இடுகைகள்

மரத்தில் மறைந்த மாமத யானை மதத்தில் மறையும் மாமத யானை

நாடகக்காரரும் நாடகம் பற்றிய பதிவுகளைப் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்துசெய்து வருபவருமான சி.அண்ணாமலை எழுதி காவ்யா வெளியிட்டுள்ள நாடகம் வெங்காயம்.வெங்காயம் -பெரியார் பற்றிய நாடகம் என்ற குறிப்புடன் வந்துள்ள இந்த நாடகப்பிரதியைப் பற்றிப் பேசத் தொடங்கும் போது மிகுந்த எச்சரிக்கையோடு பேச வேண்டியுள்ளது. ஏனென்றால் தமிழ் நாட்டில் நவீன நாடகத்தளத்தில் செயல்படுகிறவர் களாகக் கருதிக் கொள்ளும் பலரும் நாடகத்தைப் பற்றிய விமரிசனங்களையும், நாடகப் பிரதிகளைப் பற்றிய விமரிசனங்களையும், விமரிசனங்களாகக் கருதி விவாதிப்பதில்லை என்பது எனது சொந்த அனுபவம்.

உணர்வுகளை எழுதும் தர்க்கம்:சேரனின் கவிதைகள்

மூன்று தெருக்கள்  என்று தலைப்பிட்ட இந்தக் கவிதை சேரனின் சமீபத்திய தொகுப்பில் உள்ள ஒரு கவிதை [பக்.45-46].இதை முதல் தடவையாக வாசித்த உடனேயே ‘ஒரு கவிதை எளிமையானதாக இருக்கிறது’ என்பதற்கு உதாரணமாகச் சொல்லத் தக்க கவிதை இது என எனக்குத் தோன்றியது. தொடர்ந்து கவிதைகளை வாசித்துப் பழக்கப்படுத்தி வரும் கவிதை வாசகன், முதல் வாசிப்பில் ஒரு கவிதையின் நோக்கம் என்ன? கவிதைக்குள் கவிஞன் உண்டாக்கிக் கடத்த விரும்பிய உணர்வின் தளம் எத்தகையது இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் நிலையில் அந்தக் கவிதையை எளிய கவிதை என அடையாளப் படுத்திக் கொள்கிறான். அப்படியான அடையாளத்திற்குள் அடைபடாமல் தப்பிக்கும் கவிதை, திரும்பவும் வாசிக்கும்படி தூண்டும். திரும்பத் திரும்ப வாசிக்கும் போதும் தன்னை அடையாளப்படுத்தாமல் போய்விடும் நிலையில் வாசகனிடம் தோன்றுவது அலுப்பு. தொடர்ந்த முயற்சிக்குப் பின்னும் வாசகனின் மனப்பரப்புக்குப் பிடிபடாமல் அலுப்பை உண்டாக்கி, ஒதுக்கிய கவிதையை வாசகனும் ஒதுக்கி வைத்து விட்டு ஒதுங்கிப் போய்விடுகிறான். கவிதை வாசிப்பில் நடக்கும் இந்த இயக்கம் பொதுவானது.சேரனின் மூன்று தெருக்கள் என்ற தலைப்பிட்ட அந்தக் கவ

இயக்கத்தை முன்னெடுக்கும் எழுத்து

பலதுறைகளிலும் நிபுணத்துவம் பெற்ற ஒரு சிந்தனையாளர் ஒரு பத்திரிகையில் தொடர்ந்து தனது கருத்துக்களை எழுதிவரும் ஒருவடிவம் பத்தி எழுத்து. ஒரு துறையின் நிபுணர் அவர்சார்ந்த துறையில் நடந்துவரும் மாற்றங்கள், போக்குகள் பற்றிக் கருத்துரைக்கவும் ஏற்ற வடிவமாகவும் இந்தப் பத்தி எழுத்து முறை இருக்கிறது. ஆங்கிலப்பத்திரிகைகளில் மட்டுமே இருந்துவந்த பத்தி எழுத்து என்னும் வடிவம், சமீப ஆண்டுகளில் தமிழிலும் முக்கியம் பெற்று வருகிறது.பத்தி எழுத்தின் மிகமுக்கியமான அம்சம் அதன் சமகாலத்தன்மை தான். தனது சமகால நிகழ்வுகளைக் கவனித்து, அதனை அரங்கேற்றும் நபர்கள் அல்லது கருத்துகள் பற்றிய பின்னணிகளை அறிந்து அவற்றின் மீதான விமரிசனங்கள்; ஏற்பு அல்லது மறுப்புகள்; கூடுதல் தகவல் அல்லது மறைக்கப்பட்ட செய்திகள்; நேர்மறை அல்லது எதிர்மறை விளைவு கள் எனத்தொடர்ந்து வெளிப்படுத்த்¢க்கொண்டே இருக்க வேண்டும்.

