இடுகைகள்

தொடரும் கதைவெளி மனிதர்கள்

படம்
இப்படியான சிறுகதைத் தொகுதியை ஒரே மூச்சில் வாசித்துவிட முடியாது. ஒருவர் எழுதிய 14 கதைகளென்றால் தொடர்ச்சியாக வாசித்துக்கொண்டே போகலாம். இரண்டு அல்லது மூன்றுநாளில் முடிந்துபோகும். அகநாழிகை பதிப்பக வெளியீடாக, ‘பொன்.வாசுதேவன்’ தேர்வுசெய்து தொகுத்துள்ள “விளிம்புக்கு அப்பால்” சிறுகதைத் தொகுதியில் 14 பேரின் 14 கதைகள் இருக்கின்றன.

அகத்திலிருந்து புறம்நோக்கிய நகர்வு

படம்
ஔவையும் கபிலனும் செவ்வியல் கவிதைகள் எழுதியவர்களுள் முக்கியமானவர்கள். அவர்கள் தொடங்கிவைத்த தமிழ்க்கவிதை மரபை இன்றும் தொடர்வது யாரெனத்தேடியது மனம். செவ்வியல் மரபாக நாம் நினைத்துக்கொள்ளும் - கட்டமைத்துக்கொள்ளும் - தொடக்கத்தின் முதன்மை ஆளுமைகளாக யாரையெல்லாம் சொல்லலாம் என்ற தேடலைச் செய்தது மனம். முதல் பெயராக வந்தவள் கவி ஔவை.

கமலென்னும் கட்டியங்காரன்

படம்
  முன்குறிப்புகளோடு ஒவ்வொரு பாத்திரத்தையும் காட்டி, அவர்களின் முன்னடையாளங்களோடு தொடர்புடைய ஆட்டம்பாட்டம் கொண்டாட்டமெனக் கலக்கியெடுத்து உருவாக்கப்பட்ட ஆரம்பம் புதுநிகழ்ச்சிக்கான ஆரம்பம் என்ற அளவில்தான் ஈர்த்தது. அந்தத் தொடக்கம், அடுத்தடுத்த வாரங்களில் நடந்த சின்னச்சின்ன நிகழ்வுகள் வழியாக நல்திற நாடகத்தின் முடிச்சாக(Conflict) மாறியது. அம்முடிச்சுக்குப்பின்னால் பிரிந்துநின்ற அணிச்சேர்க்கை ஒருகுடும்பத்திற்குள் பிரிந்துந ிற்கும் பங்காளிகள் அல்லது உறவுகள் என்பதைத்தாண்டியது.

உதைவாங்கிக் கிளம்பிய வண்டி:

படம்
தமிழ்நாட்டு மாணாக்கர்களுக்குத் தரப்பட வேண்டிய கல்வி குறித்த பெருநிகழ்வு (ஜூலை 20-22) நடந்து முடிந்திருக்கிறது. அந்நிகழ்வில் பங்கேற்ற கல்வியாளர்களும் வல்லுநர்களும் பங்கேற்பாளர்களும் பலவிதமாக இருந்தார்கள். பலவிதமாகப் பேசினார்கள். பலவிதமான முன்மொழிவுகள் நிகழ்ந்தன. பெரும்பாலும் தமிழ்ப் பாடத்திட்டங்களை மாற்றம் செய்வதற்காக ஏற்பாடுசெய்யப்பட்ட அமர்வுகளில் இரண்டு நாட்களிலும் அமர்ந்திருந்தேன்; கேட்டுக்கொண்டிருந்தேன்; பலருடன் உரையாடினேன். அந்த அமர்வுகள் அண்ணா நினைவுநூற்றாண்டு நூலக அரங்குகளில் நடந்தன.