இடுகைகள்

சுதந்திரம் என்னும் பெருநெருப்பு

படம்
" எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு -நாம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சுசங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே - இதைத் தரணிக்கெல்லாமெடுத்து ஓதுவோமே ‘’என்று கவி பாரதி பாடிய சுதந்திரப் பள்ளு தேசத்திற்கான விடுதலையை மையப்படுத்தியது என்பதில் நமக்குச் சந்தேகம் இல்லை.

தொகுப்புப்பார்வை: தேடிப்படித்த நூல்கள்

படம்
 குறிப்பிட்ட வகையான  இலக்கியப் போக்கை அதன் தோற்றம், வளர்ச்சி, விரிவு, சிறப்புக் கூறுகள் என விவரித்து எழுதும் எழுத்துகள் இலக்கிய வரலாற்றின் ஒரு பகுதியாக அமைந்துவிடும். அப்படி அமைந்த  முக்கியமான  மூன்று நூல்கள் என இவற்றைச் சொல்லலாம். இவற்றைத்தேடிப் படித்ததோடு பத்திரமாகவும் வைத்துள்ளேன். அவ்வப்போது பார்த்துக்கொள்ள வேண்டிய பார்வை நூல்கள் இவை.

களவு போகும் கொண்டாட்டங்கள்

பரம வைரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன- இந்த மரபுத்தொடரை கிரிக்கெட் பற்றி இந்தியப் பத்திரிகைகளில் எழுதும் செய்தியாளர்களும், கட்டுரையாளர் களும் தொடர்ந்து பயன் படுத்த முடியாது. அர்த்தமிழந்த வாக்கியங்களை, அபத்த வாக்கியங்கள் என்று தெரிந்து கொள்ளாமல் பயன்படுத்துபவர்களைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. இந்த வாக்கியத்திற்கான அர்த்தத்தை நூறு சதவீதம் காலியாக்கி விட்டன சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல்.இருபதுக்கு/20 போட்டிகள்.

அங்கீகாரத்தின் அளவுகோல்

படம்
கிணற்றிலிருந்து வாளியில் நீரிறைத்து பாத்திரத்தில் ஊற்றும் சலசலப்பு ஓசையுடன் தொடங்கி , அரிதாரத்தெ பூசிக்கொள்ள ஆசை.. நான்.. அடவு கட்டி ஆட்டம் போட ஆசை .. என்ற வரிகளாக விரியும் அந்தத் திரைப்படப் பாடலை நான் திரும்பத் திரும்பக் கேட்பதுண்டு. இசையமைப்பாளர் இளையராஜா மன விருப்பத்துடன் இசை அமைத்த படங்களுள் ஒன்றான அவதாரம் படத்தில் இடம் பெற்றுள்ள இந்தப் பாடல் செவி நுகர்கனிகளில் ஒன்று. இந்தப் பாடல் என்று இல்லை; அந்தப் படத்தின் எல்லாப் பாடல்களுமே திரும்பத் திரும்பக் கேட்கத்தக்க பாடல்கள் என்பது எனது கணிப்பு. இசையின் கோலங்களைப் பல வண்ணங்களில் தீட்டிப் பார்த்த கலைஞனின் வெளிப்பாடு என்று கூடச் சொல்லலாம். ஏதாவது சிக்கலில் மனம் அலையும் போதெல்லாம் அந்தப் படத்தின் பாடல்களைப் போட்டுக் கேட்டுக் கொண்டிருப்பது எனது வாடிக்கை.