பாலா: நம்பிக்கையூட்டுதலின் மறுபக்கம்
படைப்பு அல்லது கலை யாருக்குப் பயன்பட வேண்டும்? என்ற வினாவிற்கு “வாசகனுக்கு அல்லது பார்வையாளனுக்கு“ என்று சொல்லப்படும் விடையில், சொல்பவரின் சார்புநிலை வெளிப்படுவதில்லை. அதற்கு மாறாக, “கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே“ என்பதாகப் பதில் சொன்னால் அவா் இடதுசாரி என அறியப்படலாம். “தனிமனிதனின் மன விசாரணைக்கும் விரிவுக்குமே கலை இலக்கியங்கள்“ என்று சொன்னால் அவரை வலதுசாரி என அடையாளப்படுத்தலாம். ஆனால் “படைப்பு யாருக்குச் சொந்தம்…….? என்ற வினாவிற்கு வலதுசாரியும் இடதுசாரியும் தருகின்ற விடை ஒன்றுதான் “படைப்பு படைப்பாளிக்குச் சொந்தம்“ என்பதுதான் அந்தப் பதில்.