தொடர் ஓட்டக்காரனின் பிடிவாதங்கள் (அ.மார்க்ஸின் நான்கு நூல்கள்)

படம்
2001 தொடங்கி 2003 ஆம் ஆண்டு வரை பல்வேறு பத்திரிகைகளில் அ.மார்க்ஸ்,எழுதிய கட்டுரைகளைக் கருப்புப் பிரதிகள் என்னும் புதிய பதிப்பகம் நான்கு தொகுப்புக்களாகத் தொகுத்து வெளியிட்டுள்ளது. ஒரே தேதியில் ஒரே பதிப்பகத்தின் வழியாக ஓர் ஆசிரியர் தனது நான்கு நூல்களை வெளியிடுவது என்பது ஒரு சாதனை தான். கடந்த கால் நூற்றாண்டுக் காலத் தமிழ்ச் சிந்தனையில்,- குறிப்பாகத் திறனாய்வுத் துறை சார்ந்த சிந்தனையில்-குறிப்பிடத்தக்க பங்களிப்புக்கள் செய்துள்ள அ.மார்க்ஸ் இச்சாதனைக் குரியவர்தான் என்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்க வாய்ப்பில்லை.

முப்பரிமாணமென்னும் மாயவலை.

படம்
கயிறு திரித்தல் தமிழ் நாட்டுக் கிராமங்களின் ஒரு கைத்தொழில். வணிகரீதியாக விற்பதற்காக என்றில்லாமல் விவசாயிகள் அவர்களின் தேவைக்கென அவர்களே கயிறுகளைத் திரித்து உருவாக்கிக் கொள்வார்கள். என்னுடைய தந்தை எங்கள் வீட்டில் இருந்த மாடுகள், ஆடுகள் போன்ற வற்றைக் கட்டுவதற்கும்,மூக்கணாம் கயிறுகளுக்கும் தேவையான கயிறுகளை அவரே தான் திரிப்பார்.

தொ.பரமசிவன்: அலைப்பரப்பில் தவிக்கும் கப்பல்

  பேராசிரியர் வீ.அரசு ஒருங்கிணைப்பில், கங்கு வெளியீடாகத் தமிழில் சில ‘அரசியல்’ நூல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. எல்லாமே அரசியலிருந்து தொடங்குகிறது அல்லது அரசியலை நோக்கிப் போகிறது [Everything must be from politics or towards politics ] என நம்பும் கங்கு தொடர்ந்து எட்டுச் சிறு வெளியீடுகளுக்கான திட்டத்தையும் அவற்றை எழுதுவதற்குக் கைவசம் அறிஞர்களையும் வைத்திருக்கிறது. ராஜ்கௌதமனின் தலித்திய அரசியல், ந.முத்துமோகனின் இந்திய தத்துவங்களின் அரசியல் என்ற இரண்டு நூல்களை அடுத்து அந்த வரிசையில் இப்பொழுது வந்துள்ள சமயங்களின் அரசியல் நான்காவது நூல்.இந்நூலை எழுதியுள்ள தொ.பரமசிவன் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறைப் பேராசிரியர் தமிழ் நாட்டின் சமுதாய வரலாற்றை வாய்மொழி வழக்காறுகளின் வழியாக ஆய்வு செய்யும் ஆய்வாளர்களுள் ஒருவராக அறியப்படுபவர்.அரசியல் என்ற பின்னொட்டோடு நூல்கள் வெளியிடும் கங்குவின் தொடக்கம் எஸ்.வி.ராஜதுரையின் பூர்தியவும் மார்க்சியமும். . நிகழ்கால வாழ்வில் தொலைக்காட்சி போன்ற நவீன ஊடகங்களின் இயங்குநிலை,ஊடகச் செயல்பாடுகளைத் தாண்டி அரசியல் செயல்பாடுகளாக இர