இடுகைகள்

பிப்ரவரி, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கூட்டம்.. கூட்டமான கூட்டம்

படம்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று கோரிக்கை புதியதல்ல. காங்கிரஸ் ஆட்சியின்போதே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுத் தொடங்கப்பட்டது. ஆனால் வெவ்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளது. இத்தகையதொரு கணக்கெடுப்பில் ஒவ்வொரு சிறுகுழுவும் பெருங்குழுவும் அதனதன் இருப்புக்கேற்பச் சலுகைகள் பெறும் என்ற எண்ணமும் நடைமுறை யதார்த்தமும் இருந்தாலும் மக்களாட்சி முறையின் கோட்பாட்டு அடிப்படையில் நம்பிக்கை இருக்கும் ஒருவர் இந்தக் கணக்கெடுப்பை மனதார ஒத்துக்கொள்ள இயலாது என்றே நான் நம்புகிறேன். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் இந்தப்பேச்சு தொடங்கிய காலகட்டத்திலேயே அதனைக் குறுத்துக் கட்டுரை ஒன்றை அம்ருதா இதழில் எழுதினேன். இப்போது திரும்பவும் தருகிறேன்.

பு ஷ்பா-2 வெகுமக்களின் சினிமா

படம்
  PUSHPA - 2.THE RULE வெகுமக்கள் சினிமா தனிமனிதர்களின் பாச உணர்வுகளைத் தூண்டுதலை உரிப்பொருளாக்கிக் கதைப்பின்னலைக் கட்டமைக்கிறது. அதற்குத் தோதான அமைப்பு குடும்பம். குடும்பத்தில் தொடங்கிச் சொந்த ஊர், நாடு, மொழி, இனம், மதம் என விரியும். இவற்றைப் பாதுகாக்கும் பொருட்டு தன்னை வருத்துதலும் தன்னைக் கொடுத்தலும் தன்னைத் தலைமையாக்குதலும் நடக்கும்.

தொடரும் பாவனைப்போர்கள் -2

தொல்காப்பியம் Xஅகத்தியம் / ஐந்திரம் /இறையனார்   அண்மைக்காலத்தில் அகத்தியம் என்னும் கற்பனை நூலொன்றைப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அகத்தியரை உருவாக்கியவர் இறையனார்(சிவன் என்பது புராணம் ) அதன் பின்னணியில் இருக்கும் நோக்கங்களை விரிவாக எழுதவேண்டும்.   தொல்காப்பியத்தைக் குறிவைத்துப் பேச அகத்தியத்தைக் கையிலெடுப்பது, பெரியாரைக் குறிவைத்துச் சச்சரவுகளை உருவாக்குவது போன்றது. நவீன மொழியியல் முன்வைக்கும் எழுத்து, சொல் இலக்கணங்களுக்கு இணையாக மொழியைக் குறித்துப் பேசும் இலக்கணம் தொல்காப்பியம். அதேபோல் அரிஸ்டாடிலின் ' கவிதையியல் (Poetics ) ' என்னும் பனுவலைப் போல இலக்கியவியல் அடிப்படைகளைப் பேசுவது தொல்காப்பியப் பொருளதிகாரம். இதனைத் தமிழியல் ஆய்வுலகம் மட்டுமல்லாமல் அமெரிக்க, ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களில் இருக்கும் இந்தியவியல் துறைகளின் மொழியியல், இலக்கியவியல் துறைகளும் அவற்றின் பேராசிரியர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.   தொல்காப்பியத்தைப் பின்பற்றி நடந்துள்ள ஆய்வுகள், நவீனப் பகுப்பாய்வு அடிப்படையில் நடந்தவை. அவற்றைத் திசைதிருப்பும் நோக்கத்துடன் அகத்தியம் / அகத்தியர் என்னும் கற்பனை முன் வைக்...

தமயந்தியின் தன் விருப்ப சினிமாக்கள்

படம்
  தடயம்:தமிழ் மாற்றுச் சினிமாவில் ஒரு மைல்கல். ஏப்ரல் 08, 2019 நிறைவேறாத காதல் - தமயந்தியின் தடயம் சினிமாவின் விவாதப் பொருள் என்பதைப் படம் பார்ப்பதற்கு முன்பே அறிவேன். தடயத்தை எழுத்தில் வாசித்திருக்கிறேன். அப்போது இப்படி எழுதியிருக்கிறேன்

உப்பு வண்டிக்காரன் : சமகாலத்தை எழுதுவதின் வகை மாதிரி.

படம்
உப்பு வண்டிக்காரன் இமையத்தின் புதிய நாவல் (அக்டோபர், 2024). அவரது முதல் நாவல் கோவேறு கழுதைகள்(1994) வெளிவந்தபோது அவருக்கு வயது 30. வெளிவந்த சில மாதங்களுக்குள்ளேயே ஆதரவும் எதிர்ப்புமான விமரிசனங்களைப் பெற்றுக் கவனிக்கத்தக்க எழுத்தாளராக அவரை முன்வைத்தது. ஒடுக்கப்பட்ட சமூகத்துப் பெண்ணொருத்தியின் துயரார்ந்த வாழ்க்கையைத் துன்பியல் உணர்வெழுச்சியோடு எழுதிக்காட்டியது. அதன் வடிவம், மொழிப்பயன்பாடு, மனிதாபிமானம் சார்ந்த உரிப்பொருள் நோக்கம் என பலவிதமான இலக்கியவியல் சிறப்புகள் கொண்டது என்பதைப் பலரும் சுட்டிக்காட்டினர். முதல் விமரிசனத்தை எழுதிய எழுத்தாளர் சுந்தரராமசாமி படைப்புக்கு விருதென்றால், இந்த ஆண்டின் சாகித்திய அகாடெமி விருதைக் கோவேறு கழுதைகளுக்கே தரவேண்டும் என எழுதினார். கோவேறு கழுதைகளைத் தொடர்ந்து ஆறுமுகம்(1999),செடல்(2005), எங்கதெ(2015), செல்லாத பணம்(2018), வாழ்க வாழ்க (2020),இப்போது உயிரோடிருக்கிறேன் (2022),நெஞ்சறுப்பு(2024) எனச் சீரான இடைவெளியில் நாவல்களை எழுதி வெளியிட்ட இமையத்தின் ஒன்பதாவது நாவல் உப்புவண்டிக்காரன். இந்த ஆண்டிலேயே வந்துள்ள இரண்டாவது நாவல். அவரது ஐந்தாவது நாவலான செல்லாத ...

அடுத்தடுத்துப் பார்த்த சினிமாக்கள்

படம்
 வாசிப்பும் எழுத்தும் தடைபடும்போது சினிமா கைகொடுக்கும். அதிலும் தர்க்கத்திற்குள் நிற்கும் வணிக சினிமாக்கள் உண்டாக்கும் கிளர்ச்சியும் தளர்வும் அடுத்த கட்ட பணிகளை உருவாக்கித் தரும். அந்த நோக்கத்தில் இந்த படங்களை ஒவ்வொரு நாள் இடைவெளியில் பார்த்து முடித்தேன். பார்த்த சினிமாக்களை மற்றவர்களுக்குப் பரிந்துரைக்கும் குறிப்புகள் இவை. நான்கில் இரண்டு நேரடி தமிழ்ப்படங்கள். ஒன்று தெலுங்கு; இன்னொன்று மலையாளம். நான்குமே இணையச்செயலிகளில் கிடைத்தவை.