இடுகைகள்

ஜனவரி, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மந்தையிலிருந்து விலகத் துடிக்கும் இரண்டு ஆடுகள்

படம்
வசந்த பாலனின் காவியத்தலைவனையும் மிஸ்கினின் பிசாசுவையும் முன் வைத்து திரையரங்கிற்குச் சென்று சினிமாவைப் பார்ப்பது என்பது சிக்கலாகிக் கொண்டே வருகிறது. அதுவும் திருநெல்வேலி போன்ற கிராமீய மணம் மாறாத நகரத்தின் திரையரங்குகளை நம்பி ஒரு புதுப்படத்திற்குச் செல்வது பெரும் சிக்கலானது. படம் வெளியாகும் வெள்ளிக்கிழமை வேண்டாம் சனி, ஞாயிறுகளில் பார்க்கலாம் என்று நினைத்தால் கூடச் சங்கடமாகிவிடுகின்றது. மூன்று மாதங்களாகப் பேச்சிலிருக்கும் ஒரு படம் மூன்று நாட்களைத் தாண்டுவது முயல்கொம்பாகி வருகிறது. திரைப்படங்களைப் புறக்கணிக்கத் தொடங்கியிருக்கும் தமிழ்மனோபாவம் வரவேற்க வேண்டியதா? வருத்தம் கொள்ளவேண்டியதா? என்னும் பெரிய கேள்வி உருவாகியிருக்கிறது.

எழுத்துக்குத் தடை என்னும் பேதமை: மாதொருபாகனை முன்வைத்து

படம்
பெருமாள் முருகனின் மாதொரு பாகனை அப்போது வாசித்திருக்க வில்லை. மாதொருபாகன் (2010) மட்டுமல்ல; 2011-2013 ஆண்டுகளில் வந்த பல நூல்களைப் படிக்கவில்லை. நான் போலந்து நாட்டு வார்ஷா பல்கலைக்கழகம் போனது ஒரு காரணம். இங்கே வந்த பிறகு இப்போது புதிதுபுதிதாக வந்து கொண்டிருக்கும் நாவல்களையே படிக்க நேரம் கிடைக்கவில்லை. அந்த 2 ஆண்டுப் பாக்கி அப்படியே தான் இருக்கப்போகிறது. பெருமாள் முருகனின் மாதொரு பாகனை வாசிக்காமல் விட்டதற்குப் பெரிதாக வருத்தமில்லை. ஆனால் அவரின் நிழல்முற்றம் (1993) நாவலை வாசிக்காமல் இருந்ததற்காக வருத்தப்பட்டதுண்டு.

நகரும் நதிக்கரையில் நடந்தபடி…

படம்
நதிக்கரையோரக் கிராம வாழ்வாயினும் நகர வாழ்வாயினும் நீரோடும் நீருக்குள் சுழலும் நினைவுகளோடும் பின்னிப் பிணைந்ததாகவே இருக்கக்கூடும். கவி கலாப்ரியாவின் மறைந்து திரியும் நீரோடை என்னும் கட்டுரைத் தொகுப்பை வாசிக்கும்போது நீரின் சிலிர்ப்பைத் தவிர்த்து நினைவின் சுளிப்பைத் தொடரும் பயணமாக மாறிவிட்டதை உணர்ந்தேன். பயணங்கள் எப்போதும் பாதத்தின் நகர்வில் சாத்தியமாகக் கூடியவை. அசையாப் பாதங்கள் அலையா மனதின் உறைவிடம்.