இடுகைகள்

பெண்ணை மொழிதல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒடுக்குதலின் அழகியலும் விடுதலையும் : திலகவதியின் போன்சாய்ப் பெண்கள்

படம்
உரிமைகோரிப் போராடும் அமைப்புகளாக வடிவம் கொண்ட பெண் அமைப்புகளின் தோற்றம் ஐரோப்பா 18 ஆம் நூற்றாண்டின் கடைசிப் பத்தாண்டுகளில் துளிர்விட்டது. அடுத்த நூற்றாண்டில் அவை வேலை வாய்ப்பு, பொதுவெளி உரிமைகள், வாக்குரிமைகள் என நகர்ந்து இருபதாம் நூற்றாண்டில் இலக்கிய உருவாக்கத்திலும் விமரிசனத்திலும் தடம் பதித்தன. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஓரளவுக்கு இருபதாம் நூற்றாண்டின் முன் பாதியில் பெண்ணிய இயக்கங்கள் தங்களை வலுவான தரப்பாக நிலைநிறுத்திக்கொண்டன. 1960-களில் முழுமை பெற்ற பெண்களின் செயல்பாடுகள் சார்ந்த இயக்கங்களின் நேரடி விளைவாகவே பெண்ணியத் திறனாய்வும் வலுப்பெற்றது. 

மணவிலக்கம் என்னும் கருத்தியல் கருவி: ஜோதிர்லதா கிரிஜாவின் தலைமுறை இடைவெளிகள்

படம்
மனிதச் சிந்தனை என்பது எப்போதும் மனித மைய நோக்கம் கொண்தாக இருக்கிறது. நிலம், நீர், வளி, ஒளி, வானம் என ஐந்து பரப்புகளும் இணைந்திருப்பதும், அவ்விணைவுக்குள் தாவரங்கள்-அவற்றின் உட்பிரிவுகளான செடிகள், கொடிகள், மரங்கள் என்பனவும், விலங்குகள் – அதற்குள் நடப்பன, ஊர்வன, பறப்பன, நீந்துவன என்பனவும் முக்கியமானவை என்றாலும் மனிதர்கள் இவையெல்லாம் தங்களுக்காக உருவாக்கப்பட்டவை என்றே நினைக்கின்றனர். அவர்கள் உருவாக்கும் சொற்கள் எப்போதும் மனிதர்களை மையமிட்டே பொருளை – அர்த்தத்தை உற்பத்தி செய்கின்றன. உலகம் என்ற சொல்லை மனிதர்களின் வெளியாகவே புரிந்து வைத்திருக்கிறது மனித மனம். 

இருவரில் ஒருவர் : சூடாமணியின் அந்நியர்கள்

படம்
பெண்ணெழுத்தின் நிகழ்வெளிகளில் முதன்மையானது குடும்பவெளி. பாலினம் சார்ந்த ஒடுக்குமுறை நிலவும் நுண் அமைப்பாக இருப்பது குடும்பவெளிதான் என்ற அடிப்படையில் குடும்ப அமைப்பே தொடர்ந்து விவாதப்பொருளாகப் பெண்களால் முன்னெடுக்கப்படுகின்றன. குடும்ப வெளிக்குள் பெண் x ஆண் என்ற பாலின முரண்பாட்டைக் கட்டமைத்து எதிர்நிலைச் சொல்லாடல்களால் ஆணின் இருப்பும் இயக்கமும் பெண்ணை இரண்டாவதாக உணரச்செய்கிறது என்ற முடிவை நோக்கி நகர்த்திச் செல்வது எளிது என்பதால் கூடக் குடும்பவெளியைக் கதைப்பரப்பாகத் தெரிவுசெய்வது முதன்மை பெற்றிருக்கலாம். 

