இடுகைகள்

பனியும் பனியின் நிமித்தமும்

படம்
”கதவைத் திற; காற்று வரட்டும்” நான் தொகுக்க நினைக்கும் நவீனத் தமிழ்க் கவிதைத் தொகுப்பில் பசுவய்யாவின் இந்த கவிதை நிச்சயம் இடம் பெறும். மூடுண்ட இந்திய சமூகத்தின் ஒட்டு மொத்த கதவாக அவர் சொல்லும் கதவை விரிக்காமல் தமிழ்ப் பண்பாட்டுக் காவலர்களின் குறுகிய மனக் கதவைக் குறிக்கவே இக்கவி தையை எழுதினார் என வியாக்கி யானங்கள் சொல்லப்பட்டாலும், நான் அந்தக் கவிதையை இந்தியப் பரப்பிற்கான கவிதையாகவே நினைக்கிறேன். இந்திய சமூகத்தின் பல்வேறு நிறுவனங்களின் மூடுண்ட கதவுகளைத் திறந்து உள்ளிருளைப் போக்கும் அறிவொளியெனும் வெளிச்சத்தையும் உடலில் பரவிச் சுகமளிக்கும் காற்றையும் அனுமதிப்பதற்குச் சாளரங்களின் கதவுகள் திறக்கப்பட வேண்டும் எனச் சொல்வதாகவே நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

காவல்கோட்டம்: இந்தத் தேர்வு சரியென்றால் இதைத் தொடர என்ன செய்யப் போகிறோம்?

படம்
தேர்வுகள் என்ன உணர்வைத் தருகின்றன என்பது சந்திக்கின்றவர்களைப் பொறுத்தது. இந்திய மாணவர்களுக்குப் பல நேரங்களில் பயமுறுத்துவனவாக இருக்கின்றன. ஆனால் ஐரோப்பிய மாணவர்கள் அதை எதிர்பார்ப்புடன் - ஆர்வமூட்டும் ஒன்றாக - பார்க்கிறார்கள் என்பது எனது அனுபவம். இந்தியாவில் மாணவர்கள் தேர்வைத் தங்களுக் குரியதாகக் கருதி எப்படிப் பதில் எழுதுவது என்ற கோணத்தில் சிந்திக்கிறார்கள்; தயார் செய்கிறார்கள். ஐரோப்பிய மாணவர்கள் தேர்வு நடத்துவது ஆசிரியரின் வேலை என எடுத்துக் கொண்டு எப்படியெல்லாம் கேள்வி கேட்பார்கள் எனச் சிந்தித்துத் தயாராக இருக்கிறார்கள்.

ஒரு விருது: பாராட்டு விழா

படம்
தமிழ் நாட்டில் இருந்திருந்தால் இயல் விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அவருடைய நூல்களை அச்சிடும் உயிர்மை பதிப்பகம் நடத்தும் பாராட்டு விழாவில் கலந்து கொண்டிருப்பீர்களா? இயல் விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ணனை வாழ்த்துகிறேன். இப்படியொரு பாராட்டு விழா ஏற்பாடு செய்த உயிர்மை பதிப்பகத்தின் போக்கிற்காகக் கவலைப்படுகிறேன்.

நம்பிக்கைகள், தொன்மங்கள், வரலாறுகள் – புனைவுகளாக்கப்படும் போது

படம்
அண்மையில் அந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது நினைவில் வரவில்லை. ஆனால் பார்த்து முடித்தவுடன் திரும்பத் திரும்ப நினைவில் வந்ததைத் தள்ளவும் முடியவில்லை. பார்த்து முடித்த படம் ஏ.ஆர்.முருகதாஸ், உதயநிதி ஸ்டாலின், சூர்யா கூட்டணியில் வந்த 7-ஆம் அறிவு. நினைவுக்கு வந்த படம் 15 வருடங்களுக்கு முன்னால் நடிகர் நாசரின் இயக்கத்தில் வந்த தேவதை. நாசரின் தேவதை சில காரணங்களுக்காக என் நினைவில் இருந்து கொண்டிருக்கும் படம். அதற்கு முன்பே சில படங்களுக்காக எனது முகம் சினிமாக் காமிராவினால் படம் பிடிக்கப்பட்டிருந்தாலும் தேவதைதான் திரையில் என்னைக் காட்டிய முதல் படம். என்னைத் திரையில் காட்டிய தேவதை ஒரு வாரத்துக்குள் முடங்கிய படம் என்றால், அதற்கு முன்பு நான் நடித்த சில படங்கள் திரைக்கு வராமலேயே முடங்கிப் போய் விட்டன. நடிகனாக வேண்டும் என்ற வெறியெல்லாம் இல்லாததால் தேவதைக்குப் பின் அந்த முயற்சியைக் கைவிட்ட சொந்தக் கதையை இத்தோடு நிறுத்துக் கொள்ளலாம்.  இரண்டாவது காரணம் இளையராஜாவின் இசை. தினசரி கேட்டுக் கொண்டிருக்கும் இளையராஜாவின் இனிய கீதங்கள் தொகுப்பில் தேவதை படத்தில் இடம் பெற்ற “தீபங்கள் பேசும் கார்த்திகை ம