வீடற்றவர்களின் கதைகள்
மனிதர்களின் அகவுலகம் என்பது எப்போதும் புனைவுகளால் கட்டமைக்கப்பட்ட உலகமாகவே இருக்கிறது . ஒருவரின் நேரடி அனுபவம் என்பதுகூட ஒருவிதத்தில் புனைவுதான் . நேரடி அனுபவம்போல எழுதப்பெற்ற புனைவுகள் நம்பத்தகுந்த புனைவுகளாக இருக்கின்றன என்று சொல்லலாமேயொழிய , அவையெல்லாம் உண்மை என்ற சொல் தரும் பொருளைத் தந்துவிடுவதில்லை . எல்லாவகை எழுத்துகளுமே , நம்மைத் தவிர்த்து இன்னொருவரைப் பார்க்கும்போதும் , அவர்களைப் பற்றிக் கேள்விப்படும்போதும் , நம்மிடத்தில் நிறுத்திப்பார்த்து அவராக நம்மை நினைத்துக்கொள்வதில் விரிகிறது புனைவு .