இடுகைகள்

பாலாவின் பரதேசியைப் பற்றியும் சுற்றியும்

 படம் வருவதற்கு முன்பாகப் பலவிதமான எதிர்பார்ப்புகளையும் சர்ச்சைகளையும் உருவாக்கிவிட்டு படத்தை வெளியிடுவது இப்போது ஓர் வியாபார உத்தியாக இருக்கிறது. பாலாவின் பரதேசியும் அப்படியான உத்திக்குப் பிறகுதான் திரையரங்குகளுக்கு வந்தது. போலந்தின் தலைநகர் வார்சாவில் அந்தப் படத்தைத் திரையரங்கில் பார்க்கும் வாய்ப்பு இல்லை. இணையங்களில் கிடைக்கும் இணைப்புகள் வழியாகத்தான் பார்க்க முடிந்தது. நான் பார்த்து முடிப்பதற்குள் பலவிதமான விமரிசனங்கள் அந்தப் படத்தை நோக்கி எழுதப்பட்டன. நேர்மறையான விமரிசனங்களை விடவும் எதிர்மறை விமரிசனங்களே அதிகம் வந்தன. கதை உருவாக்கம், திரைக்கதை ஆக்கம், வசனம் எழுதுபவரின் பின்னணி, படப்பிடிப்பு நிகழ்வுகள், பாடல் வெளியீட்டு நிகழ்வு எனப் படத்துக்கு வெளியே இருக்கும் பலவற்றைப் பற்றிய முன் அபிப்பிராயங்களோடு எழுப்பப்பட்ட விமரிசனங்களைத் தாண்டி அந்தப் படத்தின் முக்கியத்துவத்தைச் சொல்ல வேண்டும் என்பதால் விரிவான விமரிசனம் ஒன்றை லண்டனிலிருந்து வரும் “எதுவரை- உரையாடலுக்கான வெளி ” என்னும் இணைய இதழில் எழுதியுள்ளேன். படத்தைப் பற்றியும் படத்தைச் சுற்றி எழுப்பப்பெற்ற விமரிசனங்கள் பற்றியும் அந்தக் கட

எனக்குள் நுழைந்த எம்.எ. நுஃமான்.

படம்
கழிந்ததின் ஏக்கம் என்பதைக் குறிக்கும் ஆங்கிலச் சொல் நாஸ்டால்ஜியா (Nostalgia). இச்சொல்லின் பயன்பாட்டு அர்த்தம் பெரும்பாலும் இடம் சார்ந்த பழைய நினைவுகளோடு பொருத்தம் கொண்டதாக இருக்கிறது. இடம் பற்றிய நினைவு என்பது வெற்றுப் பரப்பு பற்றிய நினைவாகக் கரையாமல் அப்பரப்பில் நின்று தளைக்கும் தாவரங்களையும், அலைந்து திரியும் விலங்குகளையும் பறவைகளையும் பற்றிய நினைவுகளாகவும் நீள்கின்றன. இவ்வாறான இயற்கையின் வளங்களைப் பற்றிய நினைவுகளுக்குள் மனிதர்களும் அலைந்தார்கள்; அலைகிறார்கள்; அலைவார்கள் என எழுதுவதே இலக்கியப் பதிவுகளாக மாறுகின்றன. அப்பதிவுகள் அலைந்து திரிந்தார்கள் என்று சொல்வதோடு, நிலைத்து நின்று வாழ்ந்தார்கள்; தங்களுக்குள் முரண்பட்டார்கள்; மோதினார்கள் எனச் சொல்லத் தொடங்கி நீண்டது. மோதலும் முரணும் மட்டுமல்ல இணக்கமும் குதர்க்கமும் எழுந்தன என விரிந்தன. இவையெல்லாம் மனிதர்களுக்குள்ளாகவே நடந்து முடிந்து போனது என்று நினைக்க வேண்டியதில்லை; அளிக்கப்பட்ட நிலப்பரப்போடும், நிலப்பரப்பில் இயங்கிய தாவரங்களோடும் விலங்குகளோடும் கூடப் பிணக்கும் இணக்கமும் ஏற்பட்டன எனப் பதிவு செய்யும்போது, அப்பதிவுகள் வாழ்க்கையின் பதி

வார்சாவில் ஒரு நேர்காணல்

போலந்து நாட்டு வார்சா பல்கலைக்கழக மாணாக்கர்களின் வளாகப் பத்திரிகை  செட்னா -ஸ்டூடன்ஸ் கெஜட்டா .  என்னுடைய நேர்காணல் வந்துள்ளது. இரண்டு பகுதிகளாக உள்ள நேர்காணலைப் பின்வரும் இணைப்புகளில் வாசிக்கலாம்.   http://gazeta-sedno.pl/3874/whats-up-uw-a-passage-to-india-part-1/ http://gazeta-sedno.pl/3881/whats-up-uw-a-passage-to-india-part-2/

வார்சாவில் ஒரு நேர்காணல்

போலந்து நாட்டு வார்சா பல்கலைக்கழக மாணாக்கர்களின் வளாகப் பத்திரிகை செட்னா -ஸ்டூடன்ஸ் கெஜட்டா . என்னுடைய நேர்காணல் வந்துள்ளது. முதல் பகுதி இது . http://gazeta-sedno.pl/3874/whats-up-uw-a-passage-to-india-part-1/ அடுத்த பகுதி அப்புறம் வரும் .

பாலச்சந்திரனின் படத்தொகுப்புக்குப் பின் : மிதக்கும் குமிழிகள்

படம்
காலத் தாழ்ச்சி தான் என்றாலும் நிகழ்ந்து கொண்டிருப்பனவற்றைக் கவனிக்காமல் யாரும் தப்பி விட முடியாது என்ற வகையில் தமிழக மாணவர்களின் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஊடகப் பெருக்கத்த்தின் பங்கும் குறிப்பிடத் தக்கனவாக இருக்கின்றன. உண்மையான அக்கறை என்பதையும் தாண்டி தங்களை நிலை நிறுத்திக் கொள்ளும் நோக்கத்தோடு ஊடக நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்படும் விவாதக் களங்களும், நேரலைச் செய்தித் தொகுப்புகளும் மேலும் மேலும் வலுவூட்டிக் கொண்டிருக்கின்றன. வெகுமக்கள் உளவியலைக் கட்டமைப்பதில் ஊடகங்களின் பங்கு பற்றிப் பேசினாலும் எல்லாவற்றையும் தாண்டி முக்கியமான திசை திருப்பலாக அமைந்தவை   அந்தப் புகைப்படங்களின் வரிசைகள் மட்டுமே என நினைக்கிறேன்.

வைரமுத்துவின் தோழிமார் கதை- ஒரு பார்வை

படம்
அவரே இந்த வரிகளைக் கவிதை எனச் சொல்லவில்லை. வட்டார வழக்கில் ஒரு நாட்டுப் பாட்டு என்றுதான் தொடங்குகிறார். வைரமுத்து வாசிக்கும் வரிகளை படக் காட்சித் தொகுப்போடு முதலில் பாருங்கள். நாட்டுப் பாட்டை அதற்கான பாடகர்களைக் கொண்டு பாடச் செய்யாமல், தனது கவிதையை வாசிக்கும் தொனியில் அவரே வாசிக்க, அதற்கு உரையெழுதுவதுபோல ஒருவர் படக்காட்சிகளை அடுக்கித் தந்திருக்கிறார். படக்காட்சிகளும் வரிகளின் வாசிப்பும் முடிந்தபோது எனக்கொரு சந்தேகம் எழுந்தது. அதனைச் சந்தேகம் எனச் சொல்வதைவிட எல்லாவற்றையும் ’விமரிசனப்பார்வை’யோடு வாசித்துப் பழகியதால் தோன்றிய கேள்வி என்று சொல்வதுதான் சரி. தோழிமார் கதை எனத் தலைப்பு வைத்ததற்குப் பதிலாக ஒரு புங்கமரத்தின் கதை எனத் தலைப்பிட்டிருக்கலாம் என்று தோன்றியது. மூன்று வருடங்களாக (2008 ஜூன் மாதம் 19 ந்தேதி இணையத்தின் ஒளிக்காட்சி வடிவமான யு-ட்யூப்பில் பதிவு செய்யப்பட்டு புகுத்தப்பட்டுள்ளது).இது இணையத்தில் இருக்கிறது நான் முதன் முதலில் பார்த்த போது இருந்த எண்ணிக்கை 92 078 நீண்ட நாட்களாக மாற்றம் இல்லாமலேயே இருக்கிறது. எப்போதாவது ஒன்றிரண்டு பேர் அதனைத் திறந்து பார்க்கிறார்கள்.கேட்கிறார்கள்