இடுகைகள்

கலைப்பாடங்களின் அழிவு

ஆங்கிலேயர்கள் வெளியேறிய பின்னும் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் கற்றுத்தந்த பாடங்கள் மூன்று பெரும் பிரிவுகளாகவே இருந்தன, இன்றளவும் கூடப் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் அறிவியல் புலம், சமூக அறிவியல் புலம், மொழிப்புலம் என மூன்று புலங்கள் தான் இருக்கின்றன.ஆனால் இம்மூன்று புலங்களும் பல்வேறு துறைகளைக் கண்டறிந்து வளர்ச்சி பெற்ற நிலையைத் தொண்ணூறுகள் வரை ஒவ்வொரு பல்கலைக்கழகங்களிலும் காண முடியும்,

தமிழ் வாழ்க்கை ஏன் தமிழ்ப் படத்தில் இல்லை

படம்
தமிழில் பெயர் வைத்தாலேயே தமிழ்ச் சினிமாவாக ஆகி விடும் என்று கருதிய தமிழக அரசின் நம்பிக்கையை மூட நம்பிக்கையாக ஆக்கியது தமிழ்த் திரையுலகம். ரோபோ என்ற பெயருக்குப் பதிலாக எந்திரன் என்றொரு பெயரைச் சூட்டி வரி விலக்குப் பெற்று கல்லாக் கட்டும் வல்லமை அவர்களிடம் உண்டு. சினிமா என்றாலே லாபம் ஈட்டும் தொழில் மட்டுமே என நினைக்கும் சினிமாத் தயாரிப்பாளர்களிடமிருந்து தமிழ் வாழ்வும், தமிழ் மண்ணும், தமிழ்ச் சமூகமும் தமிழ் மனமும் பதிவாகும் என எதிர்பார்ப்பது அதிகப்படியான ஆசை தான்.

பெரிய முள்ளை பதினோரு தடவை சுற்றிக் கொள்ளுங்கள்

படம்
‘ டாடா மோட்டார்ஸ் ’ சந்திரசேகர் காரில் என்னை அழைத்துப் போகவில்லை என்றால் இறகுப் பந்து ( ஷட்டில் ) விளையாடப் போயிருக்க மாட்டேன் .   வார்சாவுக்குப் போனதிலிருந்து ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் தவறாமல் போய்க் கொண்டிருக்கிறேன் . வீட்டிலிருந்து பத்துக் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் அந்த விளையாட்டு மைதானத்திற்கு நடந்து போக முடியாது . பஸ்ஸில் போவதென்றாலும் ஒரே பஸ்ஸில் போய்த் திரும்ப முடியாது .

குளியலறையில் குளிக்கக் கூடாது.

படம்
வார்சாவிற்குக் கிளம்புவதற்கு முன்பு செய்து முடிக்க வேண்டும் எனப் போட்ட பட்டியலில் பாபநாசம் கீழணைக் குளியலும் ஒன்று. திருநெல்வேலிக்குப் போன பிறகு ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று தடவை பாபநாசம் கீழணையில் குளித்து வருகிறேன். ஏதாவது வாய்ப்புக் கிடைத்தால் பாபநாசம் போய் விடவே எப்போதும் விரும்புவேன். திருநெல்வேலிக்கு வரும் நண்பர்கள், உறவினர்கள் விரும்புவது குற்றாலம் தான். ஆனால் குற்றாலம் எனக்கு அலுத்துப் போய்விட்டது. அந்தக் கூட்டத்திற்குள் நுழைந்து குளித்து வெளியேறுவதில் ஏற்படும் எந்தப் பிரச்சினையும் பாபநாசத்தில் இல்லை. கீழணைக்குளியலைப் பற்றிச் சொல்வதற்கு முன்னால் பாத்ரூமில் குளிக்கக் கூடாது என்ற தடையைச் சந்தித்ததைச் சொல்ல வேண்டும். வார்சாவிற்குப் போனவுடன் நாங்கள் சந்தித்த குளியல் அறைச் சம்பவம் சுவாரசியமானது. திருநெல்வேலியில் ஆத்திலும் அருவியிலும் குளிக்கும் வாய்ப்புகள் இருந்தாலும் தினசரிக் குளியல் என்னவோ வாளித்தண்ணீரை அள்ளி ஊற்றிக் குளிப்பதுதான். அதற்கு வார்சாவில் விடுதலை கிடைத்தது. கழிப்பறையோடு கூடிய குளியலறையில் ’பாத் டப்’ இருந்தது. வெந்நீரையும் தண்ணீரையும் நிரப்பிக் கொஞ்ச நேரம் மூச்சடக்கி