இடுகைகள்

கவிதை முழுமையடையும் தருணம் விலகலாகும் வேளையும்

படம்
அனாரின் ஆழ்தொலைவின் பேய்மை ======================================== இப்போது வரும் கவிதைத்தொகுதிகளில் ஒன்றைக் கையில்கொடுத்து விமரிசனம் செய்யவேண்டும் அல்லது விளக்கிப்பேசவேண்டுமென்றால் திணறல் ஏற்படுவது தவிர்க்கமுடியாதது. அந்தத் திணறல் காரணமாகவே தமிழின் முக்கியக் கவிகள் பலரைப்பற்றியும் எனது வாசிப்பனுபவத்தைப் பகிரிந்துகொள்ளாமல் தவிர்த்துக்/ தவித்துக்கொண்டிருக்கிறேன். அனாரின் கவிதைகளின் தொகுதியும்சரி, தனித்தனிக் கவிதைகளும்சரி அந்தத் திணறலை ஏற்படுத்துவதில்லை.

விலகும் மையங்கள்: லட்சுமி சரவணக்குமாரின் படையலும், விநாயமுருகனின் ஞமலி போல் வாழேலும்.

படம்
இரண்டு கதைகளிலும் பின்னணிதான் கவனிக்கவைக்கின்றன .   என்றாலும் இரண்டு கதை களி லும் பின்னணிகள் ஒன்றல்ல . ஒன் று இடப்பின்னணி யால் கவனம் பெறுகின்றது.   இன்னொன்றோ காலப்பின்னணி யால் கவனம் பெறுகின்றது.

வாசிப்பின் மீதான குறிப்புகள்

வாசிப்பைக் காற்றில் கரைத்துவிடுவதற்குப் பதிலாக முகநூலில் பதிவுசெய்யலாம். முகநூலில் ஒருமாதத்திற்குப் பின் தேடுவது சிரமம். அதனால் இங்கேயும் போட்டுவைக்கிறேன்

மதுரை மாவட்டத் திருவிழாக்கள்...

திருவிழாப் பார்க்கும் ஆசை யாருக்குத்தான் இருந்ததில்லை. சின்ன வயசிலிருந்தே பலவகையான திருவிழாக்களைப் பார்த்திருக்கிறேன். வருடந் தோறும் எனது கிராமத்தில் நடக்கும் மாரியம்மன் திருவிழாவைத் திருவிழா என்று சொல்வதில்லை. ‘சாட்டு’ என்றுதான் சொல்வோம். வைகாசிமாதம் கடைசி செவ்வாய் ஊர்கூடி மாரியம்மன் சாட்டு நடந்தால், அடுத்த வாரம் செவ்வாய் ‘கலயம்’ எடுப்புவரை ஊர் சுத்தமாக இருக்கும்.