தி.ஜானகிராமனின் நாடகங்கள்
தமிழின் புனைகதைப் பரப்பிற்குத் தனது கதை நிகழ்வுப் பரப்பாலும், அப்பரப்பில் உலவிய விதம் விதமான கதாபாத்திரங்களாலும்-குறிப்பாகப் பெண் கதாபாத்திரங்களின் புறவெளியின் நிலைபாட்டையும் மனத்தின் சுழற்சி யையும் எழுதிக்காட்டியதின் மூலம்-புதிய வீச்சையும் அலையையும் உருவாக்கித் தந்தவர் தி.ஜானகிராமன். நவீனத்தமிழ் இலக்கியப் பரப்பில் தனது சிறுகதைகளாலும் நாவல்களாலும் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ள தி.ஜானகிராமன் நாடகங்களையும் எழுதியுள்ளார்