இடுகைகள்

பிப்ரவரி, 2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பரபரப்பின் விளைவுகள்

வாழ்க்கையின் திருப்புமுனை ஒவ்வொருவருக்கும் எப்படி வந்து சேரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. தற்செயலாக நடந்த ஒரு வினையோ அல்லது சொன்ன ஒரு வாக்கியமோ கூட ஒருவரைப் பிரபலமாக்கி விடும். அதன் மூலம் அவரது வாழ்க்கை ஓட்டம் பெரிய திருப்பத்தில் பயணமாகி விடும். ஏற்படும் திருப்பம் ஒரு மனிதனை என்னவாக மாற்றும் என்பதை அதற்குப் பிந்திய வாழ்க்கை தான் வெளிச்சம் போட்டுக் காட்டும். இதற்குப் பல உதாரணங்களை உலக அளவிலும் காட்ட முடியும்; தமிழக அளவிலும் சொல்ல முடியும்.

வரலாற்றின் சுவடுகள்

2008, ஜூலை, 22.-‘ இந்த நாள் இனிய நாள் ’ என்று ஒவ்வொரு நாளையும் தொடங்கி, எந்த வம்புதும்பு களுக்கும் போகாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று வாழ்வதாகச் சொல்லிக் கொள்ளும் தனி மனிதர்களின் வாழ்க்கை சரித்திரத்தில் இந்தத் தேதியும் ஒரு நாள் தான். ஆனால் இந்திய தேசத்தின் வரலாற்றில் இந்தத் தேதியை அப்படிக் குறித்துவிட்டு இனிப் போக முடியாது .