மகளிரியலின் துன்பியல் சித்திரம் : பாவையின் திறவி

படம்
நிகழ்காலத்தில் பெண்ணியம் என்னும் கலைச்சொல் முழுமையான அரசியல் கலைச்சொல்லாக மாறிவிட்டது. இப்படியொரு அரசியல் கலைச்சொல்லை உருவாக்கித் தங்களின் விடுதலை அரசியலைப் பேசுவதற்குப் பெண்ணிய இயக்கங்கள் கடந்து வந்த நடைமுறைத் தடைகளும் கருத்தியல் முரண்பாடுகளும் பற்பல. மனிதத் தன்னிலையின் அடையாளமாக- பரிமாணங்களாகச் சொல்லப்படும் உடலியல், சமூகவியல், உளவியல் கூறுகள் ஒவ்வொன்றிலும் முன்வைக்கப்பட்ட விவாதங்களை வென்றே பெண்கள் கடந்து வந்துள்ளார்கள். உலகிலுள்ள எல்லாப் பெண்களும் அப்படிக் கடந்துவந்துவிட்டார்கள் என்று தடாலடியாக ஒருவர் மறுக்கலாம். ஆனால் பெண்களால் முடியாத பரப்புகள் இருக்கின்றன எனச் சொல்லப்பட்ட ஒவ்வொன்றிலும் தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட முன்மாதிரிப் பெண்களை உலகம் பரவலாகக் கண்டுவிட்டது. 

இருத்தலையும் இருத்தல் நிமித்தங்களின் வண்ணங்களையும் வரைதல்..தேன்மொழி தாஸின் கவிதைகள்-

படம்
பத்து ஆண்டுகளுக்கு முன்பே அந்தப் பெயர்- தேன்மொழிதாஸ்- என்ற பெயர் ஒரு கவியின் பெயராகப் பதிந்திருந்தது என்றாலும், பலராலும் சொல்லப்பட்டு உருவான தமிழ்க்கவிதைப்போக்கு ஒன்றிற்குள் இருக்கும் அடையாள வெளிப்பாடாகவோ, நானே வாசித்து உருவாக்கிக்கொண்ட தனித்துவமான கவியின் அடையாளமாகவோ அந்தப் பெயர் பதிந்திருக்கவில்லை. என்றாலும் பதிந்திருந்தது.  வாசகப்பரப்பில் ஒரு கவியின்/எழுத்தாளரின் பெயர் பதிந்துவிடப் பல காரணங்கள் இருக்கின்றன. போகிற போக்கில் விமரிசகன் குறிப்பிடும் ஒரு பெயரின் பின்னால் இருக்கும் எழுத்துகள், வாசிப்பவர்களிடம் தன்னை வாசிக்கும்படி முறையிடுகின்றன. ஆனால் அந்தப்பெயரும் அவரது எழுத்துகளும் தொடர்ச்சியாக நினைவுக்குள் ஆழமாய் நின்றுவிட, விமரிசகனின் அந்தக் குறிப்புமட்டும் போதாது. தீவிரமான வாசகராகத் தன்னைக் கருதிக்கொள்பவர் அந்தப் பெயரோடு வரும் எழுத்துகளைப் படிக்கும்போது விமரிசகன் சொன்ன காரணங்களோடு உரசிப்பார்க்கவே செய்வார்கள். முழுமையும் பொருந்துவதோடு, புதிய திறப்புகளையும், பரப்புகளையும் காட்டும் நிலையில் இருப்பதாக நினைத்தால், அந்தக் கவியை அல்லது எழுத்தாளரைத் தேடி வாசிக்கும் பட்டியலில் சேர்த்துக்க

