பெரியாரே! பெரியாரே!! அப்பாவிகள் இவர்கள். அறியாமல் செய்கிறார்கள்
தமிழ்நாட்டின் பொதுமனிதர்கள் ஞான .ராஜசேகரனை எவ்வாறு அறிந்திருப்பார்கள் என்பதற்குத் துல்லியமான புள்ளி விவர ஆதாரங்கள் எதுவும் இல்லை. இந்திய ஆட்சியியல் அதிகாரியாகப் பணி செய்யும் அவரின் தொடக்க அறிமுகம் நவீன நாடகங்கள். இன்று நவீன நாடகங்களில் செயல்படும் பலரும் கூட அவரை நாடக்காரராக அறிவார்களா? என்பது சந்தேகம்தான். நவீனத்துவ மனநிலை என்பதைச் சரியாகப் புரிந்து கொண்டவராக எழுபதுகளின் இறுதியிலேயே வெளிப்பட்டவர் ராஜசேகரன்.