இடுகைகள்

டிசம்பர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

போய்த் திரும்பும் பறவைகள் -ஜெயந்திசங்கரின் கதைகள்

படம்
  ஒரு படைப்பாளியின் கதைகளை அவ்வப்போது வாசிக்கும்போது வாசிப்பவரிடம் உருவாகும் நினைப்புகள் ஒருவிதமானவை. நிதானமாக வாசித்து முடித்தபின் அந்தக் கதையின் வெளிகளுக்குள் வாசகரை அழைத்துச் சென்று கதைக்குள் உருவாக்கப் பெற்ற மனிதர்களின் வினைகளையும் அவ்வினைகளுக்கான காரணங்களையும் முன்வைக்க முயல்வது முதன்மைச் செயல்பாடாக இருக்கும். அப்படி முன் வைக்கும் காரணங்களாகக் கதாபாத்திரங்கள் வாழ நேர்ந்த சமூகச்சூழலும் அதை எழுதியவரின் காலச்சூழலும் இருக்க முயல்கின்றன. அந்த நேரத்தில், கதாசிரியன் உருவாக்கும் வெளி, பாத்திரங்கள், அவைகளின் வினைகள், அவை நிகழ்வதற்கான காரணிகள் என்ற எல்லைகளைத் தாண்டி வாசகமனம் செல்வதில்லை. ஜெயந்தி சங்கரின் பல கதைகளை நான் அப்படித்தான் வாசித்து முடித்திருந்தேன். அத்தகைய வாசிப்புகளின் போதெல்லாம் அவரால் உருவாக்கிய பாத்திரங்களே என்னோடு நெருக்கமாக நின்று என்னோடு பேசினார்கள்; தங்களை முன் வைத்தார்கள்; தங்களின் செயல்பாடுகளுக்கான காரணகாரியங்களைச் சொல்லப்பார்த்தார்கள். அப்படிச் சொல்லியபோதே இவர்களெல்லாம் என்னருகில் இல்லாதவர்கள் என்பதை உணர்ந்து வைத்திருந்தேன்.

சமஸ்: அமைப்புகளை நோக்கி அதிகம் பேசும் குரல்

படம்
காலைத் தினசரிகளில் நான் காலையில் வாசிப்பன செய்திகள். நீண்ட செய்திகள் - பலரும் பங்கேற்ற நிகழ்வுகள் பற்றிய செய்திகள் இருந்தால் அன்றைய காலை வாசிப்பில் செய்திக் கட்டுரைகள் ஒதுக்கி வைக்கப்பட்டு மாலைக்குரியதாக மாறிவிடும். அலுவலகம் போய்விட்டு வந்து மாலையில் படிப்பேன். மாலையில் படிக்கலாம் என வைத்துவிட்டுப் போன பல செய்திக் கட்டுரைகள் படிக்கப்படாமலே நின்றுபோய்விடுவதுமுண்டு.

பூமணி! நீண்ட நாள் வாசகனின் இந்த வாழ்த்தை ஏற்றுக் கொள்ளுங்கள்

படம்
1960- களுக்குப் பின்பு எழுதத் தொடங்கிக் குறிப்பிடத்தக்க நாவலாசிரியர்களாக அறியப்படும் பலரும் அவர்களின் முதல் நாவலின் வழியாகவே திரும்பத் திரும்ப அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.பூமணியும் அதற்கு விலக்கில்லை அவரது முதல் நாவலான பிறகு வோடு சேர்த்தே அடையாளம் காணப்படுகிறார். வட்டாரம் சார்ந்த எழுத்தாளர்களாக அறியப்படும் பலரும் அத்தகைய அடையாளம் பெறாமல் தப்பிக்க முடியாது. ஆனால் ’முதல் படைப்பே முதன்மையான படைப்பு’ என்ற மனோபாவம் விமரிசன அடிப்படைகள் அற்று உருவாக்கப்படும் ஒன்று என்பதில் எந்தச் சந்தேகமும் எனக்கில்லை.

காலில் ஒட்டாத கரிசல் மண்

படம்
வேதபுரத்தார்க்கு நல்ல குறி சொல்லு என்றொரு தொடரைக் குமுதம் இதழில் கி.ராஜநாராயணன் ஆரம்பித்தபோது நான் இந்தியாவில் இல்லை. போலந்து நாட்டு வார்சா பல்கலைக்கழகத்தில் போலந்து நாட்டுக்காரர் களுக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அந்தத் தொடரின் ஆரம்ப அத்தியாயங்களைப் படித்த நண்பர் ஒருவர் ‘உனது பெயரும் அவ்வப்போது இடம்பெறுகிறது’ எனத் தொலைபேசியில் சொன்னார். சொன்ன பிறகும் அதை வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தியாவுக்கு வந்த பிறகு தான் கிடைத்தது.

