வலிய எழுதப்பட்ட வரலாற்றின் பக்கங்கள்:சு.சமுத்திரத்தின் முகம் தெரியா மனுசி
விளிம்புநிலை வரலாற்று ஆய்வுகள் என அழைக்கப்படும் ஆய்வுகள் பெரும் பாலும் வட்டாரங்களையே தரவுகளுக்கான களன்களாகக் கொள்கின்றன. அவ்வட்டாரத்திலும் கூட முழுமையான பாதிப்பை ஏற்படுத்தும் நிகழ்வுகளே வரலாற்றுக்கான தரவுகளாக அமைய முடியும் எனக் கருதாமல் ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுவின் அகப் புற மாற்றங்களுக்குக் காரணமாக இருக்கும் பிரச்சினைகளைக் கூட விளிம்புநிலை ஆய்வுகள் முக்கியத்துவப் படுத்தி ஆய்வுகளைச் செய்கின்றன.