்லையே எனக் கேட்டுப் பதில் தெரியாமல் மூடி வைத்து விட்டு மறந்திருந்தேன். ஆனால் அந்தப் பிரதி வெவ்வேறு நிகழ்வுகள் நடக்கும் போது ஒவ்வொரு விதமாக அர்த்தம் தரும் பிரதியாக இருந்திருக்கிறது.  ஒரு நிகழ்வு நடந்த போது கிடைத்த அர்த்தத்தைச் சொல்வதற்கு முன்னால், முதல் தடவை அதன் அர்த்தத்தைப் புரிய வைத்த நிகழ்வைப் பார்க்கலாம். அப்போது நான் பாண்டிச்சேரியில் நாடகப்பள்ளியில் பணியாற்றினேன். முக்கியமான நாடகப் பிரதிகளைப் படிப்பதைக் கடமையாகவும் விருப்பமாகவும் செய்து கொண்டிருந்த நேரம். அயனெஸ்கோவின் காண்டாமிருகம் நாடகத்தை வாசித்து ஒரு வாரம் இருக்கும். நாங்கள் வசித்த புறநகரின் நலச்சங்கம் ஏற்பாடு செய்த ஒருநாள் சுற்றுலாவில் நானும் எனது க

எனது இந்தியா.. எந்த இந்தியா?

இரண்டும் நடந்தது ஒரே ஊரில் அல்ல ; ஒரே நாளிலும் அல்ல ; ஆனால் ஒரே மாதிரியான நிகழ்ச்சிகள். முந்திய நிகழ்வு சிங்காரச் சென்னையில் ; சென்ற வருடம் 2009 கிறிஸ்துமஸ் விடுமுறையில். இரண்டாவது நிகழ்வு மாநகர் மதுரையில் போனவாரம் ; 2010டிசம்பர்1.

வலது கையும் இடது காதும்

தன்னெழுச்சியான போராட்டங்கள் எவை ? மறைமுகத்தூண்டுதல் காரணமாக உண்டாகும் போராட்டங்கள் எவை என்றெல்லாம் இப்போது கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. இதைப் போலவே நிர்வாகங்களை உண்மையிலேயே எதிர்க்கும் வழக்குகள் எவை ? நிர்வாகமே தூண்டி விட்டுப் போடச் செய்யும் வழக்குகள் எவை ?

திருப்பிக் கொடு

வட்டங்களும் சிலுவைகளும் -பத்துக் குறுநாடகங்களின் தொகுப்பு என்னும் எனது நூலில் உள்ள இந்நாடகம் நமது பள்ளிக் கல்வியின் மீதான கோபத்தை  அங்கதமாகச் சொல்ல முயன்ற நாடகம். ஜெர்மனியில் எழுதப்பட்ட இந்நாடகத்தை நான் தழுவல் செய்த ஆண்டு 1996 எனவே அந்தக் காலம் சார்ந்த நிகழ்வுகளும் எண்ணங்களும் இடம் பெற்றுள்ளது .  நான் செயல் பட்ட கூட்டுக்குரல் நாடகக் குழுவிற்காக இந்நாடகத்தைத் தழுவி எழுதினேன் என்றாலும், அதன் பின் தமிழ்நாட்டில் கல்வி மீது அக்கறை கொண்ட பல நாடகக் குழுவினரும் மேடையேற்றிக் கொண்டே இருக்கிறார்கள். எனது மாணவரும் திரைப்பட நடிகருமான சண்முகராஜாவின் நிகழ் நாடகக் குழு முந்நூறு மேடைகளில் நிகழ்த்தியுள்ளது

கிரிஷ் கர்னாட் - இந்திய நாடகங்களின் பரிமாணங்களை விரிவு படுத்தியவர்

படம்
மொழிபெயர்ப்புகள் மூலமாகவே தமிழ்நாட்டில் பரவலான அறிமுகம் பெற்றுள்ள இந்திய நாடகாசிரியர்களில் பாதல்சர்க்காரும் கிரிஷ் கர்னாடும் முக்கியமானவர்கள். மேடையேற்றப் படுவதற்காகவே பாதல்சர்க்கார் மொழிபெயர்க்கப்பட்டார். மொழிபெயர்க்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன பின்பும் கர்னாடின் நாடகங்கள் மேடையேற்றம் பெற்றதில்லை. துக்ளக் , கிரியாவின் வெளியீடாக வந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன. அவரது சமீபத்திய நாடகங்களான நாக மண்டலமும் தலதண்டாவும் (பலிபீடம்) பாவண்ணனின் மொழி பெயர்ப்பில் ' வெளி ' யின் வெளியீடாக வெளிவந்தும்  மேடையேற்றத்திற்கு காத்து நிற்கின்றன.   கர்னாட் அவரது  நண்பர் கீர்த்திநாத் குர்த்கோடி அவர்களுக்கு அளித்த பேட்டியின் ஆங்கில வடிவத்திலிருந்து தமிழில் :   அ.ராமசாமி

இனாம்கள் : தருவதும் பெறுவதும்

இந்த வருடத்துத் தீபாவளியை நாம் ஒவ்வொருவரும் எப்படிக் கொண்டாடி முடித்தோம் என்பதை நினைத்துப் பார்த்துக் கொள்ளலாம். நிச்சயமாகச் சொல்ல முடியும் எல்லோரும் ஒரே மாதிரியாகக் கொண்டாடி இருக்க மாட்டோம். இந்தியாவில் பலர் கொண்டாடாத பண்டிகையாகக் கூடத் தீபாவளி இருந்திருக்க வாய்ப்புண்டு. தீபாவளி என்றில்லை, ரம்ஜான், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என எல்லாப் பண்டிகைகளையும் எல்லோரும் கொண்டாடுவதும் இல்லை.கொண்டாடினாலும் ஒரேமாதிரியாகக் கொண்டாடுவதில்லை; கொண்டாடுவதும் இயலாது.

• இந்திரா பார்த்தசாரதியோடு ஒரு நேர்காணல்:

படம்
இப்போதும் ஓர் இளைஞனின் துடிப்புடன் எழுதுக் கொண்டிருக்கும் இ.பா ., சமகாலத்தமிழ் இலக்கிய வகைகள் எல்லாவற்றிலும் தன்னுடைய அடையாளத்தைப் பதிக்கும் வகையில் படைப்புகளைத் தந்தவர். மரபான தமிழ் இலக்கியக் கல்வியைக் கற்றிருந்தாலும், இந்திய இலக்கியம் என்னும் எல்லைக்குள் வைத்து அதனைப் புரிந்து கொள்வதும், விளக்குவதும் அவசியம் என்னும் கருத்தோட்டம் அவரது தனி அடையாளம். அதன் வழியாகவே தமிழ் இலக்கியம் உலக இலக்கியப் பரப்பில் தனக்கான இடத்தை அடைய முடியும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருபவர்.