நிர்வாக நடைமுறைகளும் நீதிபரிலானமும் - சில குறிப்புகள்
ஒற்றை அடையாள அட்டை தரப்படவேண்டும் . இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ஒற்றை அடையாள அட்டையை இப்போதாவது தரவேண்டும். அதற்கான பணிகளைத் தேர்தல் ஆணையம் செய்யக்கூடாது. ஒன்றிய அரசின் புள்ளியியல் துறை அதனைச் செய்யவேண்டும். இதனை முதல் ஐந்தாண்டுத் திட்டத்திலேயே செய்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக 18 வயதைத் தாண்டியவர்களுக்கு வாக்குரிமை அட்டையை வழங்கும் சிறப்புச்சீர்திருத்தம் நடக்கிறது. பிரிட்டானிய ஆட்சியிலிருந்து விடுதலைபெற்ற இந்தியாவின் குடிமக்களாக ஆகும் தகுதி இவை; இந்தத் தகுதியோடு கூடிய மக்களின் எண்ணிக்கை இவ்வளவு; இதில் ஒருவரின் குறியீட்டு எண் இது என்ற அடையாள அட்டையைத் தரவேண்டும். வளர்ச்சி அடைந்த நாடுகள் ஒவ்வொன்றும் இத்தகைய எண்ணைக் கொண்டே குடிமக்களை அடையாளப்படுத்துகின்றன. ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு அந்த நாட்டிற்குள் பணியாற்றவரும் ஒருவருக்கு தற்காலிகக் குடியுரிமை அட்டையை வழங்குகின்றார்கள். அந்த நாடுகளுக்குள் வரும் விருந்தினர்களுக்கு இத்தகைய அடையாள அட்டையை வழங்குவதில்லை. இரண்டாண்டுகள் போலந்தில் பணியாற்றியபோது எனக்கு வழங்கப் பெற்ற அட்டையில் நான் இருக்கக்கூடிய கா...