வெண்பனி போனது; வசந்தமே வருக; வருக வசந்தமே!!

படம்
தூரத்தில் ஓடிக் கொண்டிருக்கும் அந்த நதிக்கு எனது வாழ்த்துகள் கண்டத்தின் வரைபடத்தைப் பார். குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருக்கின்றனவே அவை என்ன? என்னவெல்லாம் நிரந்தரமானவை ; எவை நிலைத்திருக்கப் போகின்றன நதிகளையும் மலைகளையும் தவிர வேறெவற்றைச் சொல்ல முடியும் மனித ஞாபகங்களையும் விட மூத்தவை அவற்றின் நினைவுகள் ரொம்பவும் உண்மையானவை; மறைந்து ஓடும் ஆழ்மனச் சுழல்கள் பேசிப்பேசித் தீர்த்துக் கொள்ளும் அல்லது மௌனச் சுழலாய் நகர்ந்து போகும் வயது முதிர்ந்த லாவா நதியே பல வருடங்களுக்குப் பின் திரும்பவும் உன்னை வாழ்த்துகிறேன் நீ கடந்து வந்த வசந்தத்தின் நிறமாலைகளும் இலையுதிர்காலத்துச் சருகுகளும் எத்தனை எத்தனை நீ பார்த்துக் கடந்த பாரம்பரியம் மாறாக் குடில்களும் நெடிதுயர்ந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளும் உனக்குப் பாதை ஒதுக்கும் கண்ணாடி மாளிகைகளும் கான்கிரீட் வனங்களும் வயது முதிர்ந்த நதியே எனது வருகைக்காக அக்டோபர் மாதத்துச் சூரியனை எடுத்துக் கொண்டு வா . கலைந்த ஆடைகளோடு தூங்கி விழிக்கும் உன்னை காண வேண்டும் மரங்களும் புதர்களும் உன் தழுவல்களுக்காகக் கரையோரங்களில் காத்து நிற்கின்றன ஏற்றப்பட்ட ...

தண்டனைகளற்ற உலகம்

ஒவ்வொரு பருவம் முடியும்போதும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் தங்கள் வகுப்பில் பாடம் கற்க வந்தவர்களின் வருகைப் பதிவைச் சோதித்து, அவர்களைத் தேர்வுக்கு அனுப்பலாமா? வேண்டாமா? என முடிவு செய்யப் பல்கலைக்கழகங்களில் விதிகள் உண்டு. நடத்தப்பெற்ற வகுப்புகளில் மாணாக்கர் 75% வந்திருந்தால் கவலையே பட வேண்டாம். ஆசிரியர் அவரைத் தேர்வுக்கு அனுப்பித் தான் ஆக வேண்டும். வகுப்புக்கு வந்து பாடம் தான் கேட்டிருக்க வேண்டும் என்பது கிடையாது. வருகை, பதிவில் இருந்தால் போதும். 60% க்கும் குறைவாக வந்தால் தேர்வில் பங்கேற்பது முடியாது. இது கடுமையான தண்டனை. ஆனால் 60-75 சதம் வந்திருந்தால் தண்டத் தொகையைக் கட்டிவிட்டுத் தேர்வுகளை எழுதிவிடலாம். இந்த நடைமுறையை நீங்கள் தண்டனையாகவும் கருதலாம்; மன்னிப்பாகவும் நினைக்கலாம்.

இன்குலாப்: இப்படி நினைக்கப்படுவார்

படம்
நவீனத்துவக் கவிதை ஒருவர் இன்னொருவரோடு பேசும் அல்லது முன்வைக்கும் சொல்முறையைக் கொண்டிருப்பதாக அமையவேண்டும் என்பது தமிழில் நிறுவப்பட்டுவிட்ட ஒன்றாக ஆகிவிட்டது. அந்த இன்னொருவரைத் தனக்குள்ளேயே உருவாக்கிக்கொண்டு பேசும் சாத்தியங்கள் இருந்தால் அவையே நவீனத்துவக் கவிதையின் நுட்பமாகவும் நம்பப்படுகிறது. இதற்குமாறாகத் தன் சொற்களை ஒருவரோடல்லாமல் பலருக்கும் சொல்லும் வடிவத்தைக் கொண்ட கவிதையைப் பிரச்சாரம் எனப் பேசி ஒதுக்குவதும் நவீனக் கவிதையை நிறுவிவிடும் விமரிசகர்கள் அல்லது இலக்கியவாதிகளின் போக்காக இருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் சாகுல் அமீது என்ற பெயரை “ இன்குலாப்” என மாற்றிக்கொண்டவரைக் ”கவி” யென அங்கீகரித்ததில்லை.