இடுகைகள்

எளிய கவிதைகளின் இயக்கம்

ஆனந்தவிகடன் கவிதைகளை வெளியிடும் பக்கங்களுக்குச் சொல்வனம் எனப் பெயரிட்டுக் கொண்டிருக்கிறது. 16/3/16 தேதியிட்ட ஆ.வி.யில் சௌவி, ஆர்.ஜவஹர் பிரேம்குமார், ம.மகுடீசுவரன் ஆகிய 3 பேரின் கவிதைகள் அச்சாகியுள்ளன. இந்த மூன்று பேரின் 3 எழுத்து வரிகளும் கவிதையாக நினைக்கப்படும் காரணஙகள் என்னவாக இருக்கும்?

கடந்து வந்த 20 வருடங்கள்: நிகழ்வுகளும் நினைவுகளும்

படம்
கடந்த காலத்தை நினைத்துக் கொள்வது, எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு ஒருவழி. தனிமனிதர்கள் தங்கள் மனத்திற்குள் செயல்படுத்தும் இந்தச் செயலை, நிறுவனங்கள் கூடிப்பேசி விவாதித்துச் செய்கின்றன. 1991 -ல் தொடங்கப்பட்ட மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஐந்து வருடங்களுக்குப் பிறகுதான் தமிழியல் துறை (1996) ஆரம்பிக்கப்பட்டது.

பண்பாட்டுக் கல்வி

படம்
  “நமது கல்வி புதியன படைக்கும் ஆற்றலை வளர்க்கவில்லை; மனப்பாடம் செய்வதையும் அதன் வழியாகத் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெறும் வழிமுறைகளையையும் தானே வளர்க்கிறது?”                                                             - இந்தக் கேள்வியைப் பேராசிரியர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் தமிழகம் வந்த போது கோவை நகரைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவர் கேட்டார்:  அதற்கு,   “ முதல் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள கல்வி முறையில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும்”     என்று பதிலளித்தார் பேராசிரியர்.

கல்வியுலகம் -படைப்புலகம் -நீண்ட விவாதம்

கல்வி நிறுவனங்களின் நிதியாண்டு முடிவு மார்ச் 31. அதற்குள் ஒதுக்கப்பெற்ற நிதியைக் கொண்டு கருத்தரங்கம், பயிலரங்கம், சொற்பொழிவுகள் என நடத்திக் காட்ட வேண்டும். அதன் பயன்பாடு மாணாக்கர்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என நினைப்பதைவிட நடத்தி முடிக்க வேண்டும்; நண்பர்களை அழைத்துவிட வேண்டும் என்ற ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதே பொதுப்போக்கு. அதிலிருந்து விலகிச் செல்லும் நபர்களும் உண்டு.