கதவு திறக்கட்டும்
” உறவுப்பாலம் -இலங்கைச் சிறுகதைகள்”” இப்படியொரு தொகுப்பைப் படித்துக் கொண்டிருக்கிறேன் மொத்தம் 25 சிறுகதைகள் (சிங்களமொழியிலிருந்து 8; தமிழிலிருந்து 7; ஆங்கிலத்திலிருந்து 10) தொகுக்கப்பட்டிருக்கின்றன. தொகுத்தவர் ராஜீவ் விஜேசின்ஹ. இவருக்கு இத்தொகுப்பை உருவாக்குவதற்குச் சிங்கள மொழிக் கதைகளுக்காக விஜிதா பெர்னாண்டோவும் தமிழ்க் கதைகளுக்காக விமரிசகர் கே.எஸ்.சிவக்குமரனும் உதவியிருக்கிறார்கள்.தமிழின் பிரதிநிதிகளாக டி.எஸ்.வரதராஜன், கே.சட்டநாதன், என். எஸ், எம்.ராமையா, செ.யோகநாதன், தாமரைச்செல்வி, ஐயாதுரை சாந்தன், ரஞ்சகுமார் ஆகியோரின் கதைகள் இடம்பெற்றுள்ளன.