இடுகைகள்

பிப்ரவரி, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆவணப்படுத்துதலின் அரசியல்: நகரும் நாட்டுப் புறங்கள்

முன்குறிப்பு:  இந்தக் கட்டுரை இ.பத்மநாப ஐயர் தொகுத்த பன்னாட்டுத் தமிழ் எழுத்தாளர்கள் பங்கேற்ற தொகுப்பு ஒன்றில் இடம்பெற்ற கட்டுரை. அத்தொகுப்பிற்கு அவர் வைத்த பெயர் யுகம் மாறும். வெளிவந்த ஆண்டு 1999. இந்தக் கட்டுரை  அந்த ஆண்டு எழுதியதல்ல. 1988 இல் தமிழ் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள் – முன்னும் பின்னும் என்ற தலைப்பில் ஆராய்ச்சி இதழில் எழுதிய கட்டுரையையே 1999 –ன் சூழலுக்கேற்ப நிகழ்காலத் தகவல்களுடன் மாற்றி எழுதி “ நகரும் நாட்டுப் புறங்கள் “ என்று தலைப்பிட்டேன். இப்போது 2012 இல் வலைப்பூவில் அதை அப்படியே பதிவேற்றம் செய்கிறேன். இந்தக் கட்டுரை    இற்றைப்படுத்த் வேண்டிய் ஒன்று என்பதை அறிவேன். இப்போது செய்யத் தோன்றவில்லை ======================================================================== இசைஞானி இளையராஜா, கி.ராஜநாராயணன், நடிகர் நாசர், ந.முத்துசாமி, மீனா சுவாமிநாதன்,தேவிகா, புஷ்பவனம் குப்புசாமி, கழனியூரன், டாக்டர் விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன், டாக்டர் கே.ஏ.குணசேகரன், டாக்டர் தே.லூர்து, டாக்டர் மு,ராமசுவாமி,டாக்டர் கு.முருகேசன்- இந்தப் பெயர்கள் தமிழக நாட்டுப் புறவியல் க...

பெரியாரே! பெரியாரே!! அப்பாவிகள் இவர்கள். அறியாமல் செய்கிறார்கள்

படம்
தமிழ்நாட்டின் பொதுமனிதர்கள் ஞான .ராஜசேகரனை எவ்வாறு அறிந்திருப்பார்கள் என்பதற்குத் துல்லியமான புள்ளி விவர ஆதாரங்கள் எதுவும் இல்லை. இந்திய ஆட்சியியல் அதிகாரியாகப் பணி செய்யும் அவரின் தொடக்க அறிமுகம் நவீன நாடகங்கள். இன்று நவீன நாடகங்களில் செயல்படும் பலரும் கூட அவரை நாடக்காரராக அறிவார்களா? என்பது சந்தேகம்தான். நவீனத்துவ மனநிலை என்பதைச் சரியாகப் புரிந்து கொண்டவராக எழுபதுகளின் இறுதியிலேயே வெளிப்பட்டவர் ராஜசேகரன். நவீன நாடகப் பிரதிகளை உருவாக்கிய ந.முத்துசாமி, இந்திரா பார்த்தசாரதி ஆகியோருடன் சமகாலத்தில் வைத்து நினைக்கப்பட வேண்டியவர் அவர். வயிறு-1978 ,மரபு-1979, பாடலிபுத்திரம்-1980 ‘ என அடுத்தடுத்த ஆண்டுகளில் தனது மூன்று நாடகங்களை எழுதியவர் . இம்மூன்று நாடகப்பிரதிளும் வயிறு என்ற தொகுப்பாக 1980-இல் அகரம் வெளியீடாக வந்தது. இம்மூன்றில் வயிறு மட்டும் பம்பாய் [1978, இயக்கம் : கே. ஆர் . பரமேஷ்வரராவ் ] ,கோவை[1979, இயக்கம்: புவியரசு] மதுரை [1988, இயக்கம்: அ.ராமசாமி] எனச் சில மேடையேற்றங்களைக் கண்டிருக்கிறது. ஆனால் மற்ற நாடகங்கள் மேடை யேறியதாகவோ, விவாதிக்கப்பட்டதாகவோ, பாடமாகப் படிக்கப்பட்டதாகவோ கூடத் தெர...

