இடுகைகள்

கதவு திறக்கட்டும்

” உறவுப்பாலம் -இலங்கைச் சிறுகதைகள்”” இப்படியொரு தொகுப்பைப் படித்துக் கொண்டிருக்கிறேன் மொத்தம் 25 சிறுகதைகள் (சிங்களமொழியிலிருந்து 8; தமிழிலிருந்து 7; ஆங்கிலத்திலிருந்து 10) தொகுக்கப்பட்டிருக்கின்றன. தொகுத்தவர் ராஜீவ் விஜேசின்ஹ. இவருக்கு இத்தொகுப்பை உருவாக்குவதற்குச் சிங்கள மொழிக் கதைகளுக்காக விஜிதா பெர்னாண்டோவும் தமிழ்க் கதைகளுக்காக விமரிசகர் கே.எஸ்.சிவக்குமரனும் உதவியிருக்கிறார்கள்.தமிழின் பிரதிநிதிகளாக டி.எஸ்.வரதராஜன், கே.சட்டநாதன், என். எஸ், எம்.ராமையா, செ.யோகநாதன், தாமரைச்செல்வி, ஐயாதுரை சாந்தன், ரஞ்சகுமார் ஆகியோரின் கதைகள் இடம்பெற்றுள்ளன.

தேர்தல் என்னும் திருவிழா

2016 சட்டமன்றத் தேர்தல் இதுவரை இல்லாத விசித்திரமாக மாற்றப்பட்டு விட்டது. முறைப்படி தேர்தலை அறிவிக்கும் தேர்தல் ஆணையமே 90 நாட்களுக்கு முன்பே அறிவித்துவிட்டது. அப்போது முதல் பணப் பரிவர்த்தனையையும் விளம்பர முன்னிறுத்தலையும் கட்டுப்படுத்த காவல் துறையும் மாவட்ட நிர்வாகமும் களத்தில் இறங்கிவிட்டன.படம்பிடிக்கும் காமிராக்களோடு ஆங்காங்கே நிற்கும் காவல் துறை வாகனங்கள், தேர்தல் வந்து விட்டது என்பதைக் காட்சிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

காத்துக்கொண்டிருக்கும் பெண்கள்

படம்
காத்துக் கொண்டிருக்கும் பெண்கள் என்பது  தமிழ் இலக்கியத்தின் அடிப்படையான அடிக்கருத்து(Motif ) களில் ஒன்று. ஓதல், தூது, பகை காரணமாகப் பிரிந்து செல்லும் தலைவனுக்காகக் காத்திருக்கும் தலைவிகளைத் தமிழ்ச் செவ்வியல் கவிதைகள் விதம்விதமாக எழுதிக் காட்டியுள்ளன.  அன்பின் ஐந்திணைகளில் ஒன்றாகச் சொல்லப்படும் முல்லைத் திணையின் உரிப்பொருள் இருத்தல். முல்லையிருத்தலைப் பற்றிய விளக்கத்தைச் சொல்லும் உரையாசிரியர்கள்   ஆற்றியிருத்தலும் ஆற்றாதிருத்தலும் என இரண்டுவகைப்பட்டதாகச் சொல்வார்கள். பிரிவில் தலைவியும் தலைவனும் பிரிந்திருந்தாலும், தலைவன்களின் பிரிவினைவிடத் தலைவிகளின் பிரிவுத்துயர்களே அதிகம் எழுதப்பட்டுள்ளன. குறிப்பாகப் போர்க்களத்திற்குச் சென்ற தலைவன் வருவானா? சொன்னநாளில் வருவானா? ஒருவேளை வராமலேயே போய்விடும் வாய்ப்புகளும் இருக்குமோ என்ற தவிப்போடு காத்திருக்கும் தலைவிகளைச் செவ்வியல் கவிதைகளில் வாசிக்கமுடியும்.

மருமகள்கள் என்னும் ‘வந்தேறிகள்’

படம்
பெண் மையக்கதைகளின் மையவிவாதம் தொடர்ந்து மாறிக்கொண்டே வருகிறது என்பதற்கு இதை உதாரணமாகச் சொல்லலாம். ஆண்களால் எழுதப்பட்ட கதைகளானாலும் பெண்களால் எழுதப்பட்ட கதைகளானாலும் இப்போதெல்லாம் கூட்டுக்குடும்பச் சிக்கல் முக்கியமான  பிரச்சினையல்ல.  அந்த மையம் நகர்ந்து கால் நூற்றாண்டு ஆகிவிட்டது. கதைகளின் மையமாக இல்லாமல் நகர்ந்து விட்டதால் அந்தப் பிரச்சினையைத் தமிழ்ச்சமூகம் தீர்த்துவிட்டது என்றும் பொருளில்லை. எல்லாவற்றையும் சரிப்படுத்தித் தீர்வுகண்டு ஏற்றுக் கொண்ட சமூகமாக ஆகிவிட்டது என்றும் நினைக்கவேண்டியதில்லை. அந்தப் பிரச்சினைகள் இன்னும் இந்திய/ தமிழ்ச் சமூகத்தின் பிரச்சினைகளாக இருந்துகொண்டுதான் இருக்கின்றன. செண்பகம் ராமசுவாமியும் அசோகமித்திரனும் எழுதிக்காட்டிய விதத்தைப் பார்க்கலாம்.