இடுகைகள்

BIGBOSS - AN INTERNSHIP PROGRAMME / பிக்பாஸ் நிகழ்வைப் பயிற்சி நிகழ்வாகவும் மாற்றலாம்.

படம்
2025 ஆம் ஆண்டுக்கான பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில்  சில நாட்களில் தொடங்க உள்ளது. தொடங்குவதற்கு முன்பு இந்த இந்த யோசனையைச் சொல்கிறேன். அந்த நிகழ்ச்சியை வெறும் பொழுதுபோக்குப் போட்டி நிகழ்ச்சியாக மட்டும் நடத்தாமல் தமிழ்ச்சினிமா மற்றும் காணொளி ஊடகங்களுக்கான திறமையாளர்களை உருவாக்கும் கற்றல்/ கற்பித்தல் நிகழ்ச்சியாகவும் மாற்றலாம். 

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே.

கவிதைகள்: ஆக்கங்களும் வாசிப்புகளும். செம்மொழியான தமிழுக்குத் தனித்துவமான இலக்கியவியல் ஒன்று இருக்கிறது. எல்லாச் செவ்வியல் மொழிகளிலும் இருக்கும் இலக்கியவியல் நூல்கள் பேசுவதைப் போலத் தமிழின் இலக்கியவியல் நூலான தொல்காப்பியமும் இலக்கியத்தை ஆக்கும்/ செய்யும் முறைகளையே பேசுகின்றது. ஆனால் அதன் துணைவிளைவுகள் சில இருக்கின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.

தமயந்தியின் காயல் - பிரிவுத்துயரின் வலைப்பின்னல்

படம்
எழுத்தாளர் தமயந்தியின் இயக்கத்தில் வந்துள்ள காயல் அவரது இரண்டாவது சினிமா. முதல் சினிமா தடயம். சினிமாவுக்குள் நுழைந்த மற்ற எழுத்தாளர்களிடமிருந்து தமயந்தியின் நுழைவும் இருப்பும் முக்கியமான வேறுபாடு உடையது. எழுத்தாளர் என்ற தனித்த அடையாளத்தோடு நுழைந்து, வணிக சினிமாவுக்குள் தன் இருப்பிற்காகப் போராடியிருக்கிறார். அவரது முதல் படம் தடயத்தைப் பார்வையாளர்கள் முன் வைக்கப் பலவிதமான சிரமங்களை அனுபவித்தார். திருநெல்வேலியில் ஒரு முதியோர் இல்லத்தில் இருந்த அரங்கில்தான் தடயம் படத்தைப் பார்த்தேன். இரண்டாவது படமான காயலையும் முடித்துவைத்து ஆண்டுக்கணக்கில் காத்திருந்து அரங்கில் வெளியிட முடிந்துள்ளது. இத்தகைய முயற்சிகளின் பின்னணியில் மனந்தளர்ந்து விடாத அவரது பிடிவாதம் இருக்கிறது.

தூக்கம் தொலைந்த இரவானது

  இரண்டு மணி நேரத்திற்கொருமுறை என்று இரவு முழுவதும் நேரலைகளைப் பார்த்துப் பார்த்துக் கண்கள் தூக்கத்தைத் தொலைத்துவிட்டன. கனவுகளுக்கு வாய்ப்பே இல்லாத நிகழ்வுகளால் மொத்த இரவும் விழித்திருந்த இரவாகிவிட்டது. பத்துமணி வாக்கில் பத்திரிகையாளர் விஜயசங்கர் ராமச்சந்திரனின் முகநூல் குறிப்புதான் ஆரம்பம். அதில் ஆவேசமாக எழுதியிருந்தார். எனக்குக் கிடைத்த தகவல்களின் படி: விஜய் நாமக்கலில் பேசுவதற்கு அனுமதிபெற்ற நேரம் காலை 8.45. அவர்களின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் நேரத்தை குறிப்பிட்டு எழுதியுள்ளனர். ஆனால், அவர் சென்னை விமானநிலையத்தில் புறப்பட்டதே 8.45 மணிக்குத்தான். பிறகு திருச்சி விமானநிலையம் 10 மணிக்கு வந்தார். சென்று அங்கிருந்து நாமக்கல் சாலை மார்க்கம் செல்ல வேண்டும் (90 கிமீ) பொதுவாக சுமார் இரண்டு மணி நேரம் ஆகும். எனில் 8.45 க்கு வர வேண்டியவர் கிளம்பியிருக்க வேண்டிய நேரம் என்ன? ஏற்படும் வாகன நெரிசலை கருத்தில் கொண்டு எப்போது கிளம்ப வேண்டும்? சுமார் 2.30 மணிக்கு வந்து சேர்ந்தார். அவர்கள் கரூரில் பேச பெற்ற நேரம் 12 ! வந்து சேர்ந்தது சுமார் 7 . இந்தக் கால தாமதத்திற்கு பொறுப்பு ? கூட்டத்தால் நடந்த கா...

தொட்டால் சுடாத பெருநெருப்பு

படம்
கரையில் நிற்கும் போதுதான் கப்பல் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கிறது - இந்த வாக்கியம் மிகவும் உண்மையான வாக்கியம். ஆனால் கரையில் நிற்பதற்காகக் கப்பல் கட்டப்படவில்லை என்பது அதைவிட உண்மையான வாக்கியம். இந்தியாவில் எந்தத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும் அறிவிக்கப்பட்ட நாள் தொடங்கி எல்லாவகை ஊடகங்களும் கருத்துக் கணிப்புகளை வெளியிடத் தொடங்கி விடுவது வாடிக்கை.வாக்குப் பதிவு தொடங்கிய நாள் முதல் கருத்துக் கணிப்புகளை வெளியிட அனுமதி இல்லை என்பது தேர்தல் ஆணையத்தின் விதி என்பதால் அதை இந்திய ஊடகங்கள் அப்படியே ஏற்றுக் கொண்டு கருத்துக் கணிப்புகளை நிறுத்திக் கொண்டுவிட்டன என்பது பெரும்பாலோரது நம்பிக்கை.

கல்யாணி என்னும் முன்மாதிரி

படம்
பேரா. கல்யாணி அவர்களுக்குத் தமிழக அரசு நடத்திய நிகழ்வொன்றில் விருது அளித்துக் கௌரவித்துள்ளது. கல்வியிற் சிறந்த தமிழ்நாடு என்ற அந்நிகழ்வைத் தமிழ்நாட்டரசின் பள்ளிக்கல்வித்துறை நடத்தியுள்ளது. உயர்கல்வியும் வேலைவாய்ப்பும் கிடைக்கும்; கிடைக்கச் செய்துள்ளது இந்த அரசு என்பதைச் சொல்வதற்காக நடத்தப்பட்ட அந்த விழாவில் பிரபா கல்விமணி எனத் தன்னை அழைத்துக்கொண்ட பேரா.கல்யாணிக்கு தகுதிவாய்ந்த அந்த விருதை வழங்கிய அரசுக்குப் பாராட்டையும் விருதுபெற்ற அவருக்கு வாழ்த்தையும் சொல்லிக் கொள்கிறேன்.

நவீன கவிதைகளை வாசிக்கும்போது....

படம்
இருப்பை எழுதும் கவிதைகள் நடந்து முடிந்த மதுரைப் புத்தகக் கண்காட்சியின் தொடக்கம் முதல் முடிவு வரை பத்து நாட்களும்(செப்.5 -15) இருந்துவிட்டுப்போனபின்பு ஒரு கவிதை எழுதியிருந்தார் மனுஷ்யபுத்திரன்.