இடுகைகள்

ஜெயமோகனின் கட்டுரைக்கு எதிர்வினையும் அவரது மாடன் மோட்சமும்

படம்
ஜெயமோகனின் தன்முனைப்பு தான் பங்கேற்கும் செயல்பாடுகளைச் சரியென வாதாடுதல், தனது கலை, இலக்கியப்பார்வையும் திறனாய்வு முறையும் மட்டுமே அப்பழுக்கற்றது எனத் தன்னை முன்னிறுத்துதல் எப்போதும் அவரிடம் உண்டு. தான் எழுதத் தொடங்கியவுடன் வெகுஜன இதழியலின் தேவையை நியாயப்படுத்தியது தொடங்கி, தான் வசனம் எழுதியவுடன் தமிழ்ச் சினிமாவின் நேர்மறைத் தன்மையைப் பாராட்டியது வரை நடந்தவை தான். இப்போது அவரது 'மாடன் மோட்சம்' கதை மலையாளத்தில் நாடகமாக்கப்பட்டு நிகழ்த்தப்பட்டுள்ளது.

ஆண்டின் கடைசி நாளிலிருந்து இன்னொரு ஆண்டின் முதல் நாளுக்கு

2026 ஆம் ஆண்டை இதற்கு முந்திய ஆண்டு போல நகர்த்தக் கூடாது என்று நினைக்கிறேன். அதனை உறுதி ஏற்பு என்று சொல்லத்தோன்றவில்லை. 1980 ஆம் ஆண்டிலிருந்து எழுதி வரும் எனக்கு தொடர்ச்சியாக ஒன்றில் ஆழமாக எழுதிப் புதையும் மனநிலை இல்லை என்று 45 ஆண்டுகளுக்குப் பின்னர் உறைக்கின்றது. அந்த மனநிலை இருந்திருந்தால் தொடங்கிய நாவல்களை முடித்திருக்கலாம். எழுத நினைத்த இன்னும் சில நாடகங்களை எழுதி நூலாக்கியிருக்கலாம். என்னிடம் இருப்பது தாவித்தாவிச் செல்லும் மனநிலை என்று புரிந்திருக்கிறது. இதைக் கைவிட வேண்டும் என நினைக்கிறேன். அரசியல், சினிமா, நாடகம், இலக்கியம், ஊடகக் கவனம் என அவ்வப்போது எழுதித் தாண்டியிருக்கிறேன் கடந்த காலத்தை.

நிர்வாக நடைமுறைகளும் நீதிபரிலானமும் - சில குறிப்புகள்

படம்
ஒற்றை அடையாள அட்டை தரப்படவேண்டும் .  இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ஒற்றை அடையாள அட்டையை இப்போதாவது தரவேண்டும்.   அதற்கான பணிகளைத்  தேர்தல் ஆணையம் செய்யக்கூடாது. ஒன்றிய அரசின் புள்ளியியல் துறை அதனைச் செய்யவேண்டும். இதனை முதல் ஐந்தாண்டுத் திட்டத்திலேயே செய்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக 18 வயதைத் தாண்டியவர்களுக்கு வாக்குரிமை அட்டையை வழங்கும் சிறப்புச்சீர்திருத்தம் நடக்கிறது. பிரிட்டானிய ஆட்சியிலிருந்து விடுதலைபெற்ற இந்தியாவின் குடிமக்களாக ஆகும் தகுதி இவை; இந்தத் தகுதியோடு கூடிய மக்களின் எண்ணிக்கை இவ்வளவு; இதில் ஒருவரின் குறியீட்டு எண் இது என்ற அடையாள அட்டையைத் தரவேண்டும். வளர்ச்சி அடைந்த நாடுகள் ஒவ்வொன்றும் இத்தகைய எண்ணைக் கொண்டே குடிமக்களை அடையாளப்படுத்துகின்றன. ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு அந்த நாட்டிற்குள் பணியாற்றவரும் ஒருவருக்கு தற்காலிகக் குடியுரிமை அட்டையை வழங்குகின்றார்கள். அந்த நாடுகளுக்குள் வரும் விருந்தினர்களுக்கு இத்தகைய அடையாள அட்டையை வழங்குவதில்லை.  இரண்டாண்டுகள் போலந்தில் பணியாற்றியபோது எனக்கு வழங்கப் பெற்ற அட்டையில் நான் இருக்கக்கூடிய கா...

கதைசொல்லுதலின் சாகசங்கள்

படம்
ஜெயமோகனின் பத்துலட்சம் காலடிகள்   ஜெயமோகன் சமகாலத்தமிழின் முதன்மையான கதைசொல்லி. அவரது பத்துலட்சம் காலடிகள் அண்மையில் வந்துள்ள சிறுகதைகளில் முக்கியமான கதை. சில நாட்களாக இந்தப் பொருள் தரும் சொற்றொடர்கள் இணையப் பக்கங்களில் ஆங்காங்கே தொடர்ச்சியாக வாசிக்கக் கிடைக்கின்றன. கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதிவரும் ஜெயமோகனை முதன்மையான கதைசொல்லி என்று மதிப்பீட்டுச் சொல்லால் பாராட்டிச் சொல்வதற்கு ஒருவர் காரணங்களை அடுக்கிக் காட்டத் தேவையில்லை. ஆனால் இந்த (கொரோனா) அடங்கல் காலத்தில் நாளொன்றுக்கு ஒரு கதை என்று தவறாமல் தனது இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யும் வரிசையில் முப்பதாவது கதையாக வந்துள்ள ஒரு கதையை முக்கியமான கதை -ஆகச் சிறந்த கதை -உன்னதமான கதை – என்று சொல்வதற்குப் போதுமான காரணங்களை முன்வைக்க வேண்டும். காரணங்கள் சொல்லாமல் முன்வைக்கப்படும் சொற்றொடர் விமரிசனச் சொல்லாக இருக்காது. போகிற போக்கில் வாசிக்காமலேயே கூடச் சொல்லப்படும் மதிப்பிட்டுக் குறிப்பாகவே கருதப்படும்.

காளமாடன் என்னும் பைசன் :நிகழ்ந்தனவும் புனைவாக்கமும்

படம்
மாரி செல்வராஜ் இதுவரை இயக்கிய சினிமாக்கள் ஐந்து . முதல் படமான பரியேறும் பெருமாள் (2018) தொடங்கி கர்ணன்(2021) மாமன்னன்(2023) வாழை (2024) அண்மையில் வந்த பைசன் -காளமாடன் வரை ஒவ்வொன்றையும் அப்படங்கள் வந்த முதல் வாரத்தில் திரையரங்குகளில் ஒருமுறையும், அந்தப் படங்களைக் குறித்து எழுதுவதற்காக இணையச்செயலிகளில் இன்னொரு முறையும் பார்த்துள்ளேன். அப்படிப் பார்த்துப் புரிந்து கொண்ட நிலையில் மாரி செல்வராஜ் நிறுவியிருக்கும் தனித்துவமான கூறுகள் சிலவற்றை அடையாளம் காட்டத் தோன்றுகின்றது.