தற்காலிகத்தைக் கொண்டாடுதல்
இதுதான் கவிதையின் வடிவம்; நாடகத்தின் கட்டமைப்பு இப்படித்தான் இருக்கவேண்டும்; சிறுகதையின் தொடக்கமும் முடிவும் இப்படித்தான் இருக்கவேண்டுமென வலியுறுத்தும் நபர்களைப் பின்னுக்குத்தள்ளி எழுத்தும் பனுவல்களும் கடந்துபோய்க்கொண்டே இருக்கின்றன. கலை இலக்கியங்களில் மட்டுமல்ல; எல்லாவகையான செயல்பாடுகளிலும் இயங்குநிலையிலும் வடிவச்சீர்மையை வலியுறுத்தும் போக்கு முடிந்துவிட்டது. நெகிழ்ச்சியும் ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாறுவதாகவும், மாறாமலேயே தோன்றுவதாகவும் இருக்கும் வடிவங்களே கொண்டாடப்படும் வடிவங்களாக நம்முன்னே அலைகின்றன.