அடுக்குமாடிக் குடியிருப்புகள் வாழ்க்கை
தூங்கும் குழந்தைப் பொம்மைகள் அடுக்குமாடிக் குடியிருப்பு வாழ்க்கை தமிழ்நாட்டின் எல்லா நகரங் களுக்கும் பொதுவானதாக இன்னும் மாறிவிடவில்லை. நான் வசித்துக் கொண்டிருந்த திருநெல் வேலி நகரத்தில் அதிகபட்சம் ஐந்து மாடிக் கட்டங்களைத் தாண்டியதாகக் குடியிருப்புகள் கட்டப்படவில்லை. அரசாங்க ஊழியர்களுக்குக் கட்டிக் கொடுக்கும் என்.ஜி.ஓ. காலனிகளும் கூட ஒரு மனையளவு நிலத்தில் இரண்டு வீடுகள் அல்லது கீழே இரண்டு மேலே இரண்டு என நான்கு வீடுகள் கொண்டதாகவும் தான் கட்டப்பட்டுள்ளன. மிகக் குறைந்த சாக்ரட்ஸ் வாசலில் வருவாய்ப் பிரிவினர்களுக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகள் கூட ஐந்துமாடிகளைத் தாண்டிவிடவில்லை. சுற்றிச் சுற்றி மேலேறும் படிக்கட்டுகள் வழியாகவே மொட்டைமாடிகளுக்குச் சென்று துணி காயப்போடும் பெண்களின் அவஸ்தையை நினத்துக் கொண்டால் போதும். அடுக்கு மாடிக் குடியிருப்பை வேண்டாம் என்று சொல்ல விடலாம். திருநெல்வேலியில் வேண்டாம் என்று சொல்பவர்களின் பிள்ளைகள் சென்னையின் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் தான் தஞ்சம் புகுந்து கொண்டிருக்கிறார்கள். இரண்டு பேரும் வேலைக்குப் போகும் சூழலில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் பாதுக