ஷங்கர்: பிரமாண்ட புனைவுகள்
தமிழக முதல்வரிடம் “முதலமைச்சா் பொது நிவாரண நிதி“க்காக ரூ. 3 லட்சமும், ஒரிசா புயல் நிவாரண நிதிக்காக ரூ. 2 லட்சமும் வியாழக்கிழமை வழங்கினார். “முதல்வன் பட இயக்குநா் ஷங்கர். புகைப்படத்துடன் இச்செய்திக் குறிப்பை வெளியிட்டிருந்தது தினமணி நாளிதழ் (26. 11. 1999) இக்குறிப்பில் முதல்வன் என்பது மட்டும் ஒற்றை மேற்கோள் குறிக்குள் தரப்பட்டிருந்தது. இதன் மூலம் தினமணி தனது வாசகா்களுக்கு உணா்த்த விரும்பிய குறிப்பு ஒன்று உண்டு.ஷங்கரின் சமீபத்திய படமான முதல்வன் திரைப்படத்தை பார்க்காத வாசகா்களுக்கு அந்தக் குறிப்பு போய்ச் சோ்ந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் முதல்வன் படத்தைப் பார்த்துள்ள வாசகா்களுக்கு அதன் குறிப்புத் தரும் அா்த்தங்கள் புரிந்திருக்கலாம். அந்தக் குறிப்பு தமிழ் சினிமாவிற்கும் தமிழக அரசியலுக்கும் இடையேயுள்ள உறவையும் முரணையும் விளக்கிக் காட்டும் அா்த்தங்கள் சார்ந்தது. அந்த அா்த்தங்களை ஒற்றை மேற்கோள் குறிப்பு மூலம் விளக்கிவிட முடியும் என தினமணி நினைத்துக் கொண்டதுதான் ஆச்சரியம், முதல்வன் படத்தை ஈடுபாட்டோடு பார்த்து, ஷங்கரின் சமூகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்த வாசகனுக்கு – பார்வையாளனுக்கு – இப்போதைய