ஓரத்து இருக்கைப் பயணங்கள்

மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு சென்று கொண்டிருந்த பேருந்தில் நடுப்பகுதியில் இடதுபக்க ஓரத்தில் நான் அமர்ந்திருந்தேன். மதுரையில் ஏறிய பயணிகளில் பாதிப்பேர் ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலை இருக்கும் நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டனர். அதனால் சாத்தூரில் ஏறுபவர்களுக்குத் தேர்வு செய்து இருக்கைகளைப் பிடிக்க வாய்ப்பு இருந்தது. சாத்தூரில் ஏறிய பயணிகளில் அந்தக் குடும்பமும் ஒன்றாக இருந்தது. அரை டிக்கெட் வாங்க வேண்டிய சிறுமி, சிறுவன் உள்பட நான்கு பேர் கொண்ட குடும்பம் அது. வேகமாக ஏறிய சிறுமி ஓடி வந்து எனது இருக்கைக்கு முன்னால் இருந்த வலது பக்க ஓரத்தைப் பிடித்துக் கொண்டாள்.

மாஜீதா பாத்திமாவின் உம்மாவின் திருக்கை மீன்வால் : தந்தைமையைத் தாக்குதல்

படம்
வாசிக்கப்படும் இலக்கியப் பிரதியொன்றை ஆண்மையப் பிரதியா? பெண் மையப் பிரதியா? என அடையாளப்படுத்திக் கொண்டு விவாதங்களை முன்வைப்பது பெண்ணிய அணுகுமுறை. ஒரு பிரதியை அடையாளப்படுத்தும் கூறுகள் அதன் தலைப்பு தொடங்கி, சொல்லும் பாத்திரம், விசாரிக்கப்படும் பாத்திரங்கள், உண்டாக்கப்படும் உணர்வுகள், வாசிப்பவர்களுக்குக் கிடைக்கும் சிந்தனை மாற்றம் எனப் பலவற்றில் தங்கியிருக்கக் கூடும். மாஜிதா பாத்திமா எழுதிய உம்மாவின் திருக்கை மீன் வால் என்ற கதையை (அம்ருதா, மே, 2019) பெண்மையக் கதையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் பல கூறுகள் கதைக்குள் இருக்கின்றன. 

நேரடியாகப் பேச நினைக்கும் பெண்குரல்

படம்
கவிதையின் மொழிதல் ஒருவழிப்பாதையாக இருக்கும்போது உணர்ச்சி வெளிப்பாடாக மாறி விடும். கவிதைக்குள் உருவாக்கப்படும் சொல்லி ( Narrator) தன்னை - தனது தன்னிலையை- உருவாக்குவதற்காகக் குறைவான சொற்களைப் பயன்படுத்திவிட்டுக் கேட்கும் இடத்தில் இருப்பவர்களை (Receivers) -முறையீட்டைக் கவனிக்கவேண்டியவர்களைக் குறித்துப் பலவிதமான சொற்களை உண்டாக்குவது வெவ்வேறு உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள். உண்டாக்கப்பட்ட சொற்களின் வழியாக அவர்களுக்கும் சொல்லிக்குமிடையே இருக்கும் உறவுநிலைகளை - உடன்பாட்டு நிலையாகவும் எதிர்மறை நிலையாகவும் பேசுவதின் வழியாகக் கவிதையின் இயக்கத்தை அல்லது செயல்பாட்டை உருவாக்குவது என்பது கவிதையியலின் தொடக்கநிலைக் கூறு.

என்னவாக ஆகப்போகிறாய் பெண்ணே

‘நீ என்னவாக ஆகப் போகிறாய்.? ’  இந்தக் கேள்வி மனிதர்கள் ஒவ்வொருவரும் சந்திக்க நேர்ந்த கேள்விதான். பள்ளிப் பருவம் தொடங்கி, பல தடவை இந்தக் கேள்வியைச் சந்திக்கும் வாய்ப்புக்கள் மாணாக்கர்களுக்குக் கிடைக்கின்றன. வகுப்புக்கு வரும் ஆசிரியர்கள் மட்டும் அல்லாது, அவர்களது பள்ளிக்கும், கல்லூரிக்கும் வரும் விருந்தினர்கள், பேச்சாளர்கள், தலைவர்கள் என ஒவ்வொருவரும் இத்தகைய கேள்விகளை ஒவ்வொரு மாணாக்க ரிடத்திலும் எழுப்பத்தான் செய்கிறார்கள். அவர்களின் வருகையும் பேச்சும் நேரடியாக இந்த வினாவை எழுப்பாமல் போயிருக்கலாம். அவர்களின் வருகையின் சாரம் உணர்த்தும் உண்மை அது தான்.

