இடுகைகள்

சாருவின்மயானக் கொள்ளை :கலவையான நிகழ்த்துதலைக் கோரும் நாடகப்பிரதி

தன்னை உள்ளிருத்திக் கதைகள்(Auto -Fictional) எழுதும் சாருநிவேதிதா அதே பாணியை நாடகப் பிரதி ஆக்கத்திலும் கையாண்டுள்ளார். புதுவைப்பகுதியில் அங்காளம்மன் திருவிழாவில் நடக்கும் ”மயானக் கொள்ளை” என்னும் சடங்கியல் நிகழ்வின் காட்சிகள் அவற்றின் பின்னிருக்கும் நம்பிக்கைகளோடும் மாயத் தன்மையோடும் உள்ளோட்டமாக இடம்பெற்று நிகழ்த்துப் பிரதியாகியுள்ளது. முதல் அங்கம் வசனக் கதைசொல்லலாகவும் இரண்டாவது அங்கம் குரூர அரங்கியலாகவும் மூன்றாவது அங்கம் பழக்கங்களின் மீதான அங்கதமாகவும் கடைசி அங்கம் சடங்கியல் அரங்காகவும் எழுதப்பட்டுள்ளது. 

தேர்தல் 2019 - IV

 18-04-19/ இது வித்தியாசமான வாக்களிப்பு இந்தியா/ தமிழகம் மக்களாட்சித் திருவிழாவில் பங்கேற்கப் பழகிவிட்டது என்று சொல்கிறது இந்தப் பக்குவம். வாழ்க மக்களாட்சி முறை.

கவிதை வாசிப்புக்கணங்கள்

எழுதவிரும்பும் ஒருவர் முதலில் தொடங்குவது கவிதையாக இருக்கிறது. ஒன்றைப் பார்த்தவுடன் - ஒன்றில் பங்கேற்றவுடன் -ஒன்றால் பாதிக்கப்பட்டவுடன் அதைக் குறித்துச் சொல்வதற்கேற்ற இலக்கியவடிவம் கவிதை. அக்கவிதை வடிவத்திலேயே தொடர்ந்து செயல்படுகிறவர்கள் உணர்வை எழுதுவதிலிருந்து மெல்லமெல்ல நகர்ந்து அறிவையும் கருத்தியலையும் சிந்திப்பு முறைமைகளையும் கவிதையாக்கும் முயற்சிக்கு நகர்கிறார்கள். அப்படி நகரும்போது அந்தக் கவிஞர்கள் அந்த மொழியில் இயங்கும் காலத்தின் கவியாக அடையாளப் படுகிறார்கள். நவீனத்துவத்தை உள்வாங்கிய பாரதியின் தொடக்கக் காலக் கவிதைக்கும் பிந்தியக் காலக் கவிதைகளுக்குமான வேறுபாட்டைக் கவனிப்பவர்களுக்கு இது புரியும். 

பழைய பாதைகள்; புதிய பயணங்கள்

படம்
இந்தத் தேர்தல் தரப்போவது புதிய அனுபவம்” -ஐந்தாண்டுக்கொரு முறை வரும் தேர்தலைக் கணிக்க முயல்பவர்கள் ஒவ்வொரு தடவையும் சொல்லும் வாசகம் இது. திரும்பத் திரும்பச் சொல்லப்படும் சலிப்புத்தொடர் என்றாலும், இந்தச் சலிப்புத் தொடரைச் சுவாரசியமாக்குபவை ஊடகங்கள்தான். ஒவ்வொரு நாளையும் புத்தம்புதிய ஒன்றுமூலம் தொடங்க வேண்டும் என்று நினைப்பது ஊடகப்பணிக் கோட்பாட்டு. ஊடகங்களால் நிகழ்த்தப்படும் இந்தத் தேர்தலையும் அவை புத்தம்புதியது எனச் சொல்லி முன்வைக்கின்றன.

அரசியல் சார்பும் வர்க்க நலனும்

படம்
தமிழ்நாட்டின் சன் தொலைக்காட்சிக் குழுமமும் புதிய தலைமுறைத் தொலைக்காட்சிக் குழுமமும் இப்போதைய தேர்தலில் காட்டும் நடுநிலைப் போக்கு பலருக்கும் அதிருப்தியை உண்டாக்கியிருக்கிறது. அந்த அதிருப்தியாளர்கள் பெரும்பாலும் தி.மு.க. ஆதரவு வாக்காளர்களாகவே இருப்பார்கள். அவர்கள் தங்களை அரசியல் அறிவுகொண்ட பார்வையாளர்களாக நினைத்துக் கொண்டிருக்கவும் வாய்ப்புண்டு. அதனால் தான் அவர்களால் ஏற்க முடியாமல் இருக்கிறது.

தேர்தல் -2019 -III

படம்
தமிழ் அடையாளங்களென நமது உறுப்பினர்கள்  மக்களாட்சி என்னும் அரசமைப்பு அடிப்படையில் புறநிலை யதார்த்தத்திற்கேற்பத் தன்னிலையை மாற்றிக்கொண்டு ஒவ்வொரு மனிதனும் பொது மனிதனாக ஆவது என்ற உயரிய சிந்தனையை முன்வைக்கும் ஒரு கோட்பாடு. நான், எனது, என்ற அகம் சார்ந்த தன்னிலை உருவாக்கக் கூறுகளை ஒரு மனிதனிடமிருந்தால் அதைக் குறைத்துப் பொதுநிலைப்பட்ட மனிதனாக ஆக்கும் நோக்கம் கொண்டது. அதன் மூலம் அம்மனித ஆன்மாவை விடுதலை அடையச் செய்யும் பாதையே மக்களாட்சியின் பாதை.