இடுகைகள்

திசைகளின் வாசல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இயல்பு தொலைக்கும் தமிழர்கள்

நான் நின்றிருந்த அந்த அங்காடி வளாகத்தில் மூன்று வங்கிகள் செயல்படுகின்றன . இரண்டு வங்கிகள் தேசியமயமாக்கப் பட்ட வங்கிகள். இந்த வங்கி பன்னாட்டு வங்கி. தேசிய மயமாக்கப்பட்ட வங்கியைப் போல மாநில மொழிக்கோ அல்லது தேசியமொழி என நம்பப்படும் இந்திக்கோ இங்கு வேலை இல்லை. எல்லாமே ஆங்கிலத்தில். அங்கே வேலை பார்க்கும் இளைஞர்களும் யுவதிகளும் பரிமாறிக் கொள்ளும் மொழி கூட ஆங்கிலமாகத்தான் இருக்கிறது. பேச்சு மொழி ஆங்கிலமாக இருந்தால் கூடப் பரவாயில்லை. அவர்களின் உடல் மொழியே ஆங்கில நளினத்துக்குரியதாக ஆகி இருப்பதை நீங்கள் நேரில் பார்க்கும் போது தெரிந்து கொள்ளலாம்.

பயணிகள் கவனிக்கவும் . . . . . .

மனமும் கண்களும் ஒன்று படும் நேரங்கள் மிகக் குறைவு. நண்பரின் வருகைக்காக ரயில் நிலையத்தின் இருக்கையில் அமர்ந்து கைவசம் இருந்த புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தேன். மனம் படிக்க விரும்பினாலும் கண்கள் காட்சிகளில் தான் கவனம் செலுத்திக் கொண்டிருந்தது. திருநெல் வேலி தொடர்வண்டிச் சந்திப்பு மாலை ஆறுமணி தொடங்கி ஒன்பது மணி வரை மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும்.

சுதந்திரம் என்னும் பெருநெருப்பு

படம்
" எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு -நாம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சுசங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே - இதைத் தரணிக்கெல்லாமெடுத்து ஓதுவோமே ‘’என்று கவி பாரதி பாடிய சுதந்திரப் பள்ளு தேசத்திற்கான விடுதலையை மையப்படுத்தியது என்பதில் நமக்குச் சந்தேகம் இல்லை.

அமெரிக்கத்தேர்தலும் அடையாள அரசியலும்

அமெரிக்கத் தேர்தல் இந்தியத் தேர்தல் போன்றதல்ல என்பது பலருக்கும் தெரியும். ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி என்ற இரு கட்சிகளும் தான் மாறி மாறி ஆட்சியைப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. ஒரு குடியரசு நாட்டில், ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் நிலையில் பெரிய வேறுபாடுகள் இருக்காது. அமெரிக்காவின் குடியரசுக்கட்சிக்கும் ஜனநாயகக் கட்சிக்கும் அடிப்படையான கொள்கைகளில் வேறுபாடுகள் எதுவும் இல்லை. இப்போது அதிபராக இருக்கும் ஜார்ஜ் புஷ்ஷின் குடியரசுக் கட்சி ஜான் மெக்கைன் என்னும் 71 வயது நபரைத் தனது வேட்பாளராக மூன்று மாதத்திற்கு முன்பே முடிவு செய்து விட்டது. ஆனால் இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெறாது, ஜனநாயகக் கட்சி தான் வெற்றி பெறும் என ஊடகங்களும், கருத்துக் கணிப்புக்களும் சொல்ல , அதன் வேட்பாளராகப் போட்டியிடக் கடுமையான போட்டி நிலவியது. அந்தப் போட்டியும் கடந்த வாரம் முடிவுக்கு வந்து விட்டது.

புனல் வாதம் அனல் வாதம்

ஆந்திர அரசு பெண்ணையாற்றில் 100 தடுப்பணைகளைக் கட்டும் பணிகளைத் தொடங்கி விட்டது. அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளைப் பலரும் எழுப்பி வருகின்றனர். ஆந்திரத்து ஸ்ரீசைலம் மலையில் உற்பத்தியாகும் பொன்னையாறு வேலூர் மாவட்ட திருவலம் அருகே பாலாற்றில் கலக்கிறது. அதிலிருந்து வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களுக்குக் குடிதண்ணீர் கிடைக்கிறது. எனவே மத்திய அரசில் தனக் கிருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தித் தமிழக முதல்வர், இந்தப் பிரச்சினைக்கு உடனே தீர்வு காண வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை.

மாற்றப்படும் பெயர்களும் மாறும் முகங்களும்

ரவி என்ற இளம் நடிகர் நடித்த முதல் படத்தின் பெயர் ஜெயம் . இச்சொல் வெற்றி என்ற பொருள் தரும் ஒரு வடமொழிச் சொல்.அப்படம் வியாபார ரீதியில் வெற்றிப் படமாக அமைந்ததால் தனது பெயருடன் அதைச் சேர்த்துக் கொண்டுவிட்டார் ரவி. இவர் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படத்தின் பெயர் something something எனக்கும் உனக்கும் . இத்தலைப்பில் இருந்த ஆங்கில எழுத்துக்களைப் பின்னர் சம்திங் சம்திங் எனத் தமிழ் எழுத்துக்களாக மாற்றி அச்சிட்டனர். இப்பொழுது ஆங்கிலத்தில் இருந்த something something என்பதும் இல்லை . தமிழில் எழுதப்பட்ட சம்திங் சம்திங் என்ற இரட்டைக் கிளவியும் இல்லை .

தி டாவின்சி கோடும் மாதவி சிலையும்

புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தில் நடந்த விவாதங்கள், அடிதடிகள் பற்றிப் புதிதாகச் சொல்ல ஒன்றும் இல்லை.தினசரிகளில் படித்திருக்கலாம். மிகுந்த பொறுப்போடு எழுப்பப்பட்ட இரண்டு கோரிக்கைகளையும் அதனைச் சட்டமன்றம் எதிர்கொண்ட விதத்தினையும் பற்றிச் சொல்லித் தான் ஆக வேண்டும். இந்த இரண்டு கோரிக்கைகளையும் எழுப்பியவர் காட்டுமன்னார்கோவில் தொகுதிச் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் என்பதால் அவை கூடுதல் கவனத்துக்குரியதும் கூட. எழுப்பிய கோரிக்கைகளில் ஒன்று ஓரளவு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது; இன்னொன்றுக்கு வெறும் சிரிப்புத்தான் பதிலாகக் கிடைத்துள்ளது.