ஹெப்ஸிபா ஜேசுதாசனின் படைப்புலகமும் கருத்துலகமும்

படம்
ஒரு நாவலாசிரியரின் ஒட்டுமொத்த படைப்புகளையும் வாசித்து முடித்து விட்டு திறனாய்வுக்கட்டுரை எழுத நினைத்த போது முதலில் தெரிவு செய்த நாவலாசிரியர் ஹெப்சிபா. இந்தக் கட்டுரையைப் படித்த பலர் என்னைப் பாராட்டினார்கள். ஹெப்சிபாவே அப்போது வந்த திணை இதழின் நேர்காணலில் இந்தக் கட்டுரையின் கருத்தை ஏற்றுச் சில கேள்விகளுக்குப் பதில் சொல்லி இருந்தார். 22 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய இந்தக் கட்டுரையை அவரது இறப்பை ஒட்டி வலைப்பூவில் ஏற்றிக் காணிக்கை ஆக்குகிறேன்.

பூமணியின் வெக்கை : தமிழ் நாட்டுக் கிராமங்களின் தகிப்பு

படம்
1960- களுக்குப் பின்பு எழுதத் தொடங்கிக் குறிப்பிடத்தக்க நாவலாசிரியர்களாக அறியப்படும் பலரும் அவர்களின் முதல் நாவலின் வழியாகவே திரும்பத் திரும்ப அடையாளப்படுத்தப் படுகிறார்கள். பூமணியும் அதற்கு விலக்கில்லை அவரது முதல் நாவலான பிறகு வோடு சேர்த்தே அடையாளம் காணப்படுகிறார். வட்டாரம் சார்ந்த எழுத்தாளர்களாக அறியப் படும் பலரும் அத்தகைய அடையாளம் பெறாமல் தப்பிக்க முடியாது.

பனியும் பனியின் நிமித்தமும்

படம்
”கதவைத் திற; காற்று வரட்டும்” நான் தொகுக்க நினைக்கும் நவீனத் தமிழ்க் கவிதைத் தொகுப்பில் பசுவய்யாவின் இந்த கவிதை நிச்சயம் இடம் பெறும். மூடுண்ட இந்திய சமூகத்தின் ஒட்டு மொத்த கதவாக அவர் சொல்லும் கதவை விரிக்காமல் தமிழ்ப் பண்பாட்டுக் காவலர்களின் குறுகிய மனக் கதவைக் குறிக்கவே இக்கவி தையை எழுதினார் என வியாக்கி யானங்கள் சொல்லப்பட்டாலும், நான் அந்தக் கவிதையை இந்தியப் பரப்பிற்கான கவிதையாகவே நினைக்கிறேன். இந்திய சமூகத்தின் பல்வேறு நிறுவனங்களின் மூடுண்ட கதவுகளைத் திறந்து உள்ளிருளைப் போக்கும் அறிவொளியெனும் வெளிச்சத்தையும் உடலில் பரவிச் சுகமளிக்கும் காற்றையும் அனுமதிப்பதற்குச் சாளரங்களின் கதவுகள் திறக்கப்பட வேண்டும் எனச் சொல்வதாகவே நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

காவல்கோட்டம்: இந்தத் தேர்வு சரியென்றால் இதைத் தொடர என்ன செய்யப் போகிறோம்?

படம்
தேர்வுகள் என்ன உணர்வைத் தருகின்றன என்பது சந்திக்கின்றவர்களைப் பொறுத்தது. இந்திய மாணவர்களுக்குப் பல நேரங்களில் பயமுறுத்துவனவாக இருக்கின்றன. ஆனால் ஐரோப்பிய மாணவர்கள் அதை எதிர்பார்ப்புடன் - ஆர்வமூட்டும் ஒன்றாக - பார்க்கிறார்கள் என்பது எனது அனுபவம். இந்தியாவில் மாணவர்கள் தேர்வைத் தங்களுக் குரியதாகக் கருதி எப்படிப் பதில் எழுதுவது என்ற கோணத்தில் சிந்திக்கிறார்கள்; தயார் செய்கிறார்கள். ஐரோப்பிய மாணவர்கள் தேர்வு நடத்துவது ஆசிரியரின் வேலை என எடுத்துக் கொண்டு எப்படியெல்லாம் கேள்வி கேட்பார்கள் எனச் சிந்தித்துத் தயாராக இருக்கிறார்கள்.