இடுகைகள்

பெங்களூரில் புக்பிரும்மா இலக்கியவிழா

படம்
உலக அளவில் நடக்கும் இலக்கியவிழாக்கள் சிலவற்றைக் கடந்து செல்லும் பார்வையாளனாகப் பார்த்துக் கடந்துவந்துள்ளேன். இந்திய அளவில் நடக்கும் இலக்கியவிழாக்களில் வெளியிலிருந்து பார்க்கும் இலக்கியமாணவனாகவும், அழைக்கப்பட்ட பார்வையாளராகவும் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தவனாகவும் இருந்துள்ளேன். தமிழ்நாட்டில் நடக்கும் சில இலக்கிய விழாக்களில் பங்கேற்புச் செய்து கலந்துகொண்டிருக்கிறேன்.

தூத்துக்குடியில் ஒரு நாடகவிழா

படம்
பார்வையாளனாகவும்  பங்கேற்பாளனாகவும் தமிழ்நாட்டின் முதன்மையான நகரங்களான சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, திருவண்ணாமலை, புதுச்சேரி போன்ற நகரங்களில் தோன்றிய நவீன நாடகக்குழுக்கள் தீவிரமாகச் செயல்பட்ட காலமாக 1980 தொடங்கி 20 ஆண்டுகளைச் சொல்லலாம். அந்தக் காலகட்டத்தில் ஒரு நடிகனாகவும் அரங்கச் செயல்பாடுகள் பலவற்றில் பங்கேற்றவனாகவும் தமிழகமெங்கும் அரங்கேறிய நவீன நாடகங்களைக் கான்பதற்காகப் பயணம் செய்துகொண்டே இருப்பேன். மதுரையின் நிஜநாடக இயக்கத்தின் உறுப்பினராகவும் புதுச்சேரி சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப்பள்ளியின் ஆசிரியனாகவும் இருந்து பங்கேற்ற – பார்த்த நாடகங்களுக்காகச் செய்த பயணங்கள் மறக்க முடியாதவை. அப்படிப் பார்த்த நாடகங்கள் பலவற்றைப் பற்றியும் எழுதிய விமரிசனக்கட்டுரைகள் தொகுக்கப்படாமல் இருக்கின்றன.

இயற்பண்பியல் எழுத்தின் நேர்மறை -அபிமானியின் மனசுக்காரன்

சமகாலத்தமிழ் இலக்கியப்பரப்பில் கடந்த அறுபதாண்டு காலமாக ஆதிக்கம் செலுத்தும் இலக்கிய வடிமம் நாவல். குறைவான நேரத்தில் ஒன்றை வெளிப்படுத்திவிட முடியும் என்ற நோக்கத்தில் கவிதை வடிவத்தைத் தேர்வு செய்பவரும், சிறுகதை வடிவத்தில் எழுதிப்பார்ப்பவரும் நாவல் எழுதிப்பார்க்க வேண்டும் என்று ஆசையுடையவர்களாக இருக்கிறார்கள். பாரதியைத் தமிழின் சமகால இலக்கியத்தின் தொடக்கம் எனக் கொண்டால், அவரே தனது கவிதை வடிவத்தோடு கட்டுரைகள், புனைகதைகள் என நகர்ந்து, சந்திரிகையின் கதையென நாவல் முயற்சியில் இறங்கியபின்னரே முடிந்திருக்கிறார். தமிழ்ச் சிறுகதையின் சாதனையாளர்களில் ஒருவரான புதுமைப்பித்தனுக்கும் நாவல் எழுதும் ஆசை இருந்ததின் வெளிப்பாடே அவரது சிற்றன்னை. கவியாக வெளிப்பட்டு முடிந்த அப்துல்ரகுமான் போல, நாடக ஆசிரியராக மட்டுமே வெளிப்பட்டு முடிந்த கோமல் சுவாமிநாதன் போல, சிறுகதை ஆசிரியராக மட்டுமே தனது புனைவு எழுத்துகளைத் தந்த அம்பையைப் போல விதிவிலக்கான எழுத்தாளர்கள் ஒன்றிரண்டு பேர் இருக்கக்கூடும். அதனால் நாவல் இலக்கியமும் நாவலாசிரியர்களுமே நவீன எழுத்தின் அடையாளங்கள் என்பது மாறாது.

நிகழ்த்தும் கவிதைகளை எழுதுவது -பயிலரங்க அனுபவம்

படம்
கவிதைகளை எழுதவும் வாசிக்கவும் எனத் திட்டமிட்டுக் கொண்ட ஆறுநாள் பயிலரங்கிற்கு நான் எடுத்துக் கொண்ட பொருண்மையே இந்தத் தலைப்பு. நிகழ்த்துதலைக் கோரும் கவிதைகளின் தன்மைகள் எப்படி இருக்கும் என்பதைக் காட்டி, அதைப்போல நீங்களும் எழுதவேண்டும் என்று மரபான உத்தியில் தொடங்கி, புதியன நோக்கி நகர்த்துவதே எனது திட்டம். பொதுவானப் பயிலரங்குகளில் இந்த மரபான உத்தியைப் பலரும் பின்பற்றுவார்கள். 

