இடுகைகள்

பெயர்கள்; நமது பெயர்கள்

ஞாயிற்றுக்கிழமை தவிர வேலைநாட்கள் மதியம் 12.00 மணிக்கு எஸ்.டி.டி. எதுவும் வருவதில்லை. நாங்களும் யாருக்கும் பண்ணுவதில்லை. போன் இருக்கிறது என்று பண்ணினால் பில் வரும்பொழுது பட்ஜெட் உதைக்கும். அன்று வௌ¢ளிக் கிழமை மதியம் 12 மணிக்கு நீண்ட அழைப்பொலி கேட்டபோது நான் தான் ஏதோ அவசரமாகப் பேசுகிறேன் என நினைத்து என் மனைவி எடுத்திருக்கிறாள்.

புத்தகங்கள் :மதுப்புட்டிகளாகவும் வெடிகுண்டுகளாகவும்

பாண்டிச்சேரியிலிருந்து இதுவரை நூறு தடவையாவது மதுரைக்குப் பஸ்ஸில் பயணம் செய்திருக்கிறேன். ஏழெட்டுத் தடவை போல¦ஸ் சோதனை போட்டிருக்கிறது. அந்தச் சோதனைக்கு யாருடைய பையும் தப்பாது. சூட்கேசாக இருந்தால் ஆட்டிப்பார்த்தே உள்ளே இருப்பது மதுப்புட்டிகள் என்று கண்டுபிடித்து விடுவார்கள். பையாக இருந்தாலும் ஒலியெழுப்பும் பாட்டில்கள் காட்டிக் கொடுத்து விடும்.ஒரு தடவை 20 கிலோ சர்க்கரைக்குள் இரண்டு அரை பாட்டில்கள் இருந்தன. திறந்து பார்த்த போல¦ஸ் கொஞ்சம் சர்க்கரையை அள்ளி வாயில் போட்டு விட்டு நகர்ந்து விட்டது. அல்வாவுக்குப் பதில் சர்க்கரை.

தொல்காப்பியம்- சங்க இலக்கியங்கள் திணைநிலைக் கூற்றுகள்

முன்னுரை: தமிழ்க் கவிதையின் மரபைப் பற்றிப் பேசும் கல்வியாளர்கள் தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியத்தையும் தமிழ் மரபின் தொடக்கம் எனக் கொள்வதில் பின் வாங்குவதில்லை. கல்வித்துறை சாராத இலக்கியத்திறனாய்வாளர்களும் கூடத் தமிழ்க் கவிதையியலின் தொடக்கம் இவையே என்பதை ஒத்துக் கொள்ளவே செய்வர். ஆனால் அம்மரபுதான் இடையூறுகளின்றி இன்று வரை தொடர்கிறதா? எனக் கேட்பவருக்கு ஆம் என்றோ, இல்லை என்றோ உறுதியான பதில் ஒன்றைச் சொல்ல முடியாது.

நினைவில் நின்ற நூல்கள்

எழுத வேண்டியதை முடிவு செய்து விட்டு எழுத உட்கார்ந்தால் எழுதி விடலாம் என்ற பயிற்சியை உருவாக்கிக் கொண்டு விட்ட என்னைப் போன்றவர்களை இடைநிலைப் பத்திரிகைகளின் பெருக்கம், அதிகமாக எழுதும்படி தூண்டியுள்ளது. அதே நேரத்தில் அதுவரை இருந்து வந்த வாசிக்கும் பழக்கத்தையும் அடியோடு மாற்றி விட்டது.