இடுகைகள்

ஜனவரி, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நள்ளிரவு ரயில் பயணங்கள்

படம்
கோவையிலிருந்து திருப்பத்தூருக்கு நேரடியாகப் போய்ச் சேர வேண்டும் என நினைத்து கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் காத்திருந்தேன். ரயில் இரவு 09.50 -க்குத் தான். போத்தனூர் ரயில் நிலையக் கொசுக்களோடு நடத்திய யுத்தத்தில் சிந்திய ரத்தத்தை விடச் சோகமானதாக ஆகி விட்டது அந்தப் பயணம்.

படித்துப்பாருங்கள்; எதிர்த்துப் பேசலாம்

படம்
  மாதொருபாகன் நாவல் படிப்பதற்காக எழுதப்பெற்ற ஒரு பிரதி. படித்தபின் செய்ய வேண்டிய வேலை விளங்கிக் கொள்ளுதல். விளங்கிக் கொள்ளுதல் என்பது இரண்டு நிலைகளில் முழுமையடைகிறது. எழுதியவனின் நோக்கத்தில் புரிந்து கொண்டால் அதனோடு ஒத்துப் போகிறோம். எழுதியவரின் நோக்கத்திற்கு மாறாக வாசித்தவரின் நோக்கத்தில் புரிந்து கொண்டால் விமரிசனம் செய்கிறோம். எழுதியவரின் நோக்கத்தில் வாசித்து விளக்கினால் அது பாராட்டுமுறை அல்லது ரசனைமுறைத் திறனாய்வு. வாசித்தவரின் நோக்கத்தில் விளக்கினால் அந்தத் திறனாய்வுக்குப் பல பெயர்கள் இருக்கின்றன. நிச்சயம் அது பாராட்டல்ல. பெருமாள் முருகனின் மாதொருபாகனை வாசித்துப் பாருங்கள். பாராட்ட விருப்பமில்லையென்றால் உங்கள் நோக்கத்தில் விமரிசனம் செய்யுங்கள். வாசித்துவிட்டு எதிர்த்துப் பேசலாம் அது விமரிசனம் அல்லது திறனாய்வு. வாசிக்காமலேயே எதிர்த்துப் பேசாமல் தடையைக் கோரினால் அது பாசிசம். விமரிசன மனோபாவம் ஜனநாயகத்தின் அடையாளம். தடையைக் கோரும் பாசிச மனோபாவம் அடிமைத்தனத்தை விரும்புவதின் அடையாளம். நமது சமூகம் விமரிசனப் பூர்வமான சமூகமாக ஆகவேண்டுமா? அடிமைத்தனத்தைப் பாராட்டும் சமூகமாக ஆக்கப்பட வேண்ட...

ஜெயமோகனின் வெண்முரசு வாசிக்கத் தொடங்கியுள்ளேன்:

ஆன்மா தொலையாத அந்தக் காலத்தில் எனது கிராமத்தில் நள்ளிரவு வரை கதை சொல்லிகள் கதை சொல்லிக் கொண்டிருப்பார்கள். விசேசமான,விதம் விதமான கதை சொல்லிகள் எல்லாம் உண்டு. ஒரு சுவாரசியமான கதை சொல்லி இருந்தார். அவர் பெயரும் ராமசாமி தான்.