பனியும் பனியின் நிமித்தமும்
”கதவைத் திற; காற்று வரட்டும்” நான் தொகுக்க நினைக்கும் நவீனத் தமிழ்க் கவிதைத் தொகுப்பில் பசுவய்யாவின் இந்த கவிதை நிச்சயம் இடம் பெறும். மூடுண்ட இந்திய சமூகத்தின் ஒட்டு மொத்த கதவாக அவர் சொல்லும் கதவை விரிக்காமல் தமிழ்ப் பண்பாட்டுக் காவலர்களின் குறுகிய மனக் கதவைக் குறிக்கவே இக்கவி தையை எழுதினார் என வியாக்கி யானங்கள் சொல்லப்பட்டாலும், நான் அந்தக் கவிதையை இந்தியப் பரப்பிற்கான கவிதையாகவே நினைக்கிறேன். இந்திய சமூகத்தின் பல்வேறு நிறுவனங்களின் மூடுண்ட கதவுகளைத் திறந்து உள்ளிருளைப் போக்கும் அறிவொளியெனும் வெளிச்சத்தையும் உடலில் பரவிச் சுகமளிக்கும் காற்றையும் அனுமதிப்பதற்குச் சாளரங்களின் கதவுகள் திறக்கப்பட வேண்டும் எனச் சொல்வதாகவே நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.