இடுகைகள்

• இந்திரா பார்த்தசாரதியோடு ஒரு நேர்காணல்:

படம்
இப்போதும் ஓர் இளைஞனின் துடிப்புடன் எழுதுக் கொண்டிருக்கும் இ.பா ., சமகாலத்தமிழ் இலக்கிய வகைகள் எல்லாவற்றிலும் தன்னுடைய அடையாளத்தைப் பதிக்கும் வகையில் படைப்புகளைத் தந்தவர். மரபான தமிழ் இலக்கியக் கல்வியைக் கற்றிருந்தாலும், இந்திய இலக்கியம் என்னும் எல்லைக்குள் வைத்து அதனைப் புரிந்து கொள்வதும், விளக்குவதும் அவசியம் என்னும் கருத்தோட்டம் அவரது தனி அடையாளம். அதன் வழியாகவே தமிழ் இலக்கியம் உலக இலக்கியப் பரப்பில் தனக்கான இடத்தை அடைய முடியும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருபவர்.

மணற்கேணி - அறிமுகம்

1989 இல் புதுவைப் பல்கலைக் கழகத்தின் நாடகப் பள்ளியின் ஆசிரியராகப் பணியாற்றச் சென்ற சில மாதங்களுக்குள் அவருடன் ஏற்பட்ட நட்பு இன்றளவும் தொடரும் ஒன்று. தொண்ணூறுகளில் தமிழ் அறிவுச் சூழலில் ஏற்பட்ட கருத்தியல் முன் வைப்புக்களுக்கும் , செயல்தள மாற்றங்களுக்கும் , விமரிசனத் திசை அறிதலுக்கும் மையமாக இருந்தவர் ரவிக்குமார் என்பதில் எனக்கு எப்போதும் மாற்றுக் கருத்து இருந்ததில்லை.

மூன்றாவது சிலுவை: காமரூபத்தின் நியாயங்கள்

படம்
                 இந்த நாவல் ஆண்களை ரகசியமாக மகிழ்ச்சி கொள்ளச் செய்யும்.                                       பெண்களை ஆவேசமாக எதிர்வினையாற்றத்தூண்டும் -  என்றொரு அட்டைக் குறிப்புடன் காலச்சுவடு பதிப்பகம் ஒரு நாவலை  வெளியிட்டுள்ளது. அதன் தலைப்பு மூன்றாவது சிலுவை. இந்த நாவலை எழுதியுள்ளவர் பெயர் உமா வரதராஜன் ; இவர் ஓர் ஆண் என்ற குறிப்பும் அந்த நாவலைப் படிப்பவர்களுக்காகத் தரப்பட்டுள்ளது.

திருக்குறளில் கடமைகளும் உரிமைகளும்

தனக்கான அடிப்படைத் தேவைகளான உணவு , உடை , உறையுள் ஆகியனவற்றைத் தேடுவதன் முகாந்திரமாகச் சமூக நிறுவனங்களை உருவாக்கிக் கொண்டது மனித சமூகம். அப்படி உருவாக்கிக் கொண்ட நிறுவனங்களுக்குள் மனிதர்கள் வாழ வேண்டும் என்று வலியுறுத்திக் கூறும் பனுவல்களை -அற நூல்களாக உருவாக்கித் தனது கருத்துக் கருவூலகமாகக் கொண்டன ஒவ்வொரு மொழிவழிச் சமுதாயமும். இப்படியான அறநூல்கள் ஒவ்வொரு மொழியின் இலக்கிய வரலாற்றிலும் தொடக்க காலத்தில் முக்கியமான இடத்தைப் பிடித்துக் கொண்டு கருத்துருவாக்கிகளாக விளங்கியுள்ளன.  தமிழ்மொழியைத்தங்கள் வெளிப்பாட்டுக் கருவியாகக் கொண்ட தமிழ்ச் சமூகத்தின் கருத்துப் பெட்டகமாக இருப்பது திருக்குறள்.