தாய்மையென்னும் புனிதம்

படம்
' ஆர்வமூட்டும் தொடக்கமொன்றைக் கதைகொண்டிருக்க வேண்டும் ' என்ற இலக்கணப்படியான மரபான தொடக்கம்தான். ' கதவு தட்டப்படுவதான உணர்வு. ஆனால் யார் தட்டியது என்று தெரியவில்லை ' என்பதுபோன்ற திகில் தன்மையைக் கொண்ட தொடக்கம். சிக்கலான மனிதர்களை முன்னிறுத்தும் கதை என்பதான குறிப்புகள்கூட இல்லை. காலச்சுவடு 200 ஆம் இதழில் வந்துள்ள  உமா மகேஸ்வரியின் குளவி என்ற தலைப்பிட்ட அந்தக் கதையை வாசிப்பதை நிறுத்திவிடலா ம் என்று தோன்றியது . ஆனால் இடையிடையே ஓவியங்களோடு மூன்று பக்கத்தில் முடியும் கதை தான்  என்ற நிலையில் தொடர்ந்து வாசிக்க லாம் என்று தோன்றியது.  

காத்துக்கொண்டிருக்கும் பெண்கள்

படம்
காத்துக் கொண்டிருக்கும் பெண்கள் என்பது  தமிழ் இலக்கியத்தின் அடிப்படையான அடிக்கருத்து(Motif ) களில் ஒன்று. ஓதல், தூது, பகை காரணமாகப் பிரிந்து செல்லும் தலைவனுக்காகக் காத்திருக்கும் தலைவிகளைத் தமிழ்ச் செவ்வியல் கவிதைகள் விதம்விதமாக எழுதிக் காட்டியுள்ளன.  அன்பின் ஐந்திணைகளில் ஒன்றாகச் சொல்லப்படும் முல்லைத் திணையின் உரிப்பொருள் இருத்தல். முல்லையிருத்தலைப் பற்றிய விளக்கத்தைச் சொல்லும் உரையாசிரியர்கள்   ஆற்றியிருத்தலும் ஆற்றாதிருத்தலும் என இரண்டுவகைப்பட்டதாகச் சொல்வார்கள். பிரிவில் தலைவியும் தலைவனும் பிரிந்திருந்தாலும், தலைவன்களின் பிரிவினைவிடத் தலைவிகளின் பிரிவுத்துயர்களே அதிகம் எழுதப்பட்டுள்ளன. குறிப்பாகப் போர்க்களத்திற்குச் சென்ற தலைவன் வருவானா? சொன்னநாளில் வருவானா? ஒருவேளை வராமலேயே போய்விடும் வாய்ப்புகளும் இருக்குமோ என்ற தவிப்போடு காத்திருக்கும் தலைவிகளைச் செவ்வியல் கவிதைகளில் வாசிக்கமுடியும்.

மருமகள்கள் என்னும் ‘வந்தேறிகள்’

