இடுகைகள்

பண்டிகைகள் - திருவிழாக்கள்- கொண்டாட்டங்கள்

படம்
நமது பண்டிகைகள் நமது வாழ்வின் சில மகிழ்ச்சியான தருணங்களாக இருந்தன; சில துன்பங்கள் தொலைந்ததின் நினைவுகளாக இருந்தன. சிலவற்றை வரவேற்கும் ஆரவாரமாக இருந்தன. ஆனால் இன்று ஒவ்வொரு அரைமணி நேரத்தையும் வணிக நிறுவனங்கள் பங்கு போட்டுக் கொண்டு பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. அவற்றைப் பார்க்கும் பார்வையாளர்களோ அவற்றின் விளம்பரத்தைப் பார்த்து பொருட்களை வாங்க முடியாமல் தவிக்கும் ஏக்கத்தின் நாட்களாக பண்டிகை நாளைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். நடுத்தர வர்க்கம் பண்டிகை நாட்களை வியாபாரப் பண்டங்களின் நினைவு நாட்களாக ஆக்கி ஆண்டுகள் சில பத்துகள் ஆகிவிட்டன. இப்போது கிராமத்துக் குடிமக்களிடம் இலவசத் தொலைக்காட்சி அந்த வேலையைச் செய்து கொண்டிருக்கின்றன. காலத்தைக் கடைச்சரக்காக்கும் வித்தையைச் செய்யும் வியாபாரிகளிடமும் அவர்களை அண்டிப் பிழைக்கும் ஊடகங்களிடமும் மனிதர்கள் எச்சரிக்கையோடு இருப்பார்களாக; இல்லையென்றால் எல்லா அடையாளங்களும் இல்லாமல் போய்விடும்.

இது நினைவஞ்சலி அல்ல

படம்
ரமேஷ் பிரேதனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டபோது   வாழ்த்துத் தெரிவித்து ஒரு குறிப்பு எழுதியிருந்தேன். ரமேஷ் பிரேதனுக்கு வாழ்த்து 2025 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது ரமேஷ் பிரேதனுக்கு வழங்கப்பட உள்ளது. பாண்டிச்சேரி (1989-97) காலத்தில் நேரடிப்பழக்கம் உண்டு. அங்கு நடக்கும் இலக்கிய, பண்பாட்டு நிகழ்வுகளில் சந்தித்துக் கொள்வோம். நிறப்பிரிகை சார்பாக நடந்த கூட்டு விவாதங்களின் போதெல்லாம் இருந்ததுண்டு. அதிகம் பேசுபவராகப் பிரேம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். ஆனால் இவரது வாசிப்பும் உரையாடலும் இருவரது பெயரிலுமாக வந்த எழுத்துகளில் பங்காற்றியதாக அவர்களின் நண்பர்கள் சொல்லுவார்கள். ரமேஷ் என்றே அழைப்போம். அவரோடு இணைந்து எழுதிய இன்னொருவரைப் பிரேம் என்று அழைப்போம். இருவரும் சேர்ந்து ரமேஷ்- பிரேம் என்ற பெயரிலும், பிரேதா-பிரேதன் என்ற பெயரில் எழுதியனவற்றைக் கிரணம், சிதைவு போன்ற இதழ்களில் வாசித்ததுண்டு. அந்தக்காலத்தில் இவர் தனியாக எதுவும் எழுதியதாக நினைவில் இல்லை. இப்போது ரமேஷ் பிரேதன் என்ற பெயரில் எழுதும் கவிதைகளையும் சிறுகதைகளையும் வாசித்திருக்கிறேன். முகநூல் குறிப்புகளாகச் சிலவற...

தண்டனைகளும் மன்னிப்பும்

படம்
விலக்கும் விதியும் பெர்ட்டோல்ட் பிரெக்ட் எழுதிய - EXCEPTION AND THE RULE விதிவிலக்கும் விதியும் என்றொரு நாடகத்தைச் சென்னையின் மேக்ஸ்முல்லர் பவன் வளாகத்தில் - தோட்ட அரங்கில் பார்த்த நினைவு இப்போதும் இருக்கிறது. அந்த நாடகத்தைப் பார்க்கப் புதுச்சேரியிலிருந்து மாணவர்களோடு சென்றிருந்தேன்.

தூக்கம் தொலைந்த இரவானது

படம்
  இரண்டு மணி நேரத்திற்கொருமுறை என்று இரவு முழுவதும் நேரலைகளைப் பார்த்துப் பார்த்துக் கண்கள் தூக்கத்தைத் தொலைத்துவிட்டன. கனவுகளுக்கு வாய்ப்பே இல்லாத நிகழ்வுகளால் மொத்த இரவும் விழித்திருந்த இரவாகிவிட்டது. பத்துமணி வாக்கில் பத்திரிகையாளர் விஜயசங்கர் ராமச்சந்திரனின் முகநூல் குறிப்புதான் ஆரம்பம். அதில் ஆவேசமாக எழுதியிருந்தார். எனக்குக் கிடைத்த தகவல்களின் படி: விஜய் நாமக்கலில் பேசுவதற்கு அனுமதிபெற்ற நேரம் காலை 8.45. அவர்களின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் நேரத்தை குறிப்பிட்டு எழுதியுள்ளனர். ஆனால், அவர் சென்னை விமானநிலையத்தில் புறப்பட்டதே 8.45 மணிக்குத்தான். பிறகு திருச்சி விமானநிலையம் 10 மணிக்கு வந்தார். சென்று அங்கிருந்து நாமக்கல் சாலை மார்க்கம் செல்ல வேண்டும் (90 கிமீ) பொதுவாக சுமார் இரண்டு மணி நேரம் ஆகும். எனில் 8.45 க்கு வர வேண்டியவர் கிளம்பியிருக்க வேண்டிய நேரம் என்ன? ஏற்படும் வாகன நெரிசலை கருத்தில் கொண்டு எப்போது கிளம்ப வேண்டும்? சுமார் 2.30 மணிக்கு வந்து சேர்ந்தார். அவர்கள் கரூரில் பேச பெற்ற நேரம் 12 ! வந்து சேர்ந்தது சுமார் 7 . இந்தக் கால தாமதத்திற்கு பொறுப்பு ? கூட்டத்தால் நடந்த கா...