அந்த முறை நானும்

அந்த அழைப்பிதழில் எனது பெயரும் இருந்தது. ‘தாய் மாமன்மார்கள் என்ற பட்டியலில். அந்த உறவின் நேரடி அா்த்தம் எனக்குப் பொருந்தாது என்றாலும். எனது மனைவிக்கு அவா்கள் ரத்த உறவினா்கள் அதனால் அந்தக் குழந்தைகளுக்கு நானும் தாய்மாமன் ஆகி இருந்தேன். அழைப்பிதழில் மதுரைக்கு அருகில் உள்ள பிரபலமான ‘பாண்டி முனியாண்டி கோவிலில்‘ மொட்டை அடித்து காது குத்தும் விழா நடைபெறுவதாக அழைத்தது. அதில் ‘இரட்டைக்கிடாய் வெட்டப்படும்‘ என்ற குறிப்பு எதுவும் இல்லை. இரண்டு குழந்தைகளுக்கு மொட்டை எடுக்கப்படுவதால் இரண்டு கிடாய்கள் வெட்டப்படும் என்பது உடன்குறிப்பு.