படம்
பெண் மையக்கதைகளின் மையவிவாதம் தொடர்ந்து மாறிக்கொண்டே வருகிறது என்பதற்கு இதை உதாரணமாகச் சொல்லலாம். ஆண்களால் எழுதப்பட்ட கதைகளானாலும் பெண்களால் எழுதப்பட்ட கதைகளானாலும் இப்போதெல்லாம் கூட்டுக்குடும்பச் சிக்கல் முக்கியமான  பிரச்சினையல்ல.  அந்த மையம் நகர்ந்து கால் நூற்றாண்டு ஆகிவிட்டது. கதைகளின் மையமாக இல்லாமல் நகர்ந்து விட்டதால் அந்தப் பிரச்சினையைத் தமிழ்ச்சமூகம் தீர்த்துவிட்டது என்றும் பொருளில்லை. எல்லாவற்றையும் சரிப்படுத்தித் தீர்வுகண்டு ஏற்றுக் கொண்ட சமூகமாக ஆகிவிட்டது என்றும் நினைக்கவேண்டியதில்லை. அந்தப் பிரச்சினைகள் இன்னும் இந்திய/ தமிழ்ச் சமூகத்தின் பிரச்சினைகளாக இருந்துகொண்டுதான் இருக்கின்றன. செண்பகம் ராமசுவாமியும் அசோகமித்திரனும் எழுதிக்காட்டிய விதத்தைப் பார்க்கலாம்.

கெட்டுப்போகும் பெண்கள்

படம்
மனிதர்களின் அடிப்படைத் தேவைகள் உணவு, உடை, இருப்பிடம் என்று வரையறுத்துச் சொல்ல முடிவதுபோல் அடிப்படை உணர்வுகள் இவைதான் என்று வரையறுத்துச் சொல்லிவிட முடியாது. அடிப்படைத்தேவைகளைப் பெறவும் தனதாக்கிக்கொள்ளவும் உரிமைகொண்டாடவும் உருவாக்கப்படும் நடைமுறைகளே உழைப்பின் விதிகளாக மாறுகின்றன. உழைப்பு விதிகளின்படி கிடைக்கும் அடிப்படைத்தேவைக்கான பொருட்களைப் பிரித்துக்கொள்ளும் முறைகள் உருவாக்கப்படும்போது பொருளியல் அல்லது தொழில்முறை நடைமுறைகள் உருவாகின்றன.

நளாயினிகள்: மாதிரிகளை முன்மொழிதலும் கட்டுடைத்தலும்

படம்
கலை இலக்கியங்கள், சமூகமாற்றத்தில் வினையாற்றுவதில்லை; வினையாற்று கின்றன என்ற வாதம் இலக்கியத் திறனாய்வில் நீண்டகாலச் சொல்லாடல். சமூகமாற்றத்தில் இலக்கியத்தின் பங்கை மறுப்பவர்கள், தாங்கள் எழுதும் பிரதிகளில் முன்மாதிரிகளை உருவாக்குவதில்லை. ஆனால் சமூகத்தின் இருப்பில் அதற்கு முந்திய கலை, இலக்கியப்பிரதிகள் மாற்றங்களை உண்டாக்கியுள்ளன  என்ற உண்மையைப் புரிந்து கொண்டவர்கள் அப்படி விலகிச் செல்வதில்லை. 

ஒருமாதிரிப்பெண்கள்

மார்ச் 8. உலகப்பெண்கள் தினம். இப்படியொரு தினத்தை உருவாக்கி முன்மொழிந்து கொண்டாடிய ஆண்டு 1975. முன்மொழியப்படும் ஒவ்வொன்றையும் ஏற்பதும் நிராகரிப்பதும் நடைமுறைச் செயல்பாடு. நடப்புவாழ்க்கையில் எதிர்ப்படும் நெருக்கடியில் இரண்டிலொன்றைத் தேர்வுசெய்து விட்டு நகர்வது ‘இயல்பு’ என நம்பப்படுகிறது. இயல்பானது எனக் கேள்விக்குள்ளாக்கப்படாமல் விட்டுவிட்டவை ஏராளம். உன்னைப்பற்றி/பெண்ணைப் பற்றிச் சொல்பவைகளும் சொல்லப்பட்டவைகளும் இயல்பானவை என்று நம்பவேண்டாம் எனக் கூவிக்கூவிச் சொல்லிக்கொண்டிருக்கும் நாள் மார்ச் 8.

காதல்: காமம் - பெண் கவிதைகள்

இந்த மூன்று பெண்களின் - சாய் இந்து, பாலைவன லாந்தர், கவிதா ரவீந்திரன் -கவிதைகளை முகநூலில் மட்டுமே வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஓராண்டுகளாக இவர்களின் கவிதைகள் வாரத்திற்கு ஒன்றிரண்டாவது வாசிக்கக் கிடைத்துவிடும். அளவையும் கூற்றுகளையும் வைத்துக் குறுந்தொகை போலவும் நற்றிணை போலவும் அகநானூறு போலவும் என நினைத்துக்கொள்ளும்போது மென்மையான சிரிப்பொன்று ஓடி மறைந்துவிடும்.

ஆண்மை அடங்கட்டும்

படம்
தினசரிக் காட்சி என்று சொல்ல முடியாது. எனது பணி இடத்துக்குச் செல்லும் வாகனத்தைத் தவற விடாமல் பிடித்து விடும் நோக்கத்தோடு சரியான நேரத்துக்கு வரும் ஒவ்வொரு நாளும் காணும் காட்சி என்று சொல்லலாம்.

ஹெப்ஸிபா ஜேசுதாசனின் படைப்புலகமும் கருத்துலகமும்

படம்
ஒரு நாவலாசிரியரின் ஒட்டுமொத்த படைப்புகளையும் வாசித்து முடித்து விட்டு திறனாய்வுக்கட்டுரை எழுத நினைத்த போது முதலில் தெரிவு செய்த நாவலாசிரியர் ஹெப்சிபா. இந்தக் கட்டுரையைப் படித்த பலர் என்னைப் பாராட்டினார்கள். ஹெப்சிபாவே அப்போது வந்த திணை இதழின் நேர்காணலில் இந்தக் கட்டுரையின் கருத்தை ஏற்றுச் சில கேள்விகளுக்குப் பதில் சொல்லி இருந்தார். 22 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய இந்தக் கட்டுரையை அவரது இறப்பை ஒட்டி வலைப்பூவில் ஏற்றிக் காணிக்கை ஆக்குகிறேன்.

ஹெப்ஸிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு:பெண்ணெழுத்தின் முதல் அடையாளம்

படம்
தமிழில் புனைகதை இலக்கியம் தொடங்கிய காலந்தொட்டே இந்த வேறுபாடு உண்டு. இலக்கியத்தின் நோக்கம் சார்ந்த இந்த வேறுபாடு தமிழுக்கு மட்டும் உரியதல்ல. உலக இலக்கியம் எல்லாவற்றிலும் இருக்கும் ஒன்று தான். அதிலும் உழைப்பு , ஓய்வு என அன்றாட வாழ்க்கையைத் தனித்தனியாகப் பிரித்துப் பார்த்து வாழப் பழகிக் கொள்ளும் நடுத்தர வர்க்கத்தின் தோற்றத்தோடு தொடர்புடைய புனைகதை எழுத்தின் வரவிற்குப் பின் இந்த வேறுபாடுகள் இருப்பது ஆச்சரியம் எதுவுமில்லை. தீவிர எழுத்துக்காரர்கள் ( Serious literature ) வணிக எழுத்துக்காரர்கள் ( Commercial ) என்பதாக அணி பிரிந்து போட்ட சண்டைகளே ஒரு காலகட்டத்தில் தமிழின் திறனாய்வாகக் கருதப்பட்டது.

பாசமுள்ள இயந்திரங்கள்: ஆர்.சூடாமணியின் விலை

கடந்த இருபது ஆண்டுகளில் ஊடகங்களின் கவனத்திற்கு வந்ததால் அதிகம் விவாதிக்கப் பட்ட சில சமூகப் பிரச்சினைகள் உண்டு. பெண் சிசுக்கொலைகள் என்பதும் அவற்றுள் ஒன்று. எனது சொந்தக் கிராமம் பெண் சிசுக்கொலைகள் அதிகம் நிகழும் பகுதியாகச் சொல்லப் பட்ட உசிலம்பட்டி பகுதியில் தான் உள்ளது.