இடுகைகள்

திருக்குறளில் கடமைகளும் உரிமைகளும்

தனக்கான அடிப்படைத் தேவைகளான உணவு , உடை , உறையுள் ஆகியனவற்றைத் தேடுவதன் முகாந்திரமாகச் சமூக நிறுவனங்களை உருவாக்கிக் கொண்டது மனித சமூகம். அப்படி உருவாக்கிக் கொண்ட நிறுவனங்களுக்குள் மனிதர்கள் வாழ வேண்டும் என்று வலியுறுத்திக் கூறும் பனுவல்களை -அற நூல்களாக உருவாக்கித் தனது கருத்துக் கருவூலகமாகக் கொண்டன ஒவ்வொரு மொழிவழிச் சமுதாயமும். இப்படியான அறநூல்கள் ஒவ்வொரு மொழியின் இலக்கிய வரலாற்றிலும் தொடக்க காலத்தில் முக்கியமான இடத்தைப் பிடித்துக் கொண்டு கருத்துருவாக்கிகளாக விளங்கியுள்ளன.  தமிழ்மொழியைத்தங்கள் வெளிப்பாட்டுக் கருவியாகக் கொண்ட தமிழ்ச் சமூகத்தின் கருத்துப் பெட்டகமாக இருப்பது திருக்குறள்.

ஒச்சாயி: பெயரில் என்னதான் இல்லை?

படம்
“ரோஜா, ரோஜாவாக இருக்கிறது ” இந்த தொடர் சேக்ஸ்பியரின் ஒரு நாடகத்தில் இருக்கும் வாக்கியம். ஆனால் அதைத் தனது கவிதையின் தலைப்பாக மாற்றிக் கவிதை ஒன்றை எழுதியவன் கவி ஜெற்ரூட் ஸ்டெயின் என்று படித்த ஞாபகம். “என்ன பெயரில் அழைத்தாலும் ரோஜா ரோஜா தான்;ஏனென்றால் ரோஜா ரோஜாவாகவே இருக்கிறது ” என்று முடியும் அந்தக் கவிதை எப்போது ரோஜாப்பூக்களைப் பார்த்தாலும் நினைவுக்கு வந்து விடும். ஒற்றை ரோஜாவைச் சொருகிக் கொண்டு முன்னே நடந்து செல்லும் பெண்களின் கூந்தல் அசைவைப் பார்க்கிற போது பல்வேறு வண்ணங்களில் விரிந்து நிற்கும் ரோஜாத் தோட்டங்களும், அவற்றின் இதழ் விரிப்பும், பனி படர்ந்த இலைகளும் புல்வெளிகளும், கொஞ்சம் கை தவறினால் கீறிப்பார்த்து ரத்தப் பலி கொள்ளக் காத்திருக்கும் முட்களும் நினைவுக்கு வருவதோடு அந்தக் கவிதையும் நினைவுக்கு வந்து விடும். என்றாலும் வார்த்தைகளை அடுக்கிச் சொன்னதன் மூலம் நினைவில் தங்கிக் கொண்டது. ரோஜாவின் அழகே இந்தக் கவிதையால் வந்தது தானோ என்று கூட நினைப்பதுண்டு.

இணைந்து கொள்வேம்

கொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நிராகரிக்கிறோம் : சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் கலைஞர்கள் கூட்டறிக்கை வரலாறு நெடுகிலும் படைப்பாளிகள், கலைஞர்கள் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவுமே சார்புநிலை எடுத்திருக்கிறார்கள். ரஷ்யப் புரட்சியைச் சாட்சியமாக இருந்து கண்டு சொல்ல, அமெரிக்க எழுத்தாளர் ஜோன் ரீட் மொஸ்கோ சென்றார். ஸ்பானிய உள்நாட்டு யுத்தத்தில் குடியரசுவாதிகளுக்கு ஆதரவாகச் சார்புநிலையெடுத்து, அவர்களுக்காகப் போராட ஸ்பெயினுக்கு விரைந்தனர் எர்னஸ்ட் ஹெமிங்வே, ஜோர்ஜ் ஓர்வெல், கிறிஸ்ரோபர் கோட்வெல் போன்ற படைப்பாளிகள். வியட்நாம் மக்களுக்கு ஆதரவாக, அமெரிக்க ஒடுக்குமுறைக்கு எதிராகத் தெருவில் இறங்கிப் போராடினார்கள் தத்துவவாதிகளான பேர்ட்ரண்ட் ரஸ்ஸல், ழீன் போல் ஸார்த்தர் போன்றோர். ஈராக் யுத்தத்தின்போது, 'அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகை அழிக்க வந்த ஒரு பிசாசு' எனத் தனது நோபல் பரிசு உரையில் பிரகடனப்படுத்தினார் நாடகாசிரியரான ஹரோல்ட் பின்ரர். படைப்பாளிகள், கலைஞர்கள் எந்த மதிப்பீடுகளுக்காக நிற்கிறார்கள்? இவர்கள் கருத்துச் சுதந்திரத்திற்காகத் தம்மை உறுதியாக நில

தலித் அல்லாதார் பார்வையில் தலித் எழுச்சி

தமிழ்ச் சிந்தனைத்தளம் -அரசியல் , பொருளாதாரம் , கலை இலக்கியம் , போராட்டம் - என அனைத்துத் தளங்களிலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகுந்த நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. அது வரை பிராமணர்கள்/ பிராமணர் அல்லாதார் எனப்பிளவுபடுத்திப் புரிந்து கொண்ட எல்லாவற்றையும் இன்று தலித்/ தலித் அல்லாதார் என எதிர்வு களை நிறுத்தி விவாதிக்கவும் விளக்கவும் புரிந்து கொள்ளவும் வேண்டும் எனக்கோருகிறது இந்த நெருக்கடி.

பரப்பியம்- பரப்பியவாதம்- வெகுஜனக்கலை

ஜெயமோகனின் வலைத்தளத்தில் நடக்கும் இந்த விவாதத்தில் எனது பெயரும் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இதில் எனக்குச் சொல்ல இன்னும் இருக்கிறது . அதை அடுத்த பதிவில் தர முயற்சிக்கிறேன். இப்போது ஜெயமோகனின் வலைத்தளத்தில் இருப்பதை அப்படியே தருகிறேன் அ.ராமசாமி

மந்திரங்களும் தந்திரங்களும் எந்திரன்களும்

படம்
இன்றைய வாழ்நிலையில் எந்தவொரு தேசத்திற்கும் ஜனநாயகம் என்னும் அரசியல் கட்டமைப்பே ஆகக் குறைவான தீங்குகளைத் தரக்கூடிய வடிவம் என அரசியல் சிந்தனையாளர்கள் முன் மொழிகிறார்கள். இன்னும் பலர் மனித குலம் கடந்து வந்துள்ள பல்வேறு கருத்தியல்களில் ஆகச் சிறந்தது ஜனநாயகம் என்னும் கருத்தியலே என வாதிடுவதும் கூட உண்டு. அந்த முன்மொழிவுகளுக்கும் வாதங்களுக்கும் மாற்றான முன்மொழிவையோ,வாதத்தையோ முன் வைத்துப் பேசி,அதைவிடச் சிறந்தது இது எனச் சொல்ல இன்னொரு அரசியல் வடிவம் இல்லை என்ற நிலையில் ஜனநாயகத்தை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறுவழியும் இல்லை.

இறந்த காலமல்ல; கடந்த காலம்

கர்நாடகத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆறு, தமிழ்நாட்டின் வழியாகப் பாய்ந்து கடலில் கலக்கிறது. கடலில் கலக்கும் நீரைப் பயன்படுத்தித் தமிழ்நாட்டு விவசாயிகள் தமிழ்நாட்டுக்குத் தேவையான நெல்லை விளைவிக்கிறார்கள். குறைந்தது இரண்டு போகம் விளையும் விதமாகக் காவிரியில் நீர் வருவதுண்டு. அதனைத் தேக்கி வைத்துப் பாசனத்திற்குப் பயன்படுத்துவதற்காகவே காவிரியின் குறுக்கே  மேட்டூர் அருகே அணை கட்டப்பட்டுள்ளது.