இடுகைகள்

சாகித்திய அகாதெமி: இலக்கியவியலின் போர்க்களம்

படம்
“சாகித்திய அகாதெமியின் விருதுகளைத் திரும்பத்தருதல்” என்பதற்குள் இப்போது நுழைய வேண்டியதில்லை. ‘திருப்பித் தந்தேயாக வேண்டும்’ என்று எதிர்பார்க்கவும் தேவையில்லை. அது அவரவர் விருப்பமும் நிலைபாடும் சார்ந்தது. அதேநேரத்தில் அரசதி காரமும், அதன் துணையில் வளரும் பிளவுசக்திகளும் தொடர்ந்து சகிப்பின்மையை விதைக்கும்போது எழுத்தை வெளிப்பாட்டுக் கருவியாகக் கொண்டியங்கும் ஓர் எழுத்தாளன், தனது எதிர்ப்புணர்வைக் காட்டாமலும் இருந்து விடக்கூடாது. சகிப்பின்மையையும் தேசத்தின் பல்லிணக்க நிலைக்கெதிரான கருத்துநிலையையும் முன்வைத்து இந்தியா முழுவதும் நிகழ்ந்த போராட்டத்தில் தானே முன்வந்து சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எந்தத் தமிழ் எழுத்தாளரும் பங்கேற்கவேண்டுமென நினைக்கவில்லை என்பது தமிழ் எழுத்துலகத்திற்கு ஒரு களங்கம் என்பதிலும் சந்தேகமில்லை.

கலை - கலைஞன் - காலம் :எஸ். வைத்தீஸ்வரனின் கதையெழுப்பும் விசாரணை

  இலக்கியப்பனுவலென நினைத்துக் கொண்டு வாசிக்கத் தொடங்கி முடிக்கும் எல்லாப் பனுவல்களும் அந்த உணர்வை தந்துவிடுவதில்லை. சில பனுவல்களை அப்படி நினைக்காமலேயே வாசிக்கத் தொடங்கி முடிக்கும்போது ‘நீ வாசித்தது கூடுதல் கவனம் செலுத்தி வாசித்திருக்கவேண்டிய இலக்கியப்பனுவல்’ என மனம் சொல்லும்.  திரும்ப வாசிக்கும்போது இன்னொரு புரிதலும் உருவாகும். அப்படியான புரிதல்கள் கிடைக்கவும், உணர்வெழுச்சி உண்டாகவும் காரணமாக இருப்பவை எழுதுகிறவர் உருவாக்கித் தரும் பின்னணிகள் சார்ந்தவைகள் என்பது ஏற்கத்தக்க ஒன்று

பயிலரங்கு அறிவிப்பு

  தமிழியல் ஆய்வுகள் :  நிகழ்ந்துள்ளனவும்                               நிகழ்த்தப்படவேண்டியனவும்    

மழைக்காலப் பாடல்கள்

இந்தவருடத்து மழை என்னைக் கவிதைகள் எழுதவைத்துவிட்டது நன்றி மழைக்கு---

காதல்: காமம் - பெண் கவிதைகள்

இந்த மூன்று பெண்களின் - சாய் இந்து, பாலைவன லாந்தர், கவிதா ரவீந்திரன் -கவிதைகளை முகநூலில் மட்டுமே வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஓராண்டுகளாக இவர்களின் கவிதைகள் வாரத்திற்கு ஒன்றிரண்டாவது வாசிக்கக் கிடைத்துவிடும். அளவையும் கூற்றுகளையும் வைத்துக் குறுந்தொகை போலவும் நற்றிணை போலவும் அகநானூறு போலவும் என நினைத்துக்கொள்ளும்போது மென்மையான சிரிப்பொன்று ஓடி மறைந்துவிடும்.

தொலைந்துபோன அறிவுவாதம்

நீண்டகாலமாக நேரடியாகச் சந்திக்காத நண்பர்கள் பலரைத் தற்செயலாகச் சந்திக்க நேர்ந்தது. நான் இருக்கும் பாளையங் கோட்டைக்கு வந்தவர்களோடு நின்று நிதானமாகப் பேசும் நிலை இல்லை. நான் இல்லை என்பதைவிடஅவர்கள் இல்லை என்பதே உண்மை. அவசர அவசிய வேலை ஒன்றிற்கான பதற்றம் எப்போதும் போல அவர்களிடம் இருந்தது.

பேரா. நொபுரு கரஷிமா என்னும் தமிழியல் ஆய்வாளர்

படம்
ஒரு பெயரை உடன்பாட்டுநிலையில் தெரிந்து கொள்வதைவிட எதிர்மறையாகத் தெரிந்து கொள்வதே தமிழ்நாட்டில் அதிகம் நடக்கும். பல உதாரணங்கள் இருக்கின்றன என்றாலும், வரலாற்றறிஞர் பேரா. நொபுரு கரஷிமா (!933, ஏப்ரல், 24 - 2015 நவம்பர், 26) அப்படி அறியப்பட்ட பெயர்களுள் ஒருவராக இருந்தார் என்பதுதான் வருத்தமான வரலாறு. தி.மு.க. ஆட்சியின்போது (2006-2011) நடந்த செம்மொழி மாநாட்டை யொட்டித்தான் அவரது பெயர் பரவலாக அறிய வந்தது.