February 17, 2012

கவி இந்திரன்: மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடெமி விருது


       
உலக மொழிகளிலும், இந்திய மொழிகளிலும் எழுதப்படும் கவிதைகளை வாசிப்பதின் வழி யாகத் தமிழ்க் கவிதை மொழியை வளப்படத்த முடியும் என்ற நம்பிக்கை கொண்டு இயங்குபவர் இந்திரன்.அவருக்குச் சாகித்ய அகாடெமி, மொழி பெயர்ப்புக்கான விருதை வழங்கி அங்கீகரித்துள்ளது. விருதுபெற்ற இந்திரனும் விருதை வழங்கிய அகாடெமியின் தேர்வுக் குழுவினரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

February 10, 2012

ஹெப்ஸிபா ஜேசுதாசனின் படைப்புலகமும் கருத்துலகமும்


  • ஒரு நாவலாசிரியரின் ஒட்டுமொத்த படைப்புகளையும் வாசித்து முடித்துவிட்டு திறனாய்வுக்கட்டுரை எழுத நினைத்த போது முதலில் தெரிவு செய்த நாவலாசிரியர் ஹெப்சிபா. இந்தக் கட்டுரையைப் படித்த பலர் என்னைப் பாராட்டினார்கள். ஹெப்சிபாவே அப்போது வந்த திணை இதழின் நேர்காணலில் இந்தக் கட்டுரையின் கருத்தை ஏற்றுச் சில கேள்விகளுக்குப் பதில் சொல்லி இருந்தார்.  22 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய இந்தக் கட்டுரையை அவரது இறப்பை ஒட்டி வலைப்பூவில் ஏற்றிக் காணிக்கை ஆக்குகிறேன்.

February 09, 2012

பூமணியின் வெக்கை : தமிழ் நாட்டுக் கிராமங்களின் தகிப்பு


1960- களுக்குப் பின்பு எழுதத் தொடங்கிக் குறிப்பிடத்தக்க நாவலாசிரியர்களாக அறியப்படும் பலரும் அவர்களின் முதல் நாவலின் வழியாகவே திரும்பத் திரும்ப அடையாளப்படுத்தப் படுகிறார்கள். பூமணியும் அதற்கு விலக்கில்லை அவரது முதல் நாவலான பிறகுவோடு சேர்த்தே அடையாளம் காணப்படுகிறார். வட்டாரம் சார்ந்த எழுத்தாளர்களாக அறியப் படும் பலரும் அத்தகைய அடையாளம் பெறாமல் தப்பிக்க முடியாது.