ஆந்திர அரசு பெண்ணையாற்றில் 100 தடுப்பணைகளைக் கட்டும் பணிகளைத் தொடங்கி விட்டது. அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளைப் பலரும் எழுப்பி வருகின்றனர். ஆந்திரத்து ஸ்ரீசைலம் மலையில் உற்பத்தியாகும் பொன்னையாறு வேலூர் மாவட்ட திருவலம் அருகே பாலாற்றில் கலக்கிறது. அதிலிருந்து வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களுக்குக் குடிதண்ணீர் கிடைக்கிறது. எனவே மத்திய அரசில் தனக் கிருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தித் தமிழக முதல்வர், இந்தப் பிரச்சினைக்கு உடனே தீர்வு காண வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை.