இடுகைகள்

மார்ச், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இருமொழிகளில் ஒரு கவிதைத் தொகுப்பு

படம்
காண்மதி நீவிர்... கண்டா வரச்சொல்லுங்க... செவ்வியல் கவிதைகளில் ஆங்காங்கே விளித்துச் சொல்லும் சொற்றொடராக இருக்கும் ஒன்று காண்மதி. கண்டது தானே? என்ற வினாவும் விடையும் உள்ளடக்கிய ஒரு சொற்றொடர். அதனைத் தொடர்ந்து வரும் ‘நீவிர்’ என்பது முன்னிலைப் பன்மை. நீங்கள் கண்டுகொள்ளுங்கள் என்று ஒன்றைக் குறித்துச் சொல்வதாகவோ, நீங்கள் பார்த்தீர்களா? என அறியா வினாவாகவோ கேட்கும் தன்மையிலானது. பெரும்பிரிவிலோ, சிறுபிரிவிலோ தனித்திருக்கும் தலைவியின் மனம் தலைவனைத் தேடிக் கொண்டிருக்கும்போது உருவாகும் வினாச் சொற்றொடர். இவர்கள் எல்லாம் பார்த்திருப்பார்கள்; நான் தான் பார்க்கவில்லை; ஆனால் பார்த்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கின்றது.