விஜய் டெண்டுல்கர்
. மராத்தியக் கலை இலக்கியத்தின் நவீன அடையாளமாகவும் முத்திரைப்பெயராகவும் இருந்து வந்த விஜய் டெண்டுல்கர் எண்பதாவது வயதில்(ஜனவரி, 6, 1928 -மே,19, 2008) இறந்து விட்டார் என்ற செய்தி மராத்தி மொழியைப் பேசும் கூட்டத்திற்கு மட்டுமே வருத்தமான செய்தி அல்ல. நவீன இந்திய நாடகத்தின் பரப்பைத் தனது வெளியாகக் கருதிய ஒவ்வொருவருக்கும் வருத்தமான செய்திதான்.