இடுகைகள்

எப்போதும் நின்றாடும் கள்வன்

படம்
2016 சட்டமன்றத்தேர்தலில் வாக்களிக்கவில்லை. ஏப்ரல் கடைசி வாரத்தில் தேர்தல் நடந்திருந்தால் வாக்களிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும். ஜனவரியிலேயே பயணத்தை உறுதிசெய்து பயணச்சீட்டுகள் வாங்கிவிட்டதால் மாற்ற முடியாது.

மறக்கடித்தல் அதனினும் கொடிது.

படம்
நபர்களின் நடவடிக்கைகளை முன்வைத்து அரசியல் சொல்லாடல்களை உருவாக்குவது வெகுமக்கள் ஊடகங்களின் தந்திரம். ஊடகத் தந்திரங்களுக்குக் கேள்விகளற்றுப் பலியாகும் முதன்மை வர்க்கம் நடுத்தரவர்க்கம். எதையும் அறிவுபூர்வமாக விவாதிப்பதாக நம்பும் நடுத்தரவர்க்கம்.

சில தோல்விகள்;சில வருத்தங்கள்

படம்
சட்டசபைத் தேர்தல் 2016 -ன் முடிவுக்குப்பின் சிலரது தோல்விக்காகப் பலரது வருத்தங்களை முகநூலெங்கும் வாசிக்கமுடிகிறது.  அதிகமானவர்களின் வருத்தம் வி.சி.க.வின் தலைவர் தொல். திருமாவளவனின் தோல்வி பற்றியதாக இருக்கிறது. அடுத்தது சுப. உதயகுமார்.   மூன்றாவதாக முனைவர் வே.வசந்திதேவி.இதில் முனைவர் வசந்திதேவியின் தோல்வியும் சுப.உதயகுமாரின் தோல்வியும் எதிர்பார்த்த தோல்விதான். ஆனால் தொல். திருமாவளவனின் தோல்வியை நான் எதிர்பார்க்கவில்லை.

ஈழம் : போரும் போருக்குப் பின்னும் - அண்மைப் புனைகதைகளை முன்வைத்து

படம்
இலக்கிய உருவாக்கத்தில் உள்ளடக்கத்திற்கும் வடிவத்திற்குமான உறவுபற்றிய சொல்லாடல்கள் முடிவிலியாகத் தொடர்பவை. எழுதப்படும் நிகழ்வு ஒன்றே ஆயினும், வெளிப்பாட்டுத்தன்மையையும் எழுப்பும் விவாதங்கள் அல்லது விசாரணைகளையும் இலக்கியத்தின் வடிவமே தீர்மானிக்கிறது. அடிப்படை இலக்கிய வடிவங்களான கவிதை, நாடகம், கதைகள் என்ற மூன்றிலும் எல்லாவற்றையும் எழுதிக் காட்டமுடியும் என்றாலும், வெளிப்படும்போது வேறுபாடுகள் தவிர்க்க முடியாதவைகளாக இருக்கின்றன. என்றாலும் ஒவ்வொரு வடிவத்திற்கும் பொருத்தமான சம்பவங்களும் சொல்முறையும் இருக்கவே செய்கின்றன. இலக்கியப் பிரதிகள் அடிப்படையில் மனிதர்களின் உணர்வுகளையும், உறவுகளையும் பதிவுசெய்யும் வெளிப்பாட்டு வடிவங்கள். உணர்வுகளும்சரி, உறவுகளும்சரி மனிதர்களுக்கிடையேயானதாகவும், மனிதர்களுக்கும் இயற்கைக்கு மிடையேயானதாகதாகவும் இருக்கின்றன.