பாவைக்கூத்துகள் -விஜய் அரசியல் குறித்த குறிப்புகள்

வித்தியாசங்களற்ற பாதைகள் தனக்கென - தனது நடிப்புக்கென ஒரு பாணியை - திரைக்கதை வடிவத்தை உருவாக்கிக் கொண்டு அதே வழியில் தொடர்ந்து படங்களைத் தரும் நாயக நடிகர்களின் சினிமாக்கள் வணிக வெற்றியை உறுதி செய்துள்ளன. அதே நேரம் தங்கள் பாணியிலிருந்து விலகிய சினிமா ஒன்றில் நடிக்கும் ஆசையுடன் முயற்சி செய்யும் நடிகரின் விருப்பத்தை அவரது ரசிகர்களே ஒத்துக்கொள்வதில்லை. தோல்விப்படமாக ஆக்கிவிடுவார்கள். அத்தகைய சூத்திரம் ஒன்றை அரசியலுக்காகக் கண்டுபிடித்து கட்சி நடத்தும்போது அரசியலிலும் நிலைத்து நிற்கின்றார்கள். ஏழைப்பங்காளன்; பெண்களின் காவலன்; தாய்மார்களின் அன்புக்குரியவன்; சினிமாவில் சம்பாதித்த பணம் என்னிடம் இருக்கிறது. எனவே ஊழல் செய்யவேண்டிய அவசியமில்லை; உங்களின் ரத்தத்தின் ரத்தமாக இருப்பேன் எனக்காட்டிக் கொண்ட அரசியல் சூத்திரம் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களுடையது. அவர் உருவாக்கிய அதிமுகவிற்கு வேறுவிதமான அரசியல் பொருளாதாரக்கொள்கை எதுவும் கிடையாது. அதே சூத்திரத்தில் மாற்றமில்லாத ஒன்று விஜய்காந்தின் தேமுதிகவின் சூத்திரமாகவும் இருந்தது. தன்னைக் கருப்பு எம்ஜிஆர் என்று சொல்லி அவரது வாரிசாகக் காட்டினார். இப்போது த...

தொல்.திருமாவளவன் - சில குறிப்புகள்

படம்
1992 // பார்வையாளராக இருந்தார் திருமா. 1968 இல் கீழவெண்மணியில் 42 பேர் உயிருடன் கொளுத்தப்பட்டார்கள்; ஆனால் கொளுத்தியவர்களுக்கு நீதிமன்றம் தண்டனை தருவதற்குப் பதிலாக விடுதலையை வழங்கியது. அதற்கு நீதிமன்றம் சொல்லிய வார்த்தை “ சந்தேகத்தின் பலனை” அளிப்பது என்ற அடிப்படை. இந்திய நீதி மன்றங்களும் சமூகமும் எல்லா நேரமும் சந்தேகத்தின் பலனை உடையவர்களுக்குச் சாதகமாக அளிக்கின்றன என்ற நிலையை மாற்றி “ சந்தேகத்தின் பலனை ஆதிக்க சாதியினருக்கே அளிக்கின்றார்கள்” என்ற நிலைபாட்டில் அந்த நாடகத்தை புதுச்சேரியில் நண்பர்களோடு சேர்ந்து தொடங்கிய கூட்டுக்குரல் என்ற நாடகக் குழுவின் சார்பில் கம்பன் கலையரங்கத்திற்கு வெளியே தரையில் நிகழ்த்திக் காட்டினோம். பாடலும் வசனமும் நடிகர்களின் வியர்வை வழியும் உடலுமாக விரிந்த அந்த நாடக நிகழ்வு இந்தியாவில் வெண்மணியோடு முடிந்து போகவில்லை. பல்வேறு மாநிலங்களில் இன்னும் நடந்துகொண்டே இருக்கிறது என்று காட்ட அந்த நேரத்தில் ஆந்திரத்தின் சுண்டூரில் நடந்த வன்கொலைகளை நினைவூட்டி வளர்த்தெடுத்தோம்.நடக்கும் மோதல்கள் எல்லாவற்றிலும் இருப்பது ஆதிக்கச் சாதியினரின் திமிரும் ஒடுக்கப் பட்ட மக்களுக்கான அண...

சில குறிப்புகள் : சினிமா -பயணக்குறிப்பு - விருது- விவாதம் - ஒரு எதிர்பார்ப்பு.

படம்
இந்தக்குறிப்புகள் எல்லாம் விரிவாக எழுதப்பட்டிருக்க வேண்டியவை. மனச்சோம்பலும் நிலைகொள்ளாத இருப்புமாக நாட்கள் நகரும்போது எழுதுவது இயலாமல் போகின்றது.