இடுகைகள்

திரைப்பட ஆக்கம்- கவனமும் கவனமின்மையும்

படம்
கலை, இலக்கியங்கள் அவை தோன்றிய காலச் சமூகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி எனச் சொல்லப்பட்ட கருத்துநிலை போதாமை உடைய ஒன்று. அதனை உணர்ந்த நிலையில், குறிப்பிட்ட காலகட்டத்தின் தேவைக்காகவும் இயக்கத்திற்காகவும் பிரதிகள் உருவாக்கப்படுகின்றன என்ற புரிதல் ஏற்பட்டது. அதனால் வெகுமக்கள் திரள்திரளாகப் பார்த்து ரசிக்கும் திரைப்படங்களுக்குள் அவர்கள் அனைவருக்கும் தேவையான பொதுக்கூறுகள் என்னவெல்லாம் இருக்கின்றன என்பதைக் கண்டறிந்து சொல்லும் நோக்கத்தோடு சினிமாவைப் பார்க்கவும் விளக்கவும் முயன்றோம். 1990- களின் இடைப்பட்ட ஆண்டுகளில் இந்தப் பார்வையைத் தமிழகச் சிந்தனையாளர்கள் பலரும் வரித்துக் கொண்டார்கள். மிகச் சிறுபான்மையினருக்கான சினிமாவைக் கொண்டாடும் மனப்பாங்கைக் கைவிட்டுவிட்டுத் திரைப்பட ஆய்வுகள் வெகுமக்கள் சினிமாவை நோக்கி நகரத் தொடங்கின. அந்நகர்வுகளில் முன்கை எடுத்தவர்களில் ஒருவனாக நானும் இருந்தேன். பகல் காட்சிகளைப் பார்க்க வாய்ப்பில்லாத நிலையில் பெரும்பாலான சினிமாக்களைப் பின்னிரவுக் காட்சிகளில் தான் பார்த்திருக்கிறேன். . திரையரங்குகள் சென்று பார்க்கவேண்டிய தேவை இப்போது இல்லை. ஆனாலும் உடனடியாகப் பார்த்துவிட ...

நினைவழியா நாட்கள்

படம்
கரூர் என்னும் அந்த நகரம் சந்தித்த துயரச் சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. இறந்தவர்களுக்கு 16 ஆம் நாளுக்குள்ளும் செய்யப்படும் கருமாதியும் முப்பதாம் நாள் சடங்குகளும் அந்தந்தக் குடும்பங்களின் நினைவுக்குரிய நாட்கள். ஆனால் ஓராண்டுக்குப் பின்னர் அரசியல் அமைப்புகளும் சமூக அமைப்புகளும் அந்த நாளின் நினைவை அந்த நகரத்திற்குரியதாக மாற்றிவிடும் ஆபத்துண்டு.

இந்த முறை டெல்லியில்..

படம்
தீபாவளி: இப்போதாவது பேசவேண்டும் கடந்த ஆண்டு முன்னோக்கிப் போன மனநிலையைத் திரும்பவும் பழைமைக்குள் திருப்பிவிட்டது ஆட்சி மாற்றம். இப்போது ஆட்சியைப் பிடித்துள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு டெல்லியின் சுற்றுச்சூழல் மாசடைவதைவிடவும் தீபாவளிக்குரிய சடங்கான வெடி வெடிப்பதும் வானவேடிக்கைகளும் முக்கியம் என்பதால் கடந்த ஆண்டு நடந்த மாற்றங்களை அப்படியே தலைகீழாக மாற்றிவிட்டது. திரும்பவும் வெடிகள் வெடித்தன; வானவேடிக்கைகள் நிகழ்ந்தன. மேகங்கள் கருத்துத் திரண்டு நின்றுவிட்டன டெல்லியின் வான் பரப்பில். தீபாவளிக்குப் பின்னர் சில நாட்களில் டெல்லியில் இருந்தேன். இதுவரையிலான டெல்லிப் பயணங்களில் இல்லாத அச்சம் இந்த முறை. பார்க்கவேண்டிய பணிகள் பெரும்பாலும் மாலை 5 மணிக்கு முடிந்துவிடும். அதன் பின்பு ஏதாவது இடத்தைச் சுற்றிப் பார்ப்பது, மண்டி ஹவுஸ் பகுதியில் உள்ள கலை அமைப்புகளுக்குப் போவது; நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, நண்பர்களைச் சந்திப்பது, கூட்டம் கூட்டமாக மக்கள் குவிந்து பொருட்களை வாங்கும் பஜார்களுக்குள் (பாலிகா, திபெத்தியன், சரோஜினி, கரோல்பாக், கன்னோட் பிளேஸ் என்னும் ராஜிவ் சௌக்) நுழைந்து சுற்றுவது போன்றனவற்றில் சிலவற்ற...

இயல்பண்புவாதத்திலிருந்து நடப்பியலுக்கு: சுப்ரபாரதி மணியன் கெடா கறி

படம்
இயல்பண்புவாத எழுத்து குறிப்பிட்ட இடத்தில் நிகழும் நிகழ்வுகளை ஒரு ஒளிப்பதிவுக்கருவி கொண்டு படம்பிடித்துக் காட்டுவதுபோல காட்டுவதாகும். அதிலும் கூடக் கருவியைக் கையாளும் நபரின் கோணங்களும் தூரமும் அண்மையுமான காட்சிகளின் வழி தனது கருத்தை உருவாக்கமுடியும். என்றாலும் 360 பாகையில் சுற்றிவரும் காமிராவின் கோணம் கூடுதல்- குறைவு என்பதைத் தவிர்க்க நினைக்கவே செய்யும். சுப்ரபாரதி மணியனின் கதைசொல்லல் முறையில் இந்தக் கோணமே பெரும்பாலும் இருக்கின்றன. அதன் மூலம் அவரது எழுத்தை இயல்பண்புவாத எழுத்து என வகைப்படுத்திவிடலாம் என்று நினைக்கும்போது, குறிப்பான ஒரு உத்தி மூலம் அதனைத் தகர்த்து நடப்பியல் எழுத்தாக மாற்றிவிடுகிறார். கதையைச் சொல்வதற்கு அவர் தேர்வு செய்யும் பாத்திரமே அந்த மாற்றத்தைச் செய்கிறது.

மந்தையின் ஆடுகள் : பற்றும் வெறியும்

படம்
ஏமாறுதல் - ஏமாற்றுதல் என்ற இரண்டு சொற்களில் எது முந்தியது என்று கேட்டால் உடனே பதில் சொல்ல முடியாது. முட்டை முந்தியதா? கோழி முந்தியதா? என்ற கேள்விக்குப் பதில் சொல்ல முடியாததைப் போல இதற்கும் பொருத்தமான பதிலைச் சொல்ல முடியாது. ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்தல் எப்போது தொடங்கியதோ அப்போதே ஏமாற்றுதலும் ஏமாறுதல் தொடங்கியிருக்கிறது. ஆதாமை ஏவாளும், ஏவாளை ஆதாமும் ஏமாற்றவே செய்திருக்கிறார்கள்.