இடுகைகள்

பிப்ரவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அண்மைக் கதைகள் இரண்டு- 1.சரவணன் சந்திரன்

படம்
அவரது கதைககளுக்குள்  பெரும்பாலும் தன்னை ஒரு பாத்திரமாக்கி – கதைசொல்லும் இடத்தில் நிறுத்திக்கொண்டு சொல்கிறார். இந்தச் சொல்முறையில் கதைக்கு உண்மைத்தன்மையும் நம்பகத்தன்மையும் கிடைக்கும் என்றாலும் புனைவுத்தன்மை குறைவு. எழுதுபவரைப் பற்றிய தகவல்கள் கிடைக்கும்போது புனைவுத்தன்மை குறைந்து கட்டுரையை நெருங்கிவிடும். இதனை முன்பே சில     தடவைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறேன். என்றாலும் அந்த சொல்முறை அவருக்கு உவப்பானதாகவும் நெருக்கமானதாகவும் இருப்பதாக நினைத்திருக்கலாம்.

இந்து சமயத்தைப் புதுப்பித்தல்: ஈசா யோகியின் மகாசிவராத்திரிகள்

படம்
திருவிழாக்காலத்தில் கிராமத்தின்/ நகரத்தின் மொத்த வெளியும் பக்தியின் வெளியாகவும் கொண்டாட்டத்தின் மேடையாகவும் ஆக்கப்படுவது நீண்டகால நடைமுறை. அமெரிக்க அரங்கியல் செயல்பாட்டாளர் ரிச்சர்ட் செக்னர் RICHARD SCHECHNER) டெல்லிக்குப் பக்கமாக நிகழ்த்தப்பெற்ற ராம்லீலா நிகழ்வைப் பார்த்தபின்பே தனது அரங்கச் செயல்பாடுகளைச் சூழல் அரங்கு (ENVIRONMENT THEATRE ) என்ற வடிவத்திற்கு மாற்றினார். இந்துசமயத்தின் எல்லாவகை ஆன்மீகமும் சடங்குகளும் திருவிழாக்களைக் கொண்டாட்டங்களும் களியாட்டங்களும் இணைந்த பெருநிகழ்வுகளாகக் கட்டமைத்ததின் வழியாக நிலைபெற்றுள்ளன.ஜக்கி வாசுதேவின் மகா சிவராத்திரிக் கொண்டாட்டங்கள் நவீன சூழல் அரங்க நிகழ்வு. அவ்வப்போது அது குறித்து எழுதிவந்துள்ளேன்.

தண்ணீர்

தண்ணீர் தண்ணீர் தண்ணீர் தண்ணீர் தண்ணீர் தண்ணீர் *************** இது ஒரு ஆற்றுகைப் பனுவல் (PERFORMANCE TEXT) இப்பனுவலில் உள்ள கவிதை வரிகளை எழுதிய கவிகள் சி.சுப்பிரமணிய பாரதி வ.ஐ.ச.ஜெயபாலன் கோடாங்கி தேன்மொழிதாஸ் ஆதவன் தீட்சண்யா மகேஷ் பொன் ****** ஆற்றுகைப் பனுவலாக்கம் : அ.ராமசாமி