ஜெயமோகனின் கட்டுரைக்கு எதிர்வினையும் அவரது மாடன் மோட்சமும்
ஜெயமோகனின் தன்முனைப்பு தான் பங்கேற்கும் செயல்பாடுகளைச் சரியென வாதாடுதல், தனது கலை, இலக்கியப்பார்வையும் திறனாய்வு முறையும் மட்டுமே அப்பழுக்கற்றது எனத் தன்னை முன்னிறுத்துதல் எப்போதும் அவரிடம் உண்டு. தான் எழுதத் தொடங்கியவுடன் வெகுஜன இதழியலின் தேவையை நியாயப்படுத்தியது தொடங்கி, தான் வசனம் எழுதியவுடன் தமிழ்ச் சினிமாவின் நேர்மறைத் தன்மையைப் பாராட்டியது வரை நடந்தவை தான். இப்போது அவரது 'மாடன் மோட்சம்' கதை மலையாளத்தில் நாடகமாக்கப்பட்டு நிகழ்த்தப்பட்டுள்ளது.