இடுகைகள்

முப்பரிமாணமென்னும் மாயவலை.

படம்
கயிறு திரித்தல் தமிழ் நாட்டுக் கிராமங்களின் ஒரு கைத்தொழில். வணிகரீதியாக விற்பதற்காக என்றில்லாமல் விவசாயிகள் அவர்களின் தேவைக்கென அவர்களே கயிறுகளைத் திரித்து உருவாக்கிக் கொள்வார்கள். என்னுடைய தந்தை எங்கள் வீட்டில் இருந்த மாடுகள், ஆடுகள் போன்ற வற்றைக் கட்டுவதற்கும்,மூக்கணாம் கயிறுகளுக்கும் தேவையான கயிறுகளை அவரே தான் திரிப்பார்.

தொ.பரமசிவன்: அலைப்பரப்பில் தவிக்கும் கப்பல்

  பேராசிரியர் வீ.அரசு ஒருங்கிணைப்பில், கங்கு வெளியீடாகத் தமிழில் சில ‘அரசியல்’ நூல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. எல்லாமே அரசியலிருந்து தொடங்குகிறது அல்லது அரசியலை நோக்கிப் போகிறது [Everything must be from politics or towards politics ] என நம்பும் கங்கு தொடர்ந்து எட்டுச் சிறு வெளியீடுகளுக்கான திட்டத்தையும் அவற்றை எழுதுவதற்குக் கைவசம் அறிஞர்களையும் வைத்திருக்கிறது. ராஜ்கௌதமனின் தலித்திய அரசியல், ந.முத்துமோகனின் இந்திய தத்துவங்களின் அரசியல் என்ற இரண்டு நூல்களை அடுத்து அந்த வரிசையில் இப்பொழுது வந்துள்ள சமயங்களின் அரசியல் நான்காவது நூல்.இந்நூலை எழுதியுள்ள தொ.பரமசிவன் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறைப் பேராசிரியர் தமிழ் நாட்டின் சமுதாய வரலாற்றை வாய்மொழி வழக்காறுகளின் வழியாக ஆய்வு செய்யும் ஆய்வாளர்களுள் ஒருவராக அறியப்படுபவர்.அரசியல் என்ற பின்னொட்டோடு நூல்கள் வெளியிடும் கங்குவின் தொடக்கம் எஸ்.வி.ராஜதுரையின் பூர்தியவும் மார்க்சியமும். . நிகழ்கால வாழ்வில் தொலைக்காட்சி போன்ற நவீன ஊடகங்களின் இயங்குநிலை,ஊடகச் செயல்பாடுகளைத் தாண்டி அரசியல் செயல்பாடுகளாக இர

சுந்தரராமசாமி என்னும் நவீனத்துவக் காதலன்

தமிழ்ச் சிந்தனைமரபு,  நவீனத்துவத்தைத் தனதாக்கிக்கொண்டதின் தொடக்கப் புள்ளியின் வெளிப்பாடு யார்? எனக் கேட்டால் சட்டென்று வரக் கூடிய பதில் ‘ கவி பாரதி ’ என்ற பெயர்தான். பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி ஆண்டுகளில் நடந்து விட்ட அந்தத் தொடக்கத்தை இன்று பலரும் மறுபரிசீலனை செய்து கொண்டிருக்கின்றனர். அத்தகைய மறுபரிசீலனைகள் பல நேரங்களில் படைப்பாளிகளை அவர்கள் தோன்றி வாழ்ந்த சூழலில் வைத்து விமரிசிக்காமல் இன்றைய சூழலில் வைத்து விமரிசித்துப் புதிய அடையாளங்களைச் சூட்டி வருகின்றன. இத்தகைய மறுபரிசீலனைகள் தவறான நோக்கம் கொண்டன என்று சொல்ல முடியா விட்டாலும் சில நேரங்களில் ஆபத்தான போக்குகளுக்கு இட்டுச் செல்லக் கூடியன என்பதையும் மறுத்து விட முடியாது.

தொட்டால் சுடாத பெருநெருப்பு

கரையில் நிற்கும் போதுதான் கப்பல்  மிகுந்த பாதுகாப்புடன் இருக்கிறது -  இந்த வாக்கியம் மிகவும் உண்மையான வாக்கியம். ஆனால் கரையில் நிற்பதற்காகக் கப்பல் கட்டப்படவில்லை என்பது அதைவிட உண்மையான வாக்கியம்.