இடுகைகள்

கடைசிப் புகலிடமா? முதன்மையே அதுதானா?

இப்போதுள்ள நடிகர்களுள் சிறந்த நடிகர் யார் ? இந்தக் கேள்வியை என்னிடம் கேட்ட நண்பர் தொலைக்காட்சிகளுக்கு நிகழ்ச்சிகளைத் தயாரித்துத் தரும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகின்றார். போன வாரம் கேட்ட இதே கேள்வியைப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை கேட்டார். சிறந்த நடிகர் ஒருவரது பேட்டியை அந்த வருடம் தீபாவளிக்கு ஒளிபரப்ப விரும்புவதாக ஒரு தொலைக்காட்சி அலைவரிசை சொல்லி இருப்பதாகவும், நடிப்பின் நுட்பங்கள் பற்றியெல்லாம் பேச வேண்டும்; நடிகர் பெயரையும் சொல்லி விட்டு அவரிடம் கேட்க வேண்டிய வினாக்களையும் சொன்னால் நல்லது என்று கேட்டுக் கொண்டார்.

எளிய மனுசியின் இலக்கு : மீரான் மைதீனின் கவர்னர் பெத்தா

மேல் நோக்கிய பயணம் – இந்த வாக்கியத்தைப் பலரும் சொல்கிற போது ஆன்மீகம் சார்ந்த வாக்கியமாகவே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நமக்குக் கிடைத்திருக்கிற – நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற - இந்த வாழ்க்கை அவ்வளவு இனிமையானது அல்ல என்ற நினைப்பு ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கவே செய்கிறது. இந்த எண்ணமும் தவிப்பும் இருப்பதில் அப்பாவிகள் என்றும், அறிவார்ந்தவர்கள் என்றும் வேறுபாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் மேலான வாழ்க்கை என்பதைப் புரிந்து வைத்திருப்பதிலும், அதை அடைய முடியும் என நம்புவதிலும் வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன. கிடைத்திருக்கும் வாழ்க்கை மீதான அதிருப்தியின் அளவும், அதனை மாற்றிட வேண்டும் என்ற விருப்பமும், அதற்கான எத்தணிப்புகளும் எல்லாரிடமும் ஒன்று போல இருப்பதில்லை. அறிவார்ந்த தளத்திலும், நம்பிக்கைகளோடு கூடிய நடைமுறைகளைப் பின்பற்றுபவதிலும் கவனமாக இருக்கும் மனிதர்களின் எத்தணிப்புகளிலிருந்து திட்டமிட்டு வாழ்க்கையை முன்னகர்த்தும் வழியற்ற அப்பாவிகளின் எத்தணிப்புகள் பெருமளவு விலகியே இருக்கிறது.

திரும்பக் கிடைத்த முகவரிகள்

படம்
நிகழ்காலத்தில் நிகழ்கால வாழ்க்கையை வாழ வேண்டும் என நாம் முடிவு செய்தால் தினந்தோறும் கணினியின் திரையைச் சந்திக்காமல் தப்பிக்க முடியாது. துறவு வாழ்க்கையின் மீது விருப்பம் கொண்டு விலகிச் சென்றால் மட்டுமே கணினியிடமிருந்து தப்பிச் செல்லல் சாத்தியம். 

மணிரத்னத்தின் ராவணண் : தொன்ம உருவாக்கத்தின் தோல்வி

படம்
தமிழ்ச் சினிமாவின் நோக்கம் வியாபார வெற்றி. இது இப்போது ஏற்பட்டுள்ள மாற்றம் அல்ல. கடந்து காலங்களிலும் அதுதான் நிலைமை. ஆனால் கடந்த காலங்களில் தமிழ்ச் சினிமா வியாபாரத்தை மட்டுமே முதன்மை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. அதே நேரத்தில் தமிழில் சினிமாவைப் பற்றிய பேச்சு எப்போதும் வியாபாரத்தை முதன்மைப் படுத்திப் பேசாமல், கலை வடிவம் ஒன்றைப் பற்றிய பேச்சாகவே தொடர்ந்து வந்திருக்கிறது.