இடுகைகள்

உதிரியாய்ச் சில குறிப்புகள்

படம்
அவரின் பிற எழுத்துகளை வாசித்ததில்லை. நேரிலும் அறிந்ததில்லை. ஆனால் அவரது முகநூல் குறிப்புகளின் தொடர் வாசகன். நிமோஷினி என்ற அந்தப் பெயரைக் கூடப் புனைபெயராக இருக்கும் என்றே நினைத்துக் கொண்டு வாசிப்பேன். இப்போது அவரது குறிப்புகளைத் தொகுத்து நூலாக்கியிருக்கும் "கொமாரன் குறிப்புகள்" வாசிக்கக் கிடைத்தது. இந்தக் குறிப்புகளைத் தொடர்ச்சியாக வாசிக்கத் தொடங்கிய அரைமணி நேரத்திலேயே ' இப்படித் தொடர்ச்சியாக' வாசிக்க வேண்டியதில்லை என்று தோன்றியது. அதனால் அந்த வாசிப்பை மாற்றிக் கொண்டு ஆங்காங்கே வாசித்தேன். தாண்டித் தாண்டி வாசித்தபோதும் அந்த எழுத்துக்குள் தனது தன்னிலையை - கடந்த கால நினைப்புகளை -இப்போதைய இருப்பை - மறைக்காமல் சொல்லிவிடத் துடிக்கும் வெளிப்படைத்தன்மை இருப்பதை வாசிக்க முடிந்தது. மாதச்சம்பளக்காரராக இருந்து நடுத்தர வர்க்க வாழ்க்கைக்குள் நுழைந்த ஒருவரின் குறிப்புகள் என்று இதனைச் சொல்லிவிடலாம். ஆனால் நடுத்தரவர்க்க நுழைவு தரும் சுகதுக்கங்களின் மீது விலகல் மனநிலையோடு அலைந்த ஒரு உதிரி மனிதனை வாசிக்கத் தரும் குறிப்புகள் என்ற நிலையில் இலக்கியப்பனுவலாக மாறிவிடும் குறிப்புகள் எனவும் சொ...

உலகத்தமிழர்களை நோக்கிய தமிழ்ச் சினிமாக்கள்

படம்
  Ace - PAN TAMIL CINEMA சட்டத்திற்குக் கட்டுப்படாத தனிமனித வீரச்செயல்கள் இன்னொரு தனிமனிதருக்கு அச்சமூட்டக்கூடியன. அதனால் ஒரு தனிமனிதர் அதனை ஏற்க மாட்டார். ஆனால் ஒரு குழுவாக - சமூகமாக அவற்றை விரும்புவார்கள்; ஏற்கவும் செய்வார்கள். ஏனென்றால் சாகசத்தில் விருப்பம் கொண்ட அந்த நாயகனின் குற்றச் செயல்களின் பின்னால் இரக்கமும் அன்பும் காதலும் இருக்கக்கூடும். சில நேரங்களில் குழுவாகப் போராடத் தயாரில்லாதபோதும் தனிமனிதனாக எதிர்த்து நிற்பவர்களாக இருப்பார்கள். இதனை வெற்றிகரமான வணிகசினிமாவின் சூத்திரமாக மாற்றியிருக்கிறார்கள்.

மதுரையின் வாசம்: யுவன் சந்திரசேகரின் கதைகள்

படம்
நீண்ட காலமாகச் சிறுகதைகளில் செயல்பட்டு வரும் யுவன் சந்திரசேகர் போன்ற எழுத்தாளர்களின் கதைகளை ஒற்றை அடையாளத்திற்குள் அடக்குவது எளிதன்று; தேவையானதுமல்ல. அவரது கதைகளை மொத்தமாகத் தொகுத்து வாசிக்கும் ஒருவருக்கு வெளிசார்ந்த அடையாளங்கள் கொண்ட கதைகள் எழுதியிருக்கிறார் எனச் சொல்வதும், அவை மதுரை மாவட்டப் பின்னணியில் எழுதப்பட்டிருக்கின்றன என்று சொல்வது எளிதாக சொல்லக்கூடிய ஒன்றுதான். காலகட்டத்தின் கதை இம்மாத (2024,ஜூன்)உயிர்மையில் வந்துள்ள ’நகுதற் பொருட்டு’ கதையின் நிகழ்வெளிகளாகச் சேலமும் மதுரையும் உள்ளன. ஆனால், இரண்டும் ஒன்றுபோல இடம் பெறவில்லை. சேலம் நிகழ்காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளோடு தொடர்புபடுத்திக் காட்டப் படுகிறது. ஆனால் மதுரை நினைக்கப்படும் வெளியாக - கடந்த கால நிகழ்வுகளின் வெளியாக விரிந்துள்ளது.   நிகழ்காலத்தில் - சேலத்தில் சந்தித்த பாத்திரத்தின் வழியாகக் கடந்த காலத்திற்குள் நுழையும் கதைசொல்லி பாத்திரம், தனது மாணவப்பருவத்து நண்பர்கள் இருவரின் எதிரும் புதிருமான எண்ணங்களையும் செயல்பாடுகளையும் அலசிக் காட்டுவதாகக் கதையின் காட்சிகள் வந்து போகின்றன. அந்த அலசல்கள் தனிநபர்கள் இருவரின் மனப்பாங்க...

துக்ளக் என்னும் அரசியல் மையம்

படம்
தமிழ்நாட்டின் வலதுசாரி அரசியலின் முகமாக இருக்கும் பல பத்திரிகைகளில் முதல் இடம் எப்போதும் துக்ளக் இதழுக்குத்தான். துக்ளக் இதழின் ஆசிரியர்களுக்குப் பத்திரிகையின் வணிகவெற்றியோ, வாசகப்பரப்பைக் கூட்டுவதோ முதன்மையான நோக்கங்களாக இருக்கவில்லை; அவற்றை விடவும், அரசியல் ஆளுமைகளாகத் தங்களை நிலைநிறுத்தும் நோக்கம் இருந்தது; இருக்கிறது என்பதைக் காரணமாகச் சொல்லலாம். வலதுசாரிச் சார்புக் கருத்தியல் ஆளுமையாகத் தன்னை நிலைநிறுத்த அதன் தொடக்க ஆசிரியரான சோ.ராமசாமியும் விரும்பினார்; இப்போது ஆசிரியராக உள்ள சுவாமிநாதன் குருமூர்த்தியும் விரும்புகிறார்.

நல்ல சினிமாவாக ஆகத்தவறிய இரண்டு படங்கள்

படம்
சினிமாவை வழங்கும் இணையச் செயலிகள் வழியாகக் குற்றம், வழக்கு, துப்பறிதல், தண்டனை என வடிவமைக்கப்படும் மலையாளப் படங்கள் சலிப்பைத் தருகின்றன. அதனால்    தமிழ்ப் படங்களின் பக்கம் போகத் தோன்றியது. அடுத்தடுத்து இரண்டு படங்களைப் பார்த்தேன். இதற்கான தூண்டுதலாக முகநூலில்  நண்பர்கள் எழுதிய குறிப்புகள் இருந்தன. எழுதியவர்கள் ஏன் அந்தப் படங்களைப் பார்க்கவேண்டும் என்று   சொல்லவில்லை என்றாலும் ‘பார்க்கலாம்’ என்று பரிந்துரைத்து ஒதுங்கினார்கள். அதனால் கொஞ்சம் ஆர்வம் தூண்டப்பட்டது. தூண்டப்பட்ட ஆர்வத்தில் முதலில் பார்த்த சினிமா 'பெரிசு' இரண்டாவதாகப் பார்த்தது "ஜெண்டில் வுமன்".

திக்கு விஜயம்- பின்னணியால் அர்த்தங்கள் விரியும் ஒரு சிறுகதை

படம்
இந்தியக் குடும்பங்களின் மையவிசை ஆண்கள் என்று  நம்பப் படுகிறது. குடும்பத்திற்கு அவனே தலை. அதனால் அவனே குடும்பத்தின் அன்றாடச் செலவுகளுக்கான வருமானத்திற்கு உழைக்க வேண்டியவன் என்பது அந்த நம்பிக்கையின் தொடர்ச்சி. பிள்ளைகளைப் பெற்றுத்தருவது பெண்களின் வேலையாக இருந்தாலும் அவர்களை வளர்த்துப் படிக்கவைத்து ஆளாக்கும் பொறுப்பும் ஆண்களுக்கே இருக்கிறது என்றும் நம்பப்படுகிறது.

சந்தேகத்தின் பலனை... -சல்மாவின் மறுபக்கம் கதை மீதொரு விவாதம்

படம்
ஒரு புனைகதையை விளக்கிச் சொல்வதற்கும் விவாதிப்பதற்கும் விமரிசனம் செய்வதற்குமான முறைமையை அல்லது திறனாய்வுச் சொற்களை உருவாக்கித் தரும் கதை, தீவிர வாசிப்பை விரும்பும் வாசகருக்கு அல்லது விமரிசகருக்கு உற்சாகம் எழுத்தாகத் தோன்றும். இம்மாதக் (மே, 2025) காலச்சுவடுவில் வந்துள்ள சல்மாவின் ‘மறுபக்கம்’ அப்படியொரு உற்சாகத்தைக் கடத்தும் சிறுகதையாக இருக்கிறது.