இடுகைகள்

நம்பிக்கையை விதைத்து நம்பிக்கையை அறுவடை செய்யலாம்.

தமிழகத் தேர்தலை ஊடகங்கள் தான் முன் தொடங்கி வைத்தன. 24x7 செய்தி அலைவரிசைகளுக்கு நீண்ட நாள் தீனியாக இருக்கக் கூடியவை விபத்துகளோ, கலவரங்களோ, சாதனைகளோ, கொண்டாட்டங்களோ அல்ல. அவையெல்லாம் ஒரு நாள் பசிக்கான தீனிதான். தேர்தல் களியாட்டங்கள் நீண்ட நாளைக்கான உணவுச் சேகரிப்பு. எடுத்து எடுத்துப் பரிமாறலாம்.

எண்ணங்களால் இணையும் நிகழ்வுகள்: நேசமித்ரனின் பிரசவ வார்டு

படம்
பிரசவ வார்டு - இந்தமாத உயிர்மையில் வந்துள்ள சிறுகதையின் தலைப்பு. நிகழ்வெளியைத் தலைப்பாக்கிக் கதையை எழுதியுள்ளவர் நேசமித்ரன்.

தாரை தப்பட்டை என்னும் கீதாசாரம்

படம்
தனது படங்களுக்காக இந்திய அளவில் விருதுகளைப் பெற்றுள்ள -தமிழின் முக்கிய இயக்குநராகக் கருதப்படுகிற பாலாவின் ஏழாவது படம் தாரை தப்பட்டை. இவரைப் பாராட்டும் மணிரத்னம்  ‘அவ்வப்போது வேறுவேறு சூத்திரங்களை முன்வைத்துத் திரைக்கதையை அமைத்துப் படங்களை இயக்குகிறார்; ஒரே சூத்திரத்தைப் பின்பற்றுவதில்ல்லை’ என்கிறார்.  சேது, நந்தா, பிதாமகன் வரையிலான பாலாவின் முதல் மூன்று படங்கள் வரையிலும் வித்தியாசங்களைத் தேடும் இயக்குநர் பாலா என்றொரு தோற்றம் இருந்தது. ஆனால் நான் கடவுள், அவன் இவன், பரதேசி என பிந்திய மூன்று படங்களோடு தாரை தப்பட்டை என்னும் ஏழாவது படத்தையும் பார்த்தபின்பு, ஒட்டுமொத்தமாக அவரது எல்லாப் படங்களுமே ஒரேவிதக் கருத்தை முன்வைப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. 

எளிமையின் அழகியல் : கண்டராதித்தனின் திருச்சாழல்

எனது கவிதை வாசிப்பு எளிமையானது. தேடிக்கண்டடைவது. தேடும்போது சலிப்பில் விலகிப்போவதுண்டு. நினைவுகளால் நிறுத்தித் தொடர்வதுண்டு. நிறுத்தப்பட்டது நினைவுக்கு வராமலே போவதுமுண்டு. கவிதை வாசிப்பில் பெரும்பாலானவர்களின் வாசிப்பு இப்படித்தான் என நினைக்கிறேன். ஒன்று நினைவிலாடும்போது திரும்பவும் தேடிப்போகத்தூண்டும். சிரிப்பும் நகைப்பும் சிந்தனைத் தெரிப்பும் கைகூடிவந்தால் நீண்ட பயணம் நிச்சயம்.