இடுகைகள்

தமிழ் என்பது நபர்கள் அல்ல

படம்
வெற்றித்தமிழர் பேரவை - 2014,நவம்பர்,11 இல் உத்தர்கண்ட் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் என்பவருக்குச் சென்னையில் பாராட்டுவிழா ஒன்றை நடத்திய அமைப்பு அல்லது அறக்கட்டளை. இவ்வமைப்பு பாடலாசிரியர் வைரமுத்துவின் தமிழ்ப் பணியோடு தன்னை இணைத்துக் கொண்ட ஒன்று.

ஜெயமோகனின் வெண்முரசு வெளியீட்டு விழா: பின் நவீனத்துவ கொண்டாட்டங்களின் வகைமாதிரி

படம்
வெண்முரசு வெளியீட்டுவிழாவைச் சென்னையில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நடத்தப் போகிறது. இந்நிகழ்வின்மூலம் திரு மு. கருணாநிதி, இரா. வைரமுத்து ஆகியோர் வரிசையில் இணைக்கப்படுகிறார் ஜெயமோகன். தங்களின் எழுத்துகளைச் சந்தைப்படுத்தும் உத்தியில் இதுவரை அவ்விருவரும் பின்பற்றிய அதே உத்திதான் இதுவென்றாலும் நிலைப்பாட்டில் பாரதூரமான வேறுபாடுகள் உள்ளன.

பிசாசு எழுதுதல் ( நவீன தமிழ்க் கவிகளின் கவிதைகள்)

படம்
இன்னொருவரால் எழுதமுடியாத பனுவல்கள் இவை என விமரிசனக் குறிப்புகளை இனியும் எழுதமுடியாது; ஏனென்றால் எல்லாப்பனுவல்களும்  ஆசிரிய நோக்கப்படி செய்யப்பட்டவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பனுவல்களுக்கும் எழுதுபவர்களுக்குமான உறவுகுறித்து மறுபரிசீலனைகளைப் பின்நவீனத்துவம் முன்வைத்தது.  இந்தப் பின்னணியில் பின்வரும் கவிதைகள் குழுவின் ஆக்கம் என்பதோடு வாசிக்கப்படவேண்டியவை.

மெட்ராஸ் - தலித் அரசியல் மீதான விமரிசனம்

படம்
திருநெல்வேலி  ‘பாம்பே’யில் மெட்ராஸ். ஆயுத பூசையன்று இரண்டாம் ஆட்டம் பார்த்தேன். படம் பார்த்தவர்கள் பலரும்  ‘பார்க்க வேண்டிய படம்’ என்றே சொல்லியதை இந்த வாரம் முழுக்க என் செவிகள் கேட்டிருந்தன. ஒரு அரங்கில் ஓடுவதற்கே இப்போது வரும் படங்கள் திண்டாடிக் கொண்டிருக்கும் வேலையில் திருநெல்வேலி போன்ற இடைநகரங்களிலேயே இரண்டு அரங்குகளில் நிறைந்த காட்சிகளாக ஒருவாரத்தைத் தாண்டி விட்டது மெட்ராஸ்.