இந்தியச் சூழலில் ஒடுக்கப்பட்டோர் அரங்கும் ஒடுக்கப்படுவோருக்கான அரங்கும்
‘கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே’ என்ற வாக்கியத்தில் உள்ள ‘மக்கள்’ என்ற சொல் பல தளங்களில் வெவ்வேறு அர்த்தங்களைத் தரக்கூடியது என்பதை இனியும் விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை. மக்கள் என்பது பொதுச் சொல் என்று கருதி உலகில் உள்ள எல்லா மக்களுக்கும் கலை இலக்கியம் பொதுவானது எனப் பொருள் கொள்ளல் இப்பொழுது சாத்தியமில்லை. உலகம் பற்றிய - உலகத்தில் உள்ள உயிரிகள் மற்றும் பொருள்கள் பற்றிய அறிவுத் தோற்றவியல் சமீபத்தில் புதிய விளக்கம் ஒன்றைத் தந